நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், காட்டுநாயக்கர், பனியர், இருளர், குறும்பர் இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உடை, உணவு முறை, வழிபாட்டு முறை, திருமணம், இறப்பு என தங்களின் அனைத்து வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.
தோடரின மக்கள் ஊட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், தங்களுடைய மந்துகளில் வசிக்கின்றனர். இங்கு ‘மொற்பர்த்’ என்ற புத்தாண்டுப் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர்...
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே பாக் நீரிணைக் கடற்பகுதியில் மண்டபம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சந்தியா ஜோசப் என்பவரது விசைப்படகை...
தைப்பூச விழாவையொட்டி, மேல்மருவத்தூரில் 28 விரைவு ரயில்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நிறுத்தம், பிப்.2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருவார்கள்.
அவர்களின் வசதிக்காக, மேல்மருவத்தூர் வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள், தற்காலிகமாக அந்த நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லோக்மானிய திலக் - காரைக்கால், எழும்பூர் - மதுரை...
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: திண்டுக்கல் நிதி நிறுவன உரிமையாளரிடம் கேரள போலீஸார் தீவிர விசாரணை
admin - 0
சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்தவரிடம் கேரள போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலில் இருபுறமும் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள் 2019-ல் கழற்றப்பட்டு, செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு செப்பனிடும் பணிக்காக நகைகளை ஒப்படைத்த போது எடை 42.8 கிலோவாக இருந்தது. செப்பனிட்ட பிறகு சென்னையை சேர்ந்த...
புதுச்சேரியில் போலி மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு, 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டிருப்பதால், இதுகுறித்த விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரிக்கலாம் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்தார்.
இந்நிலையில், அவர் நேற்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த...
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்கு தடை கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
admin - 0
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்குத் தடை கோரிய வழக்கின் விசாரணையை ஜன. 2-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கடந்த ஆண்டு நடந்த கந்தூரி விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை...
தவெக கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்
admin - 0
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் எஸ்.பி. உட்பட 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ...
சுனாமி நினைவு தினம் நேற்று 21-ம் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது. அதை யொட்டி மெரினா மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திமுக மீனவரணி சார்பில் அணியின் துணைத் தலைவர் கே.பி.சங்கர் தலைமையில் திருவொற்றியூர் கடலோரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாவட்டச் செயலாளர் சுதர்சனம் உள்ளிட்டோர் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து...
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் திருப்பலியை நிறைவேற்றினார்.
தொடர்ந்து நேற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் இருதயஆண்டவர் திருத்தலம்,...
“மதவாத அரசியல் செய்வது திமுக தான்” – பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் தடாலடி நேர்காணல்
admin - 0
தற்போதைய அரசியல் சூழல்கள், கூட்டணி வாய்ப்புகள் குறித்து ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரிடம் பேசினோம். அவரது கருத்துக்கள் இங்கே.
Q
தவெகவில் இருக்கும் அளவுக்கு பாஜக மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு இல்லை என்கிறார்களே?
A
சினிமா கவர்ச்சியில் ‘ஜென் - ஸீ’ முதல் அனைத்து தரப்பினரும் விஜய்-க்கு ரசிகர்களாக மட்டும்தான் இருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில்,15 கோடி உறுப்பினர்கள் இருக்கும் பாஜகவின் தேசிய செயல் தலைவராக...
