அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களில் வீடு ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
admin - 0
டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் 10 நாட்களுக்குள் பொருத்தமான வீடு ஒதுக்கப்படும். இதை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்’’ என்று...
மழையால் பாதித்த மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்
admin - 0
மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மராத்வாடா பகுதி விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மராத்வாடா பகுதியில் உள்ள 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை பாதிப்பால் 8 பேர் உயிரிழந்தனர். பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின. அங்கு 30,000 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட...
வாங்சுக்கின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து சிபிஐ விசாரணை: லடாக் நிலவரம் பற்றி துணைநிலை ஆளுநர் ஆலோசனை
admin - 0
வன்முறையால் பாதிக்கப்பட்ட லடாக்கில் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனிடையே, பருவநிலை செயல்பாட்டாளரின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மீண்டும்...
விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பிஹார் மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நியமனம் செய்துள்ளார். அவருக்கு உதவியாக மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா செயல்படுவார்கள் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள மேற்கு வங்கத்துக்கு மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. அவருக்கு...
போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதாக கூறி ஒரு கும்பல் ரூ.5 கோடி நிதி திரட்டியுள்ளது. ஆனால் இந்தப் பணத்தை சொந்தப் பயன்பாட்டுக்கு மடை மாற்றியுள்ளது. இந்தப் பணம் தேசவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பிவாண்டியில் 3 பேரை உ.பி. காவல் துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது. முகமது அயான், ஜைத் நோட்டியார், அபு சுபியான்...
நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில்-கப்லாங் (என்எஸ்சிஎன்-கே) மற்றும் அதன் அனைத்து பிரிவுகள், முன்னணி அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு சட்டவிரோத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 28 முதல் இது அமலுக்கு வருகிறது.
உல்ஃபா (ஐ), பிரிபாக், பிஎல்ஏ போன்ற பிற சட்டவிரோத அமைப்புகளுடன் என்எஸ்சிஎன்-கே இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் இந்திய ராணுவ வீரர்கள்...
உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் மதுபானக் கடத்தல் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி பிரவீன் சேத்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், “ஜாதியை கொண்டாடுவது தேச விரோதமானது.
அரசியலமைப்பை மதிப்பது தேசபக்தியின் மிக உயர்ந்த வெளிப்பாடு” என்று கூறியிருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்ளுபடி செய்தார். எனினும், அவர் வெளியிட்ட உத்தரவில், “சமூகத்தில் ஜாதியைப் பெருமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
உ.பி.யின் அரசு...
ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தந்தை லாலு, சகோதரர் தேஜஸ்வி உள்ளிட்டவர்களுடன், ரோஹிணி ஆச்சார்யாவுக்கு கருத்து வேறுபாடு என்ற ரீதியில் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ரோஹிணி கூறியதாவது: எனக்கு எந்தவித அரசியல் லட்சியங்களும் இல்லை. அதேபோல் மாநிலங்களவை...
வடகிழக்கு மாநிலங்களுக்கு இரட்டை போனஸ்: அருணாச்சலில் ரூ.5,100 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் பெருமிதம்
admin - 0
அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் இரு நீர் மின் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் 9,820 அடி உயரத்தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்கவும் அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில்...
குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் முதல் நிகழ்ச்சி: பிரதமர் மோடியின் உரை குறித்த 4 புத்தகங்கள் வெளியீடு
admin - 0
குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தனது முதல் பொது நிகழ்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் உரை குறித்த புத்தக வெளீயீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டார். குடியரசு துணைத் தலைவர்களாக இருந்த எம்.வெங்கையா நாயுடு மற்றும் ஜெகதீப் தன்கர் ஆகியோரும் தங்களது பதவிக்காலத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்...










