Google search engine
உத்தர பிரதேச மாநிலத்​தின் பரேலி​யில் ரூ.22 கோடியில் ‘ரா​மாயண் வாட்​டி​கா’ எனும் பெயரில் ஒரு புதிய அழகான பூங்கா 6 ஏக்கரில் அமைக்​கப்​படு​கிறது. இப்​பூங்​கா​வில் 51 அடி உயர ராமர் சிலை நிறு​வப்​படு​கிறது. உலகின் மிகப்​பெரிய குஜ​ராத்​தில் வல்​லப​பாய் படேல் சிலையை வடித்த பத்ம ஸ்ரீ ராம் சுத்​தார் இந்த சிலையை வடித்​துள்​ளார். ராமர் கடந்த சித்​ரகுட், கிஷ்கிந்​தா, துரோணகிரி உள்​ளிட்ட 6 வனப்​பகு​தி​களின் 60 சிற்​பக் காட்​சிகளும் பூங்​கா​வில்...
​நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்​கு​கிறது. வக்பு வாரிய திருத்​தம் உள்​ளிட்ட மசோ​தாக்​களை நிறைவேற்ற மத்​திய அரசு தீவிரம் காட்டி வரு​கிறது. மும்​மொழி கொள்​கை, மக்​களவை தொகுதி மறு​வரையறை, மணிப்​பூர் கலவரம் உட்பட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன. நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்​ர​வரி 13-ம் தேதி வரை நடை​பெற்​றது. முதல்...
மணிப்பூரின் சூரஜ்சந்த்பூர், கிழக்கு இம்ப்பால், காங்போக்பி ஆகிய 3 மாவட்டங்களில் காவல் நிலையங்களில் மேலும் 32 ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டன. மணிப்பூரில் குகி மற்றும் மைத்தேயி இனத்தவர் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் இனக்கலவரம் ஏற்பட்டு வந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டடோர் இறந்தனர். இந்த கலவரம் நீண்டகாலமாக தொடர்ந்து ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியதால் முதல்வர் பிரேன் சிங் கடந்த மாதம் 13-ம் தேதி...
பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு புலி நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்பிய ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் கருவரகுண்டு பகுதியை சேர்ந்தவர் ஜெரின் ஆப்ரகாம் (36). இவர் தங்கள் பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்துக்கு அருகில் புலி ஒன்றை பார்த்ததாக வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பிறகு செய்தி சேனல்களிலும் வெளியானதை தொடர்ந்து பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கு...
அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகததால் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு லக்னோவில் உள்ள நீதிமன்றம் ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டது. கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 17-ல் பாரத் ஜோடோ யாத்திரையின்போது மகாராஷ்டிராவில் அகோலா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சாவர்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியதாக புகார் எழுந்தது. சாவர்க்கரை ராகுல் காந்தி வேண்மென்றே திட்டமிட்டு அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக...
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் அதிகரிக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தராகண்ட் சென்றார். அங்கு முக்வாவில் உள்ள கங்காதேவியின் கோயிலில் அவர் பூஜை, வழிபாடுகளை நடத்தினார். மலையேற்றம் மற்றும் இரு சக்கர வாகன பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஹர்சிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்...
அமலாக்கத் துறையின் கைது உரிமை குறித்து வரும் ஏப்ரலில் விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை உரிமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 241 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, ரவிகுமார் அமர்வு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. "நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை...
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு செக் மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் வாங்கியதற்காக ராம் கோபால் வர்மா கொடுத்த செக் வங்கியில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்தைதயடுத்து அவர் மீது கடந்த 2018-ம் மீது காசோலை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நடப்பாண்டு ஜனவரி 21-ம் தேதி அந்தேரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஒய்.பி.புஜாரி முன்பு...
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்த பப்பர் கல்சா சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் உ.பி.யில் நேற்று கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை அடுத்த குர்லியான் கிராமத்தைச் சேர்ந்தவர் லஜர் மசி. ஜெர்மனியின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு) தலைவர் ஸ்வர்ன் சிங் (எ) ஜீவன் பாவ்ஜியுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் லஜர் நேரடி தொடர்பு...
உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்​கள் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வில் பக்​தர்​கள் தங்​கு​வதற்கு கூடார நகரம் அமைக்​கப்​பட்​டது. இதில் நட்​சத்​திர விடு​தி​களின் வசதி​களை உ.பி. அரசு செய்​திருந்​தது. மாநில சுற்​றுலா கழகத்​தின் திரிவேணி சங்கம கரை காலனி​யில் 2,100 கூடாரங்​கள், 110 தனிக்​குடில்​கள் கட்​டப்​பட்​டிருந்​தன. இவற்​றில் தங்​கு​வதற்கு இந்​தி​யர்​கள் மற்​றும் வெளி​நாட்​டினர் இணை​யதளத்​தில் முன்​ப​திவு செய்​தனர். சர்​வ​தேச தரத்​தில் நவீன வசதி​களு​டன்...