திருப்பரங்குன்றம் தீபத் தூண் யாருக்கு சொந்தம்? – உயர் நீதிமன்றத்தில் வக்பு வாரியம் தரப்பில் வாதம்
admin - 0
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சிக்கந்தர் தர்காவுக்கு சொந்தமானது என்று வக்பு வாரிய வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வாதாடினார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உட்பட 20 மேல்முறையீட்டு மனுக்களும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக 6 மேல்முறையீடு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான...
பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்
admin - 0
தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரமில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச்...
என்டிஏ ஆட்சிக்கு வந்தால் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி
admin - 0
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தபிறகு மாநிலம் முழுவதும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச உண்டு உறைவிட வசதியுடன் தரமான கல்வியை நல்கும் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தனது அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழகத்தில் வரவிடாமல் தடுக்கும் திமுக அரசைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளது...
தமிழக அரசு உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தி வருகிறது: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெருமிதம்
admin - 0
தமிழக அரசு உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தி வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது: நானோ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள்தான், வருங்கால தொழில்துறையில் முன்னிலை வகிக்கும். திறன்மிகு பேட்டரிகள், சூரிய ஒளி தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறை ஹைட்ரஜன் அமைப்புகளில் நானோ...
தகுதியற்ற ஆட்சியாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்வதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக குறிஞ்சிப்பாடியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாவது: ஊழலுடன் போதை பொருட்களும் அதிக அளவு புழங்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. குற்றப் பணத்திலும் ஊழல் பணத்திலும் சொத்து சேர்ப்பவர்கள் பாவிகள். ஸ்டாலின் அரசு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு ஆபத்து. வள்ளலார் பக்தர்கள் விருப்பத்துக்கு எதிராக, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை...
தந்தையும் மகனும் ஒன்றிணைய சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் டிச.17-ம் தேதி நடைபெறும் பாமக ஆர்ப்பாட்டத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். ஜி.கே.மணி பேட்டி கொடுக்க வேண்டிய தேவையும், அவசியமும் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.
பாமகவும், கட்சியின்...
மாநகராட்சி பகுதியில் உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களை கண்டு பிடிக்க மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். போதிய பாதுகாப்பு அளிக்காததால் ஆய்வுக்கு செல்லும் அலுவலர்கள், வீட்டு உரிமையாளர்களால் விரட்டப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் பொதுமக்கள், குழந்தைகளுக்கு வளர்ப்பு நாய்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. மூர்க்க குணம் கொண்ட நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள், பராமரிப்பு செலவு அதிகரிக்கும்போது, அவற்றை சாலையில் விட்டுவிடுகின்றனர்.
இதை தடுக்க, வளர்ப்பு...
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.
இந்த மோசமான வானிலையால், டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமதமாக வருகின்றன. அந்த விமானங்கள், சென்னை வந்துவிட்டு, சென்னையில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் செல்ல இருப்பதால், அந்த சேவையும் தாமதம் ஆகின்றன.
நேற்று அதிகாலை முதல் மதியம் வரை, டெல்லியில் இருந்து சென்னை...
ஜனவரியில் தமிழக அரசியலை தெறிக்கவிடப் போவதாக அலாரம் அடித்துக் கொண்டிருக்கிறார் ஈரோட்டின் தலைவராக ஆக்ஷன் ஹீரோ கட்சியை முன்னேற்ற வந்துள்ளார். இதில் முக்கியமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இலைக் கட்சியின் இரண்டு முக்கிய தலைகளை தூக்கிக் கொண்டு வந்து நிப்பாட்டுவதாக தலைவருக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறாராம்.
அந்த வகையில், அண்மைக் காலமாக ஆலயக் கட்சிக்கு பிரவேசம் செய்யப்போகிறார் என செய்திகள் வருவதும் அடங்குவதுமாக இருக்கும் முன்னாள் ‘ஷாக்’ மாண்புமிகுவின் மனதை பல...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஞானசேகர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர்...
