சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஏலத்தில் தனியார் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) வெற்றிபெற்றுள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (ஐஎன்-ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் தயாரிப்பதற்கான ஏலத்தை எச்ஏஎல் வென்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் விண்வெளி துறையில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் அரசின்...
இன்று ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, உ.பி.யின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘ஒய்-பிரேக்' எனும் பெயரில் அனைவருக்கும் யோகா செய்வதற்கான நேரம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உ.பி. அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: யோகா நெறிமுறையை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த வேண்டும். இந்த முயற்சி இந்தியாவின் யோகா பாரம்பரியத்தை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், யோகாவை...
தெலங்கானாவில் தற்கொலை செய்து கொள்வதற்காக ஆற்றில் குதிப்பவர்களை ஒரு கிராமத்தின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 300 பேரை காப்பாற்றி உள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் நிஜாமாபாத் மாவட்டம் உள்ளது. இங்கு 1,700பேர் வசிக்கும் யமாச்சா என்ற கிராமம், கோதாவரி ஆற்றின் கரையில் உள்ளது.
இந்நிலையில் குடும்பத் தகராறு, பொருளாதார பிரச்சினை, காதல் தோல்வி உள்ளிட்ட...
பிஹாரில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம், சிவானில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் மர்ஹோராவில் அமைந்துள்ள டீசல் ரயில் இன்ஜின் ஆலையில்...
தலைநகர் டெல்லியில் இருந்து லே நகருக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று டெல்லி திரும்பியது. டெல்லியில் இருந்து லடாக்கின் லே நகருக்கு இண்டிகோ விமானம் (6E 2006) இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று காலை வழக்கம்போல் லே நகருக்கு புறப்பட்டது.
இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் சுமார் 180 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் லே நகரை அடைந்ததும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு...
ஹைதராபாத்தில் இருந்து நேற்று காலை திருப்பதிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து 80 பயணிகளுடன் நேற்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் திருப்பதிக்கு புறப்பட்டது.
புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், ஹைதராபாத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தகவல் கொடுத்தார்.
உடனடியாக விமானத்தை தரை இறக்கும்படி உத்தரவு வந்ததால், அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதன்...
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 55-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கிய வாழ்க்கையும் பெற்றிட கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.
இதுபோல் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின்...
பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு பல மாநிலங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
கடந்த 2024-ம் ஆண்டு நீட் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கேள்வித் தாள் தேர்வுக்கு முன்பே வெளியாயின. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் ஏற்கெனவே நடைபெற்ற பல அரசுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதே கும்பலுக்கு பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் மோசடியிலும் தொடர்பு...
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறை கடந்த மே மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, மாணவர்கள் விசா பெறுவதற்கான நேர்காணல் விரைவில் தொடங்கும். ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகளை பொது என்ற வகைமையில் அமைத்து மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு உடன்பட மறுக்கும் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.
அமெரிக்கா மற்றும் அதன் அரசாங்கம், கலாச்சாரம்,...
நாட்டின் ஐடி தலைநகராக பெங்களூரு விளங்கி வருகிறது. இங்குள்ள தனியார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சிலர், ஊழியர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கடிதம் அனுப்பினர். அதன் அடிப்படையில், ஊழியர்களின் வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசுமுடிவெடுத்துள்ளது. இதற்காக கர்நாடக தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதன்படி கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி, தினசரி...





