Google search engine
மேற்​கு​வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்​ஏ ஹு​மாயூன் கபிர் முர்​சி​தா​பாத் மாவட்​டத்​தில் பாபர் மசூதி போன்ற கட்​டிடம் கட்ட அடிக்​கல் நாட்​டி​னார். இதையடுத்து அவர் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில் அவர் ஜனதா உன்​னயன் என்ற பெயரில் புதிய கட்​சியை நேற்று தொடங்​கி​னார். இதுகுறித்து பெலதங்​கா​வில் அவர் கூறும்​போது, ‘‘எனது கட்சி சார்​பில் 8 வேட்​பாளர்​கள் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை தேர்​தலில் நிறுத்​தப்​படு​வர். நான் ரெஜிநகர் மற்​றும் பெலதங்கா...
ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது. பெர்லின் நகரின் ஹெர்டி பள்ளியில், மாணவர்கள் மத்தியில் சுமார் 1 மணி நேரம் ராகுல் காந்தி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும்...
வங்கதேசத்தில் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பினர் இன்று டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு முன்பு நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில், காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்தனர். வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் உள்ள...
நாளை (டிசம்பர் 24) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தெரிவித்தார். பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் கடந்த ஜூன் 4-ம் தேதி நடை​பெற்ற ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு அணி​யின் வெற்​றிக் கொண்​டாட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் 11 பேர் இறந்​தனர். இதன் பின்னர் சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் போட்​டிகள் நடத்த தடை​வி​திக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில்,...
கீழடி​யில் மேற்​கொள்​ளப்​பட்ட அகழாய்வு முடிவு​கள் தொடர்​பான அறிக்​கையை மத்​திய அரசு விரை​வில் வெளி​யிட வேண்​டும் என்று மாநிலங்​களவை​யில் திமுக எம்​.பி. திருச்சி சிவா வலி​யுறுத்​தி​னார். மாநிலங்​களவை​யில் நேற்று பூஜ்யநேரத்​தின்​போது திருச்சி சிவா பேசி​ய​தாவது: தமிழ்​நாட்​டின் மதுரை​யில் உள்ள கீழடி பகு​தி​யில் தொல்​பொருள் ஆராய்ச்​சியை இந்​திய தொல்​பொருள் ஆய்​வுத்​துறை மேற்​கொண்டு வரு​கிறது. கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் இந்த ஆய்​வு​கள் தொல்​பொருள் ஆய்​வாளர் கே.அமர்​நாத் ராமகிருஷ்ணா தலை​மை​யில் நடத்​தப்​பட்டு வந்​தன. ஆய்வு தொடங்​கிய...
எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளிக்கு மத்​தி​யில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோ​தாவை மத்​திய ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் மக்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை தாக்​கல் செய்​தார். 20 ஆண்​டு​கள் பழமை​யான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக...
புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராம் வி. சுதார் (100) காலமானார். குஜராத்தின் கெவாடியாவில் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை வடிவமைத்தவர்தான் ராம் சுதார். வயது முதிர்வு காரணமாக உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ராம் சுதார் தனது...
காங்​கிரஸ் கட்​சி​யில் முக்​கிய முடிவு​கள் எடுக்​கும் உயர் அதி​கார அமைப்​பான செயற்​குழு​வின் கூட்​டம் டிசம்​பர் 27-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்​டு​வரும் அரசின் நடவடிக்கை மற்​றும் தற்போதைய அரசி​யல் சூழ்​நிலை குறித்து இக்​கூட்​டத்​தில் விவாதிக்​கப்பட உள்​ள​தாக காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரிவித்தன. பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் தோல்விக்கு பிறகு நடை​பெறும் கட்சி​யின் முதல் செயற்​குழு கூட்​டம் இது​வாகும். மேலும் தமிழ்​நாடு, புதுச்​சேரி,...
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே(29). இவருக்கு சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், பால் பண்ணை வைக்க மாடுகளை வாங்கியுள்ளார். இதற்காக, உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் கடந்த 2021-ம் தேதி ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். அவர்களுக்கு வட்டியாக ரூ.7.5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். எனினும், கடன் முடியவில்லை என கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், ஒரு சிறுநீரகத்தை விற்று...
நாட்​டில் இலக்​கி​யத்​துக்​கான உயரிய சாகித்ய அகாடமி விருதுகள் அறி​விப்பு திடீரென ரத்து செய்​யப்​பட்​டது. இதனால் எழுத்​தாளர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர். இந்​தி​யா​வில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்​வு​களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், 2025ம் ஆண்டு விருதுகளுக்​கான எழுத்தாளர்​களின் பட்டியலை தேர்​வுக் குழுக்கள் பரிந்​துரை செய்​தன. அதன் பின்​னர் சாகித்ய அகாடமி தேசிய நிர்​வாகக் குழுக்கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. அதில் 24 மொழிகளில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட...