மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர்(61), ராஜி(35). மீனவர்களான இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை வழக்கம்போல் ஒரே படகில் மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில், காலை 7 மணியளவில் இவர்கள் சென்ற படகு மற்றும் வலை ஆகியவை விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரை பகுதியில்...
இந்திய அயலகப் பணிப் பிரிவைச் சேர்ந்த 7 அலுவலர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தத்தை சந்தித்ததுடன், தமிழகத்தின் பாரம்பரிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வு செய்கின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் தேசிய அளவில் பொருளாதாரத்தில் சிறந்த 2-வது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. தொழில் வளர்ச்சியிலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த மாநிலமாகவும் விளங்குகிறது.
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை விளக்கிடும் கீழடி முதலான தொல்லியல் அகாழய்வு மையங்கள் என பல்வேறு...
காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல்(39), தினேஷ் (30), காரத்திகேசன்(27), செந்தமிழ் (27), பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன்(22),...
ஆமைகள் உயிரிழக்க காரணமான மீன்பிடி கப்பல்கள் மீதான நடவடிக்கைகள் என்ன? – அரசு அறிக்கைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
admin - 0
ஆமைகள் உயிரிழக்க காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்திய மீன்பிடி கப்பல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 31-ம் தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா முதல் கோவளம் வரை கடற்கரைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இந்நிலையில், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா,...
சென்னை மாவட்டத்தில் கட்சி அமைப்புரீதியாக கள ஆய்வு பிப்.4-ல் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக கிளை, வார்டு, வட்டம் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து, விவரங்களை கட்சி தலைமைக்கு சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் கட்சி...
சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார்.
அதேபோல், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.குணசுந்தரி (52)...
4 ஆண்டுகளாகியும் கரோனா நிவாரணம் கிடைக்கவில்லை! – ‘உதிரிப்பூக்களின்’ கண்ணீரை உதாசீனப்படுத்தலாமா?
admin - 0
இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் துயர் கரோனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகட்டுமேனிக்கு ஈவிரக்கமின்றி காவு வாங்கிச் சென்ற அந்த பெருந்தொற்று தந்துசென்ற வலியை இன்னமும் கூட பல குடும்பங்கள் அனுபவித்து வருகின்றன. பெருந்தொற்றின் பேரழிவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் எந்தவிதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தன.
தாயையும் தந்தையையும் கரோனாவுக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்கு மத்திய அரசு ரூ.10 லட்சமும், மாநில...
இம்முறை புதுச்சேரியில் காங்கிரஸ் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் பேசி வரும் நிலையில், இரண்டு கட்சிகளுக்குமான உரசலும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி போட்டியிட்டது.
30 தொகுதிகளிலும் போட்டியிட்ட இந்தக் கூட்டணியால் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெறமுடிந்தது. திமுக 6 இடங்களை பிடித்த நிலையில் திமுக-வை விட கூடுதலான இடங்களில்...
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிடக்கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில், உயர்மட்டக் குழுவை நியமிக்கக் கோரியும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட...
தவெகவில் முதல்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: நிர்வாகிகளுக்கு விஜய் படம் பொறித்த வெள்ளி நாணயம்
admin - 0
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, கட்சியின்...










