Google search engine

வடசேரியில் டாஸ்மாக் கடை முன்பு இருதரப்பினர் இடையே மோதல்.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு நேற்று இரவு இருதரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்ட...

இரணியல்: வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் ஒருவர் கைது

இரணியல், கண்டன்விளை பகுதியை சேர்ந்த ராஜன் (41) என்பவர், நேற்று ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து, தனியாக இருந்த 32 வயது திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் வந்ததும் கொலை மிரட்டல் விடுத்து ராஜன் தப்பிச் சென்றார். இது...

தக்கலை: தம்பதியர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

தக்கலை அருகே புங்கறை பகுதியில் காரில் சென்ற தம்பதியை பைக்கில் வந்த இரு இளைஞர்கள் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தடுத்தபோது, இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தக்கலை போலீசார் பைக் எண்ணை அடிப்படையாகக்...

குமரி: நவராத்திரி சுவாமி விக்கிரகங்கள் களியக்காவிளை வந்தது.

நவராத்திரி பூஜையை முன்னிட்டு குமரிமாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சுவாமி விக்கிரகங்கள், ஒன்பது நாட்கள் பூஜை முடிந்து நேற்று தமிழக எல்லை களியக்காவிளைக்கு திரும்பின. கேரள அரசு அதிகாரிகள் முறைப்படி தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைத்த விக்கிரகங்கள், குழித்துறை மகாதேவர் கோயிலில் தங்கியிருந்தன. இன்று (6-ம் தேதி)...

மார்த்தாண்டம்: மகனை வெட்டிக் கொன்ற தந்தை

மார்த்தாண்டம் உண்ணாமலைகடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (83) என்பவர், கடந்த 21ஆம் தேதி போதையில் வீட்டிற்கு வந்த தனது மகன் ராஜேஷை (39) மண்வெட்டியால் தாக்கியதில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் நேற்று இரவு உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் கொலை வழக்காக மாற்றி, தந்தை மாரிமுத்துவை கைது...

நித்திரவிளை: காரில் மண்ணெண்ணெய் பறிமுதல் ஒருவர் கைது

மங்காடு ஆற்று பாலம் வழியாக மண்ணெண்ணெயுடன் வாகனம் வருவதாக நித்திரவிளை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்து, டிரைவர் ஜான் பெஸ்கியை (43) விசாரணை நடத்தினர். அவர் மானிய விலையில் ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை மீனவர்களிடம் வாங்கி கேரளாவில் விற்பனை செய்ய வந்ததாகத்...

கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பேட்டி.

கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில்...

கொற்றிகோடு: பேரூராட்சி அலுவலகத்தில் ரகளை செய்த ஒப்பந்ததாரர்

குமாரபுரம் முதல் நிலை பேரூராட்சியில் குடிநீர் திட்ட பைப் லைன் நீட்டிப்பு பணிகளை மேற்கொள்ள தனியார் ஒப்பந்ததாரர் சுரேஷ் (52) பணியை தொடங்கவில்லை. பேரூராட்சி சார்பில் கடிதம் அனுப்பியும் அவர் வேலை பதிவு செய்யாததால், சம்பவ தினம் பேரூராட்சி அலுவலகம் சென்று பணியில் இருந்தவர்களை தகாத வார்த்தைகள்...

பேச்சிப்பாறை:   பைக்கில் மிளா பாய்ந்து வியாபாரி படுகாயம்

பேச்சிப்பாறை அருகே சிற்றார் சிலோன் காலனியைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி ரமேஷ் (44), நேற்று தனது பைக்கில் ஐஸ் எடுக்கச் சென்றபோது, சீறோ பாயின்ட் பகுதியில் மிளா ஒன்று குறுக்கே பாய்ந்து மோதியதில் காயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்....

களியக்காவிளை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மார்த்தாண்டம் தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் போதைப் பொருள் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை களியக்காவிளை காவல் ஆய்வாளர் (பொ) வேளாங்கண்ணி உதயரேகா கொடியசைத்து துவக்கி வைத்தார். மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்...