Google search engine
பிஹாரில் ஜன் சுராஜ் வேட்​பாளர்​கள் 3 பேர் தங்​கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்​றுள்​ளனர். இதற்கு பாஜக.,​வின் அச்​சுறுத்​தல் காரணம் என ஜன் சுராஜ் கட்​சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். பிஹார் சட்​டப் பேரவை தேர்​தல் அடுத்த மாதம் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் ஜன் சுராஜ் கட்​சி​யின் 3 வேட்​பாளர்​கள் முதுர் ஷா, சத்ய பிர​காஷ் திவாரி, சசி சேகர்...
மகாராஷ்டிர மாநிலம் புனே​வின் சனி​வார் வாடா​வில் வரலாற்று சிறப்​புமிக்க பேஷ்​வா​வின் கோட்டை அமைந்​துள்​ளது. இதனுள் முஸ்​லிம் பெண்​கள் தொழுகை நடத்​தும் வீடியோ கடந்த ஞாயிறு அன்று வெளி​யானது. புனே​வின் பாஜக மாநிலங்​களவை உறுப்​பினர் மேதா குல்​கர்னி தனது சமூக ஊடகப் பக்​கத்​தில் இந்த வீடியோவை பதிவேற்​றம் செய்​திருந்​தார். வரலாற்று பாரம்​பரி​யம் அவம​திக்​கப்​பட்டு விட்​ட​தாக​வும் குறிப்​பிட்​டு, போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்​தார். சனி​வார் வாடா வளாகத்​தின், பிரார்த்​தனை தளத்​தில் கோமி​யம் மற்​றும் பசுஞ் சாணம்...
திருப்​பதி மற்​றும் திரு​மலை​யில் கடந்த 3 நாட்​களாக ஓயாமல் மழை பெய்து வரு​கிறது. இதனால் வெளியூர்​களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய திரு​மலைக்கு வந்த பக்​தர்​கள் அறை​களி​லேயே தங்க வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. இரண்​டாவது மலைப்​பாதை​யில் 15-வது வளை​வில் நிலச்​சரிவு ஏற்​பட்​டு, பாறை​கள் சாலை​யில் வந்து விழுந்​தன. எனினும் இதில் அசம்​பா​விதம் ஏதும் ஏற்​பட​வில்​லை. இந்த நிலச்​சரி​வால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​ட​தால் வாகன ஓட்​டிகள் அவதி​யுற்​றனர்.
சொத்​துக்​காக தந்​தை​யின் சடலத்தை அடக்​கம் செய்ய விடா​மல் தடுக்​கும் மகனால், 3 நாட்​களாக தந்​தை​யின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதை​யாய் கிடக்​கிறது. ஆந்​திர மாநிலம், பல்​நாடு மாவட்​டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவ​சாயி ஆஞ்​சநே​யுலு (85). இவர் கூலி வேலை செய்​து, 20 ஏக்​கர் விவ​சாய நிலத்தை வாங்கி அதில் விவ​சா​யம் செய்து வந்​துள்​ளார். கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் ஆஞ்​சநேயலு​வின் மனைவி உடல்நலம் குன்றி மரணமடைந்​தார். இவருக்கு நாகேஸ்வர...
சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட நாட்களில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பல ஆண்டுகளாக இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். என்றாலும் எல்லையில் பதற்றம் ஏற்பட்டால் இந்த இனிப்பு பரிமாற்றம் ரத்து செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ...
டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்காக இனிப்புகள் வாங்க அங்கு சென்ற ராகுல் காந்தி தன் கையாலேயே சில இனிப்பு வகைகள் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்டேவாலா...
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது மருந்துத்...
 இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் ஐஎன்எஸ் விக்ராந்த்தில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 143 வேட்பாளர்களின் பட்டியலை பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) வெளியிட்டுள்ளது. ஆர்ஜேடி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அக்கட்சியின் இளம் தலைவரும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ரேணு குஷ்வாஹா, பிஹாரிகஞ்ச் தொகுதியிலும், அருண் குப்தா பர்ஹாரியா தொகுதியிலும் விஷால் ஜெய்ஸ்வால் மகாராஜ்கஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு...
மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக அறிவித்துள்ளதன் மூலம் சிபிஎம் - பாஜக கூட்டு அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சன்னி ஜோசப், "மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் இணைவது என்ற கேரள அரசின் முடிவு, ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்பதற்கான சான்றாகும். சிபிஎம்...