டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவுக்கு சொகுசு பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. உ.பி. தலைநகர் லக்னோ வழியாக அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசு பேருந்தில் 70 பயணிகள் இருந்தனர்.
ஆக்ரா - லக்னோ தேசிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ரேவ்ரி பகுதியில் உள்ள சுங்கச் சாவடி அருகே நேற்று அதிகாலை பேருந்து சென்றபோது திடீரென தீப்பிடித்தது. உடனடியாக...
இந்தி நடிகர் சல்மான் கான் தீவிரவாதியாம் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சல்மான் கான் பேசும்போது, “இப்போது, இந்தி திரைப்படத்தை இங்கு வெளியிட்டால் அது சூப்பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படம் வெளியிட்டாலும் பல நூறு கோடி வசூலாகும்....
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் கொல்கத்தாவில் இருந்து நேற்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டது. இதில் 166 பேர் பயணித்தனர்.
உ.பி. எல்லையில் விமானம் பறந்தபோது எரிபொருள் டேங்கில் கசிவு ஏற்பட்டிருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். உடனடியாக வாராணசி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாலை 4.10 மணிக்கு வாராணசியில் விமானம் தரையிறக்கப்பட்டது.
கொல்கத்தாவில் தீபாவளி நாளில் பட்டாசு சத்தம் மற்றும் புகையில் இருந்து தப்பிக்க தெரு நாய் ஒன்று மெட்ரோ ரயிலில் தஞ்சம் புகுந்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் தெரு நாய் ஒன்று ப்ளூலைன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதும், அது ஓய்வெடுக்க அமைதியான இடம் தேடி ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதும் தெரிகிறது. எதிர்பாராத இந்தப் பயணியை கண்டதும் ரயில் பயணிகள்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் 11 தொகுதிகளில் எதிரெதிர் போட்டி
admin - 0
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள், 11 தொகுதிகளில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 2-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதியுடன் முடிந்தது. அப்போது, 11 தொகுதிகளில் இண்டியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் இண்டியா...
ஹரியாணாவின் சோனிபட் மாவட்டம், கனவுர் பகுதியில் பிரபல நிறுவனம் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை.
எனினும் அனைத்து ஊழியர்களுக்கும் சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பரிசாக சோன் பப்டி இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தின் வாயிலில் இனிப்பு பெட்டிகளை வீசி எறிந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் தொழிலாளர்கள் கூறும்போது, “தீபாவளி போனஸ் வழங்குவதாக நிர்வாகம்...
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் மோகானியா தொகுதி ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லியில் இருந்து தேர்தல் அலுவலர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் இம்முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நான் நிச்சயமாக நீதிமன்றம் செல்வேன்’’ என்றார். அப்போது...
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு பொருளை நீங்கள் வாங்கும்போதும் அதில் ஹலால் சான்றிதழ் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சோப், துணிகள், தீப்பெட்டிகள் உள்ளிட்ட பல பொருட்கள் ஹலால் சான்றிதழ்களுடன் தற்போது வருகின்றன. இவ்வாறு வரும் பொருட்களின் விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடியை திரட்டி...
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு தொடர் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
இதற்காக நேற்று பிற்பகலில் இருந்தே பக்தர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்ததால் குறைவான பக்தர்களே நேற்று சுவாமி தரிசனத்துக்கு வந்திருந்தனர். இதனால்...
கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள், தந்தம், பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் பொருட்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், இந்த பொக்கிஷங்களுக்கான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாததால், முறைகேடுகளுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என குருவாயூர் தேவசம் வாரியத்தின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
குருவாயூர் தேவசம் வாரியத்தின் புன்னத்தூர் கோட்டா சரணாலயத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டு அறிக்கையில் 522.86 கிலோ தந்தம் மற்றும் தந்தப் பொருட்கள்...










