Google search engine
தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (ஜன.15) அதிகாலை நேரத்தில் குவிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கறுப்பு நிற எஸ்யூவி வாகனங்கள் சைரனை ஒலிக்க செய்தபடி...
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆர்.பி.எஃப் படையினர், தமிழக ரயில்வே...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் தனது சுற்றுப்பயணத்தை ஜனவரி 27-ம் தேதி தொடங்க இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்னர் பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. பிரிஸ்பன் போட்டியின் முடிவில்...
இந்தியர் என போலி சான்றிதழ் கொடுத்து தெலங்கானா மாநிலத்தில் ஜெர்மனி வாழ் இந்தியரான வேமுலவாடா சென்னமனேனி ரமேஷ் 4 முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சென்னமனேனி ரமேஷ் என்பவர் தெலங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற அரசியல்வாதியாக உள்ளார். இவர் ஜெர்மனி வாழ் இந்தியர் ஆவார். ஆனால், போலி சான்றிதழ் கொடுத்து, இவர் கடந்த 2009-ம் ஆண்டில் தெலுங்கு...
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் வாதிட வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில்,...
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்​சேரி, விழுப்புரம் பகுதி​யில் அதிக​னமழை கொட்டி தீர்த்​தது. அதிகபட்​சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் 51 செ.மீ. புதுச்​சேரி​யில் 49 செ.மீ. மழை பெய்​துள்ளது. இன்று 13 மாவட்​டங்​களில் கனமழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலைவர் பாலசந்​திரன் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: 90 கி.மீ. வேகத்தில் காற்றுதென்​மேற்கு வங்கக்​கடல் பகுதி​களில்...
தி ரைஸ் எழுமின் அமைப்பு நடத்தும் 14வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. தொழில் வணிக அமைப்புகளும், முதலீட்டு நிறுவனங்களும், தமிழக அரசின் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். மனித வள மேம்பாட்டுத் துறையினர், பட்டயக் கணக்கர்கள் & நிதி மேலாண்மை பேரவையினர் தனித்தனி சிறு மாநாடுகளும் நடைபெறுவதாக நாகர்கோவில் ஏற்பாட்டாளர்கள் இன்று(நவ.26) தெரிவித்தனர்.
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக 18 வயது நிரம்பிய முதல் கட்ட வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு அமைப்பினர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.  அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (நவ.,18) விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு செயலாளர் செ.ராம்மோகன் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களுக்கும், காங்கிரஸுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, காங்கிரஸின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளின் தேவைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஜூலை 24-ல் ரிலீஸ்

கீர்த்தி சுரேஷ், இயக்குநர்-நடிகர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ வரும் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. புதுமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் இளம்...

ஷங்கர் மகன் அர்ஜித் அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ தொடக்கம்: ஜேசன் சஞ்சய் நேரில் வாழ்த்து

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘லவ்வர் பாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் ஆகியோர் கலந்துகொண்டனர்....

கடைசி நேர கோலால் கானா வெற்றி: 1-0 என்ற கணக்கில் பனாமாவை வீழ்த்தியது | FIFA WC 2026

பிஃபா உலகக் கோப்பை தொடரில் நேற்று கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பிஎம்ஓ பீல்டு மைதானத்தில் 'எல்' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கானா - பனாமா அணிகள் மோதின. மழையின் இடையே...