சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் ‘இளஞ் சிவப்பு ஆட்டோக்கள்’ (பிங்க் ஆட்டோக்கள்) வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 பயனாளிகளுக்கு, கடந்த 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கினார்.
2-ம் கட்டமாக தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற, சென்னையை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சென்னை மாவட்ட சமூகநல அலுவலர், 8-வது...
ஆட்டோ தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்காவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்: சிஐடியு கூட்டமைப்பு சங்கங்கள்
admin - 0
ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என சிஐடியு கூட்டமைப்பு சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மூன்று அணிகளாக சென்னையில் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே நடைபெற்ற கண்டன போராட்டத்தில்...
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்பட உள்ள ஏசி மின்சார ரயிலுக்கு 12 நிறுத்தங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு ரயில்வேக்காக 2 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
இதன்பேரில், முதல் ஏசி மின்சார ரயில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டு,...
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 6 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
admin - 0
கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் 26-ம் தேதி வரை சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், நாளை (மார்ச் 21) முதல் 26-ம் தேதி வரை அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர்...
போக்குவரத்து நெரிசல் காரணமாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் அருண் உத்தரவு
admin - 0
போக்குவரத்து நெரிசல் காரணமாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த காவல் ஆணையர் அருண் தடை விதித்துள்ளார். சென்னையில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த சைதாப்பேட்டை பனகல் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட சில இடங்களில் போலீஸார் அனுமதி அளித்து வருகின்றனர்.
அதன்படி, சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில், அடிக்கடி போராட்டம் நடைபெறும். இதனால்...
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரி போராட்டம்
admin - 0
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்கக்கோரி அரசு மருத்துவர்கள் சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு சார்பில் தர்ணா போராட்டம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் நேற்று நடைபெற்றது.
சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் மருத்துவர்...
‘எங்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள்..!’ – அரசை நம்பி பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை
admin - 0
“அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி பி.எட் படித்த நாங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் கண்ணீராகி நிற்கிறோம்” என வெதும்புகிறார்கள் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள். மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் பயிற்றுவிப்பதற்காக ஐசிடி (இன்ஃபர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) என்ற பாடத்திட்டத்தை அமல்படுத்தி, கம்பியூட்டர் லேப் அமைக்கவும், பயிற்றுநர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கி வருகிறது.
அதன்படி தமிழகத்துக்கு...
திமுக-வில் மாவட்ட வாரியாக உதயநிதி ஆதரவாளர்களின் கை மெல்ல மெல்ல ஓங்கி வருவதால் சீனியர்கள் எல்லாம் ஜெர்க் ஆகி வருகிறார்கள். அந்த வகையில், ஈரோடு மாவட்ட திமுக-வின் அதிகார மையாக இருந்து வரும் அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்களையும் இந்த அச்சம் சூழ்ந்துள்ளது.
ஈரோடு முத்துசாமிக்கு 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட திமுக வாய்ப்பளித்தது. இருமுறையும் தோற்றுப்போன முத்துசாமி, 2021 தேர்தலில், விட்ட இடத்தைப் பிடித்து அமைச்சரவையிலும் அங்கமானார். அதன்...
தேர்தலில் நீங்கள் தனித்து நில்லுங்கள் பார்ப்போம்: பேரவையில் திமுகவினரை பார்த்து செல்லூர் ராஜூ சவால்
admin - 0
கடந்த 2016 தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றது அதிமுக. நீங்கள் நில்லுங்கள் பார்ப்போம் என்று சட்டப்பேரவையில் முனனாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திமுகவினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோளையும், கோட்பாட்டையும் நிறைவேற்றுவதாக இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒன்று கூட என் கண்ணுக்கு தெரியவில்லை. கலைஞர்...
தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மார்ச்...










