குழித்துறை: திருச்சி சிவா படம் எரித்து காங்கிரஸ் போராட்டம்
காமராஜர் குறித்து திமுகவை சேர்ந்த திருச்சி சிவா எம்பி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி சிவா எம்பி உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும்...
கொல்லங்கோடு: கேரளாவில் இருந்து கொண்டு வரும் தெரு நாய்கள்
குமரி மேற்கு கடற்கரை சாலையில் கொல்லங்கோடு சுற்றுப் பகுதியில் இரவு வேளைகளில் சமூக விரோதிகள் சிலர் கேரளா தெரு நாய்களை கும்பலாக வாகனங்களில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர்.
இந்த நாய்கள் அணிவகுத்து அந்தப் பகுதிகளில் கோழிக் கறிக்கடைகளில் தங்கி விடுகின்றது. இப்படி கொண்டு வந்து விடப்படும் நாய்களால்...
திருவட்டார்: ஆதிகேசவபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது. 2-ம் நாள் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவபெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் வரை...
வில்லுக்குறி: பேரூராட்சி அதிகாரி, ஊழியர்கள் மீது வழக்கு
வில்லுக்குறி பேரூராட்சி, மாம்பழத்துறையாறு அணை செல்லும் வழியில் பேரூராட்சியின் வளம் மீட்புபூங்கா உள்ளது. இங்கு ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை எரித்த சம்பவம் நடந்தது.
இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலர், இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இலவச சட்ட உதவி மையம்...
குமரி: விதிமுறையை மீறிய மினி பஸ்சுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் பார்வதிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ் நின்று கொண்டிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அந்த மினிபஸ் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது...
நாகர்கோவில்: எஸ்ஐ மீது பரபரப்பு புகார்
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இறைச்சி வியாபாரம் செய்து வந்த சிவராஜ் என்பவரை எஸ்ஐ இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறி உபகரணங்களை பறித்து சென்றதன் காரணமாக அவர் காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி நாகர்கோவிலில்...
குமரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 5, 313 மனுக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுவான மனுக்கள் உட்பட 5, 313 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார். இதில், தகுதியானவர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா, ஓபிசி சான்றிதழ், ரேஷன் கார்டு பெயர்...
குமரி: நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகங்கள் நேற்று தொடங்கி குமரி முழுவதும் நடைபெற்று வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் நாளை 17-ஆம் தேதி குழித்துறை நகராட்சி வார்டு 1, 2-க்கு திருத்துவபுரம் ஆடிட்டோரியத்திலும், பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு செயின்ட் ஜூட்ஸ் ஹைடெக் பள்ளியிலும், நெட்டாங்கோடு ஊராட்சிக்கு தேவி திருமண...
குலசேகரம்: பெயிண்டிங் தொழிலாளி மர்ம மரணம்
குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் கமாலியேல் (50). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நேற்று பிணந்தோடு பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் பாசிகளைத் தண்ணீர் பிரஷர் பம்பு மூலம் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு குலசேகரத்தில்...
கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் தகவல்
கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - கொல்லங்கோடு நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளான சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபடம், குடிநீர் குழாய் உடைப்புகள், பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு மற்றும் அன்றாட அடிப்படை தேவைகளில் குறைபாடுகள் ஏதும்...












