Google search engine
தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க , நாளை மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, துறைகள் தோறும் மானிய கோரிக்கைள் குறித்த விவாதம் வரும் ஏப்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, தமிழக அரசின் பட்ஜெட்டுக்கான ஒப்புதல் வழங்கவும், புதிய தி்ட்ட அறிவிப்புகள் குறித்த ஒப்புதலுக்காகவும் தமிழக அமைச்சரவைக்கூட்டம்...
‘எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் தகுதியான, நேர்மையான, ஊழல் கறைபடியாதவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 பல்கலைக்கழக சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் இசைவு தெரிவிக்க வகை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய உயர்கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல். இத்...
இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவால் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறையானது சமய நெறிகளை பரப்பிடும் வகையில் அரிய ஆன்மிக நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யும் பணிகளை மேற் கொண்டு வருகிறது. மேலும், அந்த நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் தகோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களையும் அமைத்து...
மாநிலங்களி்ன் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்பில் அவர் பேசியதாவது: நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதை...
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீ்ழ் அறிவித்தார். முன்னதாகவே அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், முதல்வரின் அறிவிப்பை ஏற்க மறுத்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு...
மாநில சுயாட்சி தொடர்பான முதல்வரின் அறிவிப்பு குறித்து சட்டப்பேரவையில் திமுக, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு: பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன்: இந்தியாவின் மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன என்று அம்பேத்கர் தெரிவித்துள்ளார். மொழிவாரி மாநிலத்தில் அவருக்கு விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை. இந்திய...
எ​திர்க்​கட்​சிகளின் கேள்​வியை தவிர்ப்​ப​தற்​காக அமைச்​சர் பொன்​முடி சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் நேற்று பங்​கேற்​க​வில்லை என கூறப்படுகிறது. தந்தை பெரி​யார் திரா​விடர் கழகம் சார்​பில் சென்​னை​யில் கடந்த ஏப்​.5-ம் தேதி நடத்​தப்​பட்ட நிகழ்ச்​சி​யில் பேசிய திமுக​ மூத்த அமைச்​சர் பொன்​முடியின் சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு வருத்தம் தெரிவித்தும் அவரை அமைச்​சர் பதவி​யில் இருந்து நீக்க வேண்​டுமென அதி​முக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில் நேற்று கூடிய சட்​டப்​பேரவை...
திமுக அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பேச பேரவை தலைவர் அனுமதிக்கவில்லை என வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பொருள் குறித்து பேச பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரினார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்காததால், அதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம்...
மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை திமுக தூண்டுவதாக, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டு பேசினார். அப்போது அதை ஏற்காமல் பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110...
கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழில் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2022-ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தக் கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19-ம் தேதி முதல்...