அரசுப் பணிகளில் தமிழ்வழி கல்விக்கு முன்னுரிமை: புதிய திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்
admin - 0
அரசுப் பணிகளில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இனி தமிழ் வழியில் கல்வி படித்தமைக்கான முன்னுரிமை வழங்கும் திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் குறித்த திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்தார்.
அதன் நோக்க காரண உரையில் கூறியிருப்பதாவது: அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் மூலம்...
3 யானைகளை மீண்டும் சங்கர மடத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி
admin - 0
காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை மீண்டும் மடத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவி்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் நடைபெறும் வழிபாடுகள், பூஜைகள், கோயில் திருவிழாக்களுக்காக இந்து, ஜெயந்தி, சந்தியா ஆகிய 3 யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த யானைகளை கவனித்து வந்த யானைப்பாகன் கடந்த 2015-ல் உயிரிழந்துவிட்டதால் இந்த 3 யானைகளும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி இந்த...
குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினாவில் போக்குவரத்து மாற்றம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை
admin - 0
குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26-ம் தேதி மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை எதிரே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதை முன்னிட்டு மெரினா மற்றும் அதைச் சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 26-ம் தேதி காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர்...
நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், வழக்கின் விசாரணை அதிகாரிகள் தொடர்பாகவும் எந்த வீடியோக்களையும் வெளியிடக்கூடாது என்றும், பிப்.2-ம் தேதி அரசு மருத்துவர்கள் முன்பாக மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டுமென்றும் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் இரு மோசடி வழக்குகளின்கீழ் கடந்த டிச.13-ம் தேதி கைது செய்தனர்.
சவுக்கு சங்கருக்கு மருத்துவ...
பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் காரை மறித்த போலீஸார், அவரை அனுமதிக்கவில்லை. இதனால், பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல் பாதியிலேயே திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கூட்டணி கட்சித் தலைவரான இந்திய ஜனநாயக கட்சியின்(ஐஜேகே) நிறுவனத்...
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக, பாஜகவுடன் அன்புமணியின் பாமக அணி, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் விதமாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்...
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வாகன போக்குவரத்து மாற்றம் தொடர்பாக காவல்துறை அறி விப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உருவாகியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக காவல்துறை வடக்கு மண்டல...
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், தெற்கு ஆசியாவின் அதிநவீன வகை சிடி ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதிரியக்க மற்றும் பதிவு தொழில்நுட்ப அறிவியல் துறையில், சிறப்பான படமெடுப்பு திறனுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஜிஇ அபெக்ஸ் எலைட் 512 ஸ்பெக்ட்ரல்’ சிடி ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிடி ஸ்கேனரை, சென்னை மருத்துவக் கல்லூரியின்...
சென்னையில் மட்டும் 13 இடங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்ய மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில், அதிமுக உறுப்பினர் தங்கமணி பேசும் போது, “தெருநாய்கள் பிரச்சினை நீடித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுவதாக தொடர் செய்திகள் வெளிவருகின்றன.
தெருநாய் கடிக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “நாய்க்கடி பிரச்சினையில் உச்ச...
கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 50 முதல் 55 கோடி கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இத்தொழிலில் சுமார் 20 ஆயிரம் பண்ணையாளர்களும், அவர்களுக்குத் தீவனம் மற்றும் குஞ்சுகளை வழங்கும் 66 ஒருங்கிணைப்பாளர் களும் ஈடுபட்டுள்ளனர். சமீபகாலமாக உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் இதர சிரமங்கள் குறித்து பண்ணையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிச.29 மற்றும் ஜன.21 ஆகிய...
