Google search engine
கலைவாணர் அரங்கம் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பித்து நிறுவப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டில் பிறந்தார். சுடலை முத்துப் பிள்ளைகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும். தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடக தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்ற புகழுடன் விளங்கியவர். அண்ணா,...
அறநிலை​யத் துறை சார்​பில் கன்​னி​யாகுமரி, புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர் அரண்​மனை தேவஸ்​தான கோயில்​களின் நிர்​வாகம், பராமரிப்பு செல​வுக்​கான அரசு மானியத்தை சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகளிடம் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று வழங்​கி​னார். அந்த வகையில், உயர்த்​தப்​பட்ட அரசு மானி​யம் ரூ.18 கோடிக்​கான காசோலையை சுசீந்​திரம் - கன்​னி​யாகுமரி தேவஸ்​தான கோயில்​கள் இணை ஆணை​யர் ஜான்​சி​ராணி​யிட​மும், அரசு மானி​யம் ரூ.10 கோடிக்​கான காசோலையை புதுக்​கோட்டை மாவட்ட கோயில்​களின் தக்​கார் ரஞ்​சி​தா​விட​மும், அரசு மானி​யம்...
தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து தமிழகம் முழுவதும் பிப்.9-ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் விபத்து இடத்துக்கு வருவதற்கு முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான பயிற்சியை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வழங்க உள்ளது. இந்த பயிற்சி தமிழகம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு நிலையங்களிலும், பள்ளி, அடுக்குமாடி...
ரூ.13 கோடியே 62 லட்​சம் செல​வில் கோவளம் உள்​ளிட்ட 11 ஊரக குடி​யிருப்​பு​களுக்கு கூட்டு குடிநீர் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்​தார். கோவளம் ஊராட்சி மற்​றும் 10 ஊரகக் குடி​யிருப்புபகு​தி​களுக்கு ரூ.13 கோடியே 62 லட்​சம் மதிப்​பில் உயிர் நீர் இயக்​கம் மற்​றும் மாநில அரசு ஆகிய​வற்​றின் பங்​களிப்​புடன் கூட்டு குடிநீர் திட்​டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது. இதற்​காக புதுப்​பாக்​கம் கிராமத்​தில் 5 திறந்​தவெளி...
கேரளாவில் தந்தையின் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், தாம்பரத்தில் தங்கியுள்ள அவரது மகளான கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. கேரளா மாநிலத்தில், நெடும்பரம்பில் கிரெடிட் சிண்டி கேட் என்ற நிதி நிறுவனம், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்குவதாக விளம்பரம் செய்து, ஏராளமான முதலீட்டாளர்களிடம் பணம் திரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், வட்டித் தொகையையும், முதலீடு செய்த தொகையையும் திருப்பி வழங்காமல், பொதுமக்களை ஏமாற்றிய தாக...
நீல​கிரி மாவட்​டம் கோத்தகிரியில் செயல்​படும் தனி​யார் பள்​ளி​யில் நேபாளத்தை சேர்ந்த ஜனக் என்​பவர் இரவு நேரக் காவலா​ளி​யாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பகதூர் (25) பெங்​களூரு​வில் உள்ள தகவல் தொழில் ​நுட்ப (ஐ.டி.) நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், விடு​முறைக்​காக கோத்தகிரிக்கு வந்த பகதூர் நேற்று முன்​தினம் இரவு வளர்ப்பு நாயுடன் வெளியே சென்​றார். சில மணி நேரங்​கள் கழித்து நாய் மட்​டும் வீடு திரும்​பியது. இதனால் அதிர்ச்​சி​யடைந்த உறவினர்​கள்...
செய்​தி​யாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டியை கைது செய்ய வேண்​டும் என்று அன்​புமணி, அண்​ணா​மலை, விஜய் ஆகியோர் வலியுறுத்​தி​உள்ளனர். கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரம் பகு​தி​யில் விதி​களுக்​குப் புறம்​பாக செயல்​பட்ட கல்​கு​வாரி குறித்து செய்தி சேகரிக்​கச் சென்ற தனி​யார் செய்தி தொலைக்​காட்சி செய்​தி​யாளர், ஒளிப்​ப​தி​வாளர் மீது, எம்​எல்ஏ பழனி​யாண்டி மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் சரமாரி​யாகத் தாக்​கிய​தாக புகார்​கள் எழுந்​தன. இது தொடர்​பான வீடியோ வெளி​யாகி பெரும் பரபரப்பை...
கலை​வாணர் அரங்க வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள கலை​வாணர் என்​.எஸ்​.கிருஷ்ணன் புதுப்​பிக்​கப்​பட்ட சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று திறந்​து​வைக்​கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நாகர்​கோ​வில் சுடலை​முத்து கிருஷ்ணன் ஆகிய ‘என்​.எஸ்​.கே’ 1908-ம் ஆண்டு பிறந்​தார். 1940, 1950-களி​ல் தமிழ்த் திரை​யுல​கின் மிகச் சிறந்த நகைச்​சுவை நடிகர், பாடகர், நாடகத் தயாரிப்​பாளர், சினிமா தயாரிப்​பாளர் என்​றெல்​லாம் புகழுடன் விளங்​கிய​வர். ஜி.என்​.செட்டி சாலை - திரு​மலைப் பிள்ளை சாலை சந்​திப்​பில் அண்​ணா​வால் திறக்​கப்​பட்ட கலை​வாணர்...
ஓய்​வு​பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரும், மூத்த கல்​வி​யாள​ரு​மான எஸ்​.எஸ்​.​ராஜகோ​பாலன் (95) வயது மூப்பு மற்​றும் உடல்​நலக்​குறைவு காரணா​மாக, சென்னை, கோடம்​பாக்​கத்​தில் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், சிகிச்சை பலன் அளிக்​காமல் நேற்று முன்​தினம் கால​மா​னார். ராஜகோ​பாலனின் விருப்​பப்​படி அவரது உடல் மருத்​துவ ஆராய்ச்​சிக்​காக போரூர் ராமச்​சந்​திரா மருத்​து​வக் கல்​லூரி​யில் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டது. முன்​ன​தாக, அவரது உடலுக்கு மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ. சண்​முகம், மத்​திய...
சூரியக் கட்சியில் இருக்கலாம், சூப்பர் ஹீரோ கட்சியுடன் பேசலாம் என கதர் கட்சிக்குள் இரண்டு ‘கட்சிகள்’ கச்சைகட்டி ஆடும் நிலையில், சத்தமில்லாமல் இன்னொரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறாராம் கதர் கட்சியின் ‘வெல்த்’ தலைவர். சூரியக் கட்சியால் சில பல சகாயங்களை பெற்றுவரும் அவருக்கு அத்தனையும் விட்டுவிட்டு அந்த முகாமை விட்டு மாற்று முகாம் நோக்கிச் செல்வதற்கு மனம் வரவில்லையாம். அதனால், முடிந்தவரைக்கும் சூரிய கட்சி கூட்டணியிலேயே நீடிப்பதற்கான அத்தனை வேலைகளையும்...