மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆர்) உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பிற மாநிலங்களில் இருந்து நீதித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி, மால்டா மாவட்டத்தின் காலியாசக் மற்றும் மோதாபரி பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டிருந்த 7 நீதித்துறை அதிகாரிகளை சமூக விரோத கும்பல் ஒன்று சுற்றி வளைத்து சிறைபிடித்தது. இதில் மூன்று பெண் அதிகாரிகள் மற்றும் 5 வயது குழந்தையும் அடங்குவர். சுமார்...
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறுவதற்கான நடைமுறைகள் பலவீனமாக உள்ளன. இதனால் ஊடுருவல்காரர்கள் எளிதாக ஆதார் எண்ணை பெற்றுவிடுகின்றனர். இதை தடுக்க நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு மட்டுமே ஆதார் எண்ணை வழங்க வேண்டும். அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்படக்கூடாது.இவ்வாறு மனுவில் கோரப்பட்டு...
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து, கடந்த 2018-ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரிக்க தொடங்கியுள்ளது.
2-வது நாளான நேற்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மத வழக்கங்கள் மூட நம்பிக்கையா என்பதை நீதிமன்றங்கள்...
நாட்டில் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்பணையில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
நாட்டில் கடல் வழித்தடம் மற்றும் நீர்நிலைகள் அதிகளவில் உள்ளன. விமான நிலையம் அமைக்க முடியாத இடங்களில் கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ரிஷிகேஷில் வர்த்தக ரீதியாக கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்த ஸ்கைஹாப் ஏவியேஷன் என்ற நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்நிறுவனத்தின் கடல் விமானம் ரிஷிகேஷில்...
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய சிறப்புக் கட்டுரை இங்கே...
இந்தியா முழுவதும் பிஹு, விஷு, வைசாகி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு என விழாக் கோலம் பூண்டுள்ள இவ்வேளையில், மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில் புதுப்பித்தல் உணர்வு நம்மை நிரப்புவது போல, இந்திய ஜனநாயகம் ஒரு புதிய வரலாற்றுப் பாதையில் பயணிக்கத் தயாராகிவிட்டது. குறிப்பாக, ஏப்ரல் 11 அன்று மகாத்மா ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்தநாள்...
மேற்கு வங்க மக்கள் பல நூற்றாண்டுகளாக மீன் உணவுக்குப் பழகி விட்டனர். மேலும், காளி, துர்கா உள்ளிட்ட கடவுள்களுக்கும் மீன் உணவுகளைப் படைக்கின்றனர். அங்கு மீன் உணவை சைவமாகக் கருதி உண்ணும் பிராமணர்களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இது குறித்து, முதல்வர் மம்தா பிரச்சாரத்தில் பேசுகையில், "பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காள மக்களின் உணவுப் பண்பாடு, குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்தமான மீன்...
அசாமில் மாட்டிறைச்சி உண்பது குறித்த தனது நிலைப்பாட்டை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். என்றாலும் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கி விட்டதாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வா சர்மா, செய்தியாளர்களிடம் கூறுகையில், “முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். அதற்குத் தடை ஏதும் இல்லை. அசாமில் மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம் சமூகம் பெரிய அளவில் உள்ளது. அவர்களைச் சாப்பிட வேண்டாம்...
பாஜகவின் 47-வது நிறுவன தின கொண்டாட்டம்: குஜராத், உ.பி. உட்பட 21 மாநிலங்களில் பாஜக, என்டிஏ ஆட்சி
admin - 0
மத்தியில் ஆளும் பாஜகவின் 47-வது ஆண்டு தினம் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது 21 மாநிலங்களில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெறுகிறது.
கடந்த 1977-ம் ஆண்டில் அவசர நிலை பிரகடனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனசங்கம் ‘ஜனதா கட்சியுடன்' இணைந்தது. எனினும் சித்தாந்த ரீதியான வேறுபாடுகளின் காரணமாக, கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி 'பாரதிய ஜனதா கட்சி' உருவாக்கப்பட்டது. கடந்த...
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து மேற்கு...
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (28), சைக்கிளில் எவரெஸ்ட் அடிவார முகாம் (பேஸ் கேம்ப்) சென்றடைந்த முதல் இந்தியப் பெண் மற்றும் உலகின் 2வது பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 14 நாட்கள் கடினமான பயணத்துக்கு பிறகு 17,560 அடி உயரத்தில் உள்ள அடிவார முகாமை வெற்றிகரமாக சென்றடைந்தார். இந்தப் பயணத்தின்போது, அவர் மைனஸ் 12...










