சென்னை: நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி பண்டிகை கொண்டாப்படும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து...
புதிய டிஜிபி-யை தேர்வு செய்வதற்கான பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய டிஜிபி தேர்வு போட்டியில் டிஜிபி-க்களான சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர்...
ஆறுதல்கூட கூறாமல் தப்பியோடிய தலைவரை பார்த்ததில்லை: திமுக எம்பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா விமர்சனம்
admin - 0
ஒரு கட்சித் தலைவர் ஆறுதல்கூட சொல்லாமல் தனது பாதுகாப்பை மட்டும் நினைத்து பயந்து சென்றதை இதுவரை பார்த்ததில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் ஆர்ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்ததுடன், தற்போதும் பலர்...
கரூர் நெரிசல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்
admin - 0
கரூர் சம்பவம் தொடர்பாக பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்து,...
சென்னை புறநகர் பகுதிகளில் ஞாயிறு, பண்டிகை நாட்களையொட்டி வரும் தேசிய விடுமுறை நாட்களில், வழக்கமாக 30 சதவீதம் வரை ரயில் சேவைகள் குறைத்து இயக்கப்படும். அதன்படி ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்களில் (அக்.1, 2) வருகின்றன.
எனவே இன்றும், நாளையும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள்...
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல்
admin - 0
கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மதுரை பூத குடியைச் சேர்ந்த கே.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ரோடு ஷோ மற்றும் மாநாடுகளில் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தவறுகளால் கட்சியினர்,...
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசின் சார்பில் மாதம்தோறும் ரூ.8,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்...
கரூர் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட முதல்வர் மீது பழிபோடுவதா? – இபிஎஸ் விமர்சனத்துக்கு அமைச்சர்கள் பதில்
admin - 0
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட பழனிசாமிதான், கரூர் சம்பவத்தில் துரிதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மீது பழிபோடுகிறார் என்று அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை: கரூர் துயரச் சம்பவத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அதிலும் அரசியல் செய்து வருகிறார். காவல்துறையின் கட்டுப்பாடுகள் எதையும் தவெக பிரச்சாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. ‘ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத் தலைவர் நேற்றும் விசாரணை நடத்தினார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்பவர் நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்தோர்...
தவெக வழக்கறிஞர் அறிவழகன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது போலீஸார் போக்குவரத்தை சீர்செய்யவில்லை. பாதுகாப்புக்கு போதுமான காவலர்களை நியமிக்கவும் இல்லை. கரூர் கூட்டத்தில் போலீஸார் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதியால் 41 பேர் உயிரிழந்தனர். அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய்...






