விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப்...
‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார்.
‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. ‘அனிமல்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள படம், பிரபாஸ் நாயகன் என்பதே இதற்கு காரணம்.
இப்படத்தில் பிரபாஸுக்கு அப்பா கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக...
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில் அபினய்யும் நடித்தார். அப்போது அபினய் விளம்பர உலகில் நம்பர் 1 ஆக இருந்தார். நான்கு நாட்கள் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தோம். ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு வட இந்திய...
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது.
இந்த நிலையில் தற்போது கேன்ஸ் நகரத்தில் நடைபெற்ற மற்றொரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்...
கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெரேடி, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஐபிஎல் -இந்தியன் பீனல் லா’.
கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர் நேஷனல் சார்பில் ஜி.ஆர்.மதன் குமார் தயாரித்துள்ளார். பிச்சு மணி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசை அமைத்துள்ளார். நவ.28-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவைகளை செய்தவர், கன்னியாஸ்திரி ராணி மரியா. அவர் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’ (முகமற்றவரின் முகம்).
ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம், 2024ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற இப்படத்தில், வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத்...
3,800 ஏழை குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவிய பாடகி! – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்
admin - 0
சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ உள்பட சில படங்களில் பாடியுள்ள இவர், தனது சகோதரர் பலாஷுடன் இணைந்து,...
எனக்கு டப்பிங்கில் அதிக ஆர்வம் இருந்தது. ஆரூர்தாஸ் ஐயா மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முனைப்பாகச் சொல்லிக் கொடுப்பார். ‘இந்த இடத்துல உதடு ஒட்டாம பேசு, இந்த இடத்துல ‘இம்’-மை அரை சவுண்ட் வச்சுக்கோ, இந்த இடத்துல ஏத்திப் பேசணும், இங்க வார்த்தையை இறக்கிப் பேசணும்’என்று சொல்லித்தருவார். அதே போல மருதபரணி அவர்கள் ‘காஷ்மீரம்’ என்ற மலையாளப் படத்துக்கு தமிழ் டப்பிங் செய்தார். அது ‘ரோஜா’ படம்...
“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது” என்று தன்னை விமர்சித்த யூடியூபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் கவுரி கிஷன்.
‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் 'அதர்ஸ்' என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு...
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்ட்டி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
2018ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. ஆனால் ஃபிஜி தீவில் இருந்து வரக்கூடிய சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானால் படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்பிரச்சினை முடிவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் வெங்கட்...










