தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக, பாஜகவுடன் அன்புமணியின் பாமக அணி, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் விதமாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்...
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வாகன போக்குவரத்து மாற்றம் தொடர்பாக காவல்துறை அறி விப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உருவாகியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக காவல்துறை வடக்கு மண்டல...
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், தெற்கு ஆசியாவின் அதிநவீன வகை சிடி ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதிரியக்க மற்றும் பதிவு தொழில்நுட்ப அறிவியல் துறையில், சிறப்பான படமெடுப்பு திறனுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஜிஇ அபெக்ஸ் எலைட் 512 ஸ்பெக்ட்ரல்’ சிடி ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிடி ஸ்கேனரை, சென்னை மருத்துவக் கல்லூரியின்...
சென்னையில் மட்டும் 13 இடங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்ய மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில், அதிமுக உறுப்பினர் தங்கமணி பேசும் போது, “தெருநாய்கள் பிரச்சினை நீடித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுவதாக தொடர் செய்திகள் வெளிவருகின்றன.
தெருநாய் கடிக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “நாய்க்கடி பிரச்சினையில் உச்ச...
கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 50 முதல் 55 கோடி கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இத்தொழிலில் சுமார் 20 ஆயிரம் பண்ணையாளர்களும், அவர்களுக்குத் தீவனம் மற்றும் குஞ்சுகளை வழங்கும் 66 ஒருங்கிணைப்பாளர் களும் ஈடுபட்டுள்ளனர். சமீபகாலமாக உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் இதர சிரமங்கள் குறித்து பண்ணையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிச.29 மற்றும் ஜன.21 ஆகிய...
சிஎம்டிஏ சார்பில் ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் 776 குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் வழங்கினார்
admin - 0
வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில், ஏழு கிணறு பகுதியில ரூ.147 கோடியில் கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, பிராட்வே பிரகாசம் சாலை, வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம், கல்யாணபுரம், வுட்வொர்ஃப் போன்ற இடங்களில் நீண்ட காலமாக சாலை...
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
admin - 0
திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென, அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் பி. ஜெகந்நாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய்...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமானது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், அக்குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 21 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 20-ம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள அசையா...
புத்தகங்கள் வாழ்க்கையை உன்னதமாக்கும், தொடர் வாசிப்பு அறிவை அகலப்படுத்தும் என்று சென்னை புத்தக காட்சி நிறைவுவிழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 49-வது சென்னை புத்தக காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. சுமார் ஆயிரம் அரங்குகள் இடம்பெற்ற இந்த புத்தக காட்சியை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
புத்தக காட்சி நிறைவு விழா நேற்று...
தமிழகத்தில் மாநில அளவிலான பயிற்சிகளின் போது கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்றலை வழங்கும் நோக்கில், மாநில வள மையம் உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறைக்கு தேவையான பரிந்துரைகளை தருவது, மாணவர்கள் செய்து பார்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது ஆகியவை இந்த மையத்தின்...
