Google search engine
டெல்​லி​யில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்​டாவுக்கு சொகுசு பேருந்து நேற்​று ​முன்​தினம் இரவு புறப்​பட்​டது. உ.பி. தலைநகர் லக்னோ வழி​யாக அந்​தப் பேருந்து சென்று கொண்​டிருந்​தது. இரண்டு அடுக்​கு படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசு பேருந்​தில் 70 பயணி​கள் இருந்​தனர். ஆக்ரா - லக்னோ தேசிய எக்​ஸ்​பிரஸ் நெடுஞ்​சாலை​யில் ரேவ்ரி பகு​தி​யில் உள்ள சுங்கச் ​சாவடி அருகே நேற்று அதி​காலை பேருந்து சென்றபோது திடீரென தீப்​பிடித்​தது. உடனடி​யாக...
இந்​தி நடிகர் சல்​மான் கான் தீவிர​வாதியாம் என பாகிஸ்​தான் அரசு கூறியுள்​ளது. சவுதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் இந்தி நடிகர்​கள் சல்​மான் கான், ஷாருக் கான், அமீர் கான் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் சல்​மான் கான் பேசும்​போது, “இப்​போது, இந்தி திரைப்​படத்தை இங்கு வெளி​யிட்​டால் அது சூப்​பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்​லது மலை​யாள திரைப்​படம் வெளி​யிட்​டாலும் பல நூறு கோடி வசூலாகும்....
இண்​டிகோ ஏர்​லைன்ஸ் நிறு​வனத்​துக்கு சொந்​த​மான பயணி​கள் விமானம் கொல்​கத்​தா​வில் இருந்து நேற்று ஸ்ரீநகருக்கு புறப்​பட்​டது. இ​தில் 166 பேர் பயணித்​தனர். உ.பி. எல்​லை​யில் விமானம் பறந்​த​போது எரிபொருள் டேங்​கில் கசிவு ஏற்​பட்​டிருப்​பதை விமானிகள் கண்​டறிந்தனர். உடனடி​யாக வாராணசி விமான நிலைய கட்​டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தெரி​வித்​தனர். இதைத் தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு வாராணசியில் விமானம் தரை​யிறக்​கப்​பட்​டது.
கொல்கத்தாவில் தீபாவளி நாளில் பட்டாசு சத்தம் மற்றும் புகையில் இருந்து தப்பிக்க தெரு நாய் ஒன்று மெட்ரோ ரயிலில் தஞ்சம் புகுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் தெரு நாய் ஒன்று ப்ளூலைன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதும், அது ஓய்வெடுக்க அமைதியான இடம் தேடி ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதும் தெரிகிறது. எதிர்பாராத இந்தப் பயணியை கண்டதும் ரயில் பயணிகள்...
பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகள், 11 தொகு​தி​களில் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிடு​கின்​றனர். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வை தேர்​தலில் 2-வது மற்​றும் கடைசி கட்ட தேர்​தலில் போட்​டி​யிட வேட்பு மனு தாக்​கல் கடந்த 20-ம் தேதி​யுடன் முடிந்​தது. அப்​போது, 11 தொகு​தி​களில் இண்​டியா கூட்​டணி கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிட வேட்பு மனு தாக்​கல் செய்​துள்​ளனர். இதனால் இண்​டியா...
ஹரியாணாவின் சோனிபட் மாவட்டம், கனவுர் பகுதியில் பிரபல நிறுவனம் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. எனினும் அனைத்து ஊழியர்களுக்கும் சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பரிசாக சோன் பப்டி இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தின் வாயிலில் இனிப்பு பெட்டிகளை வீசி எறிந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நிறுவனத்தின் தொழிலாளர்கள் கூறும்போது, “தீபாவளி போனஸ் வழங்குவதாக நிர்வாகம்...
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் மோகானியா தொகுதி ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லியில் இருந்து தேர்தல் அலுவலர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் இம்முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நான் நிச்சயமாக நீதிமன்றம் செல்வேன்’’ என்றார். அப்போது...
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு பொருளை நீங்கள் வாங்கும்போதும் அதில் ஹலால் சான்றிதழ் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சோப், துணிகள், தீப்பெட்டிகள் உள்ளிட்ட பல பொருட்கள் ஹலால் சான்றிதழ்களுடன் தற்போது வருகின்றன. இவ்வாறு வரும் பொருட்களின் விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடியை திரட்டி...
மாதாந்​திர பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​ல் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்​கப்​பட்​டது. மறு​நாள் முதல் கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்​ளிட்ட பல்​வேறு தொடர் வழி​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு இன்று சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் தரிசனம் செய்ய உள்​ளார். இதற்​காக நேற்று பிற்​பகலில் இருந்தே பக்​தர்​களின் வருகை கட்​டுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கனமழை தொடர்ந்​த​தால் குறை​வான பக்​தர்​களே நேற்று சுவாமி தரிசனத்​துக்கு வந்​திருந்​தனர். இதனால்...
கேரளா​வில் உள்ள குரு​வாயூர் கோயிலுக்கு சொந்​த​மாக தங்​கம், வெள்ளி ஆபரணங்​கள், பாத்​திரங்​கள், தந்​தம், பக்​தர்​கள் காணிக்​கை​யாக அளிக்​கும் பொருட்​கள் அதி​கள​வில் உள்​ளன. ஆனால், இந்த பொக்​கிஷங்​களுக்​கான ஆவணங்​கள் சரி​யாக பராமரிக்​கப்​ப​டாத​தால், முறை​கேடு​களுக்​கான வாய்ப்பு அதி​கம் உள்​ளது என குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் தணிக்கை அறிக்கை மூலம் தெரிய​வந்​துள்​ளது. குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் புன்​னத்​தூர் கோட்டா சரணால​யத்​தில் கடந்த 2019-20-ம் ஆண்டு அறிக்​கை​யில் 522.86 கிலோ தந்​தம் மற்​றும் தந்​தப் பொருட்​கள்...