டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் டாக்டர் உமர் முகமது 3 மணி நேரம் காரை விட்டு இறங்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்க செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
குறிப்பாக, பரிதாபாத்தில்...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்கள் எல்என்ஜேபி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தார் நேற்று காலை முதல் மருத்துவமனை வாயிலில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். மருத்துவமனையிலுள்ள சவக்கிடங்குக்கு அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான போலீஸாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டிருந்தனர். உயிரிழந்தோரின் உடல்கள் எப்போது தங்களுக்குக் கிடைக்கும் என்ற தகவலுக்காக மருத்துவமனையில் அவர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
சவக்கிடங்கில் பணியாற்றும் மருத்துவமனை...
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பயங்கர அதிர்வை உணர்ந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சாந்தினி சவுக் பகுதியில் பேக் விற்பனை செய்யும் கரம்ஜோத் கூறுகையில், “செங்கோட்டை பகுதியிலிருந்து பலர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும் பீதி தெரிந்தது. நானும் பாதுகாப்புக்காக குருத்வாராவை நோக்கி ஓடி உயிர்தப்பினேன்’’ என்றார்.இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த ஜெயின் மந்திர் அருகே வசிக்கும் 45 வயதான கர்மயதா...
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்த 5 ஆண்களைச் சேர்ந்த 5 குடும்பங்களின் எதிர்காலக் கனவுகள் கலைந்து போய்விட்டது. இறந்தவர்களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்கஜ் சைனியும்(22) ஒருவர். இவர்...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில், டெண்டர் மூலம் கலப்பட நெய் வாங்கியது தொடர்பாக சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள போலேபாபா ஆர்கானிக் டெய்ரி நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு அவர்கள் ரூ.250 கோடிக்கு 68 லட்சம் கிலோ நெய்யை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், 2022-ல் இவர்கள் விநியோகம் செய்த நெய் தரமற்றதாக உள்ளதாக அப்போதைய அறங்காவல்...
ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியின் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ மாகண்டி கோபிநாத் மரணம் அடைந்ததால் இந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
4.01 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் மொத்தம் 58 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் பிஆர்எஸ் வேட்பாளர் மாகண்டி சுனிதா (இவர் மறைந்த பிஆர்எஸ் எம்எல்ஏ மாகண்டி கோபிநாத்தின் மனைவி), காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ், பாஜக வேட்பாளர் தீபக் ரெட்டி ஆகியோர் இடையில்தான் மும்முனைப்...
மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்
admin - 0
தாய்லாந்து - மியான்மர் எல்லையில் சைபர் மோசடி மையங்கள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து சர்வதேச அளவில் அனைத்து விதமான சைபர் மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வெளிநாட்டு வேலை என கூறி தாய்லாந்து அழைத்து வரப்படுபவர்களை மியான்மர் எல்லையில் உள்ள சைபர் மோசடி மையங்களில் சீனாவை சேர்ந்த கும்பல் வலுக்கட்டாயமாக பணியமர்த்துகிறது. இந்த கும்பலிடம் சிக்கியவர்கள் எளிதில் தப்பிக்க முடியாது.
இந்நிலையில் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தையடுத்து,...
உ.பி.யில் பள்ளி, கல்லூரிகளில் ‘வந்தே மாதரம்' தேசிய பாடலை பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யின் கோரக்பூரில் தேசிய ஒற்றுமை தின பேரணி நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது:
சர்தார் வல்லபபாய் படேல், நமது விவாதங்களின் ஒரு பகுதியாக மாற வேண்டும். உ.பி. முழுவதும் உள்ள பள்ளி,...
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நாரி சக்தி வந்தன் மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் இதுவரை...
ஆந்திர மாநிலம், குண்டூரை அடுத்த பாபட்லா மாவட்டம், கர்மசேது எனும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்யலட்சுமி எனும் ராஜி (23).
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ராஜி காய்ச்சல், இருமல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 7-ம் தேதி காலையில் அவர் படுக்கையில் இருந்து எழாததால் தோழிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், ராஜி இரவு...










