ஜார்க்கண்ட் மாநிலத்தில் காணாமல்போன பயிற்சி விமானத்தை தேடும் பணி தொடரும் நிலையில் அதில் சென்ற பயிற்சி விமானி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் உள்ள சோனாரி விமான நிலையத்தில் இருந்து 2 இருக்கைகள் கொண்ட செஸ்னா-152 ரக பயிற்சி விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானியும் பயிற்சி விமானியும் இருந்தனர். இந்நிலையில் இந்த விமானம் காணாமல்போனது.இதையடுத்து விமானத்தை தேடும்...
விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண விரைவில் நிரந்தர குழு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றம் கருத்து
admin - 0
விவசாயிகளின் குறை தீர்க்க விரைவில் நிரந்தர கமிட்டி அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம்பஞ்சாப்-ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் முற்றுகையிட்ட விவசாயிகளை முடக்க ஷம்பு எல்லையை ஹரியாணா அரசு மூடியது....
வக்பு மசோதா நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டம்: பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி
admin - 0
வக்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
வக்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த மசோதாவுக்கு முஸ்லிம் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசுமுடிவு செய்தது. மசோதாவை ஆய்வு செய்ய மக்களவை பாஜக உறுப்பினர்...
13 ஆண்டுக்கு முன் விடுதி மாடியில் இருந்து விழுந்து செயலிழந்து போன மகனை கருணைக்கொலை செய்யக்கோரிய மனு நிராகரிப்பு
admin - 0
பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் விடுதியின் 4-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் 13 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, முற்றிலுமாக செயலிழந்துபோனார். மகனை காப்பாற்றும் முயற்சியில் பெற்றோர்அவரை மருத்துவமனையில் அனுமதித்து இடைவிடாது சிகிச்சை அளித்து வருகின்றனர். எத்தகைய பேச்சும், அசைவுமின்றி படுத்தப்படுக்கையாக இருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு ரைல்ஸ் குழாய் மூலம் மருத்துவமனையில்...
ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், ராம்பில்லி மண்டலம், அச்சுதாபுரம் எனும் ஊரில் ஒரு தனியார் பார்மா நிறுவனம் உள்ளது. இங்கு 3 ஷிப்ட்களில் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஷிப்டிலும் சுமார் 300 முதல் 380 பேர் வரை பணி புரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம்ஷிப்டின் போது, தொழிற்சாலைக்குள் இருந்த ரியாக்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டது. சுற்றுப்புற கிராமங்களுக்கும் இந்த...
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு தேர்தல்: 9 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தது பாஜக
admin - 0
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப்டம்பர்3-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருக்க வேண்டியது மிக முக்கியம். மாநிலங்களவையில் தற்போது உறுப்பினர்களின் மொத்தஎண்ணிக்கை 229-ஆக உள்ளது.இதில் பாஜகவுக்கு 87 எம்.பி.க்கள் உள்ளனர். தே.ஜ. கூட்டணி கட்சியினரை சேர்த்தால் இந்த எண்ணிக்கை 105 ஆகவும், 6 நியமனஎம்.பி.க்களின் ஆதரவை சேர்த்தால்தே.ஜ.கூட்டணியின் பலம்...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகாவாட் அணு உலை நேற்று முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கியது. இதுகுறித்து இந்திய அணு மின் சக்தி கழகம் (என்பிசிஎல்) வெளியிட்ட அறிக்கையில், “குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணு மின் நிலையத்தில் (கேஏபிஎஸ்) நிறுவப்பட்டுள்ள 4-வது அணு உலை முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கி உள்ளது. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகா வாட்அணு உலை ஆகும். முதல் 700...
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. ஜெகன், ஆந்திர முதல்வராக இருந்தபோது, அரசுப் பணிகள் காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார். இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனினும்...
சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும் நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு, கடந்த 18-ம் தேதி,10 இணை செயலாளர்கள் மற்றும்35 இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமன முறை (லேட்டரில் என்ட்ரி)மூலமாக பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த முடிவை...
மணிப்பூரின் காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களின் நாகா பழங்குடி கிராமங்களை நோனி மாவட்டத்துடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து மணிப்பூர் ரோங்மேய் நாகா கவுன்சில் 18-ம் தேதி போராட்டம் அறிவித்தது.
70 சிறுபான்மை நாகா பழங்குடியினர் வசித்து வரும் காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக நாகா மாவட்டத்துடன் சேர்க்கமாநில அரசு தவறியதால் காலவரையற்ற முழு அடைப்பு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தால் மணிப்பூரில் போக்குவரத்து...










