உ.பி.யில் கொரியா ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் 9-வது மாடியிலில் இருந்து குதித்து தற்கொலை
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த வெளிநாட்டு கரன்சி வியாபாரி பாரத் சிட்டி சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 16, 14, 12 ஆகிய வயதில் 3 மகள்கள் இருந்தனர்.
இவர்கள் கரோனா காலத்தில் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்ற போது ஆன்லைன் விளையாட்டை கற்றுக் கொண்டனர். நாளடைவில் இவர்கள் கொரியன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தின் `மகர துவார்' பகுதியில் ராகுல் காந்தி, பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்த வழியாக வந்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களைப் பார்த்த ரவ்னீத்சிங் பிட்டு, ஏதோ போரில் வெற்றி பெற்றவர்கள் போல இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு ராகுல்...
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில் இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியை கைப்பற்றி உள்ளனர்.
மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கண்டறிந்துள்ளது.
இதையடுத்து ‘சரியான உணவை உண்பது’ என்ற இயக்கத்தை தேசிய அளவில் முன்னெடுத்துள்ளோம். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் மூலம் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிக...
வடமாநிலங்களில் பிரபலமான ஹோலி பண்டிகை வரும் மார்ச் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
இதுதொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "ஹோலி, தீபாவளி பண்டிகையின்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த திட்டம் நடப்பாண்டில் அமல்படுத்தப்படும்.
வரும் ஹோலி பண்டிகை...
ராஜஸ்தானில் அரசியல் நோட்டீஸ் ஒட்டியதற்காக இங்கிலாந்தை சேர்ந்த இருவர் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் பல இடங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் விசாரணையில் இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த இருவருக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் முதல்வராகிறார் யும்நம் கேம்சந்த் சிங் – முடிவுக்கு வருகிறது குடியரசுத் தலைவர் ஆட்சி
admin - 0
மணிப்பூரில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்டது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். பல மாதங்களாக வன்முறை நீடித்ததால் கடந்த 2025 பிப்ரவரியில் பாஜகவை சேர்ந்த முதல்வர் பிரேன்...
பூடானின் எரிசக்தி துறை அமைச்சர் லியோன்போ ஜெம் ஷெரிங் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்துப் பேசினார்.
இது குறித்து மத்திய மின்சாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”பூடானின் புனாட்சங்சு-2 நீர்மின் திட்டத்தின் (1020 மெகாவாட்) மின் உற்பத்தியை வணிக ரீதியாக மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இந்தியா - பூடான் இடையே மின்சார பரிமாற்ற உள்கட்டமைப்புக்கான திட்டமிடல் குறித்தும்...
திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இல்லை: அமலாக்கத் துறை
admin - 0
திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு தொடர்பான வழக்கில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமலாக்கத் துறை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சம்பவத்தில் அவருக்கு நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இல்லை என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப் பத்திரிகையில், திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்குத் தொடர்பு இருப்பதற்கான...
“இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்ளும், இவ்வளவு பொய் பேசும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நான் பார்த்ததே இல்லை” என்று தலைமைத் தேர்தல் ஆணையருடனான சந்திப்புக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாக சாடினார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இன்று சந்தித்தார். அவருடன் 15 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகளும், தீவிர...
