அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுர் (73) கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோ அருகே ஈஸ்ட் பே பகுதி அமைந்துள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஹர்ஜித் கவுர் தனது இரு மகன்களுடன் ஈஸ்ட் பே பகுதியில் குடியேறினார். சுமார் 33 ஆண்டுகளாக அவர் ஈஸ்ட் பே பகுதியில் வசித்து வருகிறார். அவரது இரு...
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்ளது. இது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி ஆகும். அங்குள்ள ஹூபர்ட் சாலையில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ரூ.153.59 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார்.
அமெரிக்காவின் யுபிக்விட்டி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் பெரா கடந்த 2018-ம் ஆண்டில் ட்ரிபெகாவில் உள்ள...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பது ஒழிக்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் பதுங்கு குழிகளில் தங்குகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்ட மலைப் பகுதியில் கடந்த வாரம் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் உணவுப் பொருட்கள், சிறிய கேஸ் அடுப்பு, குக்கர், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள்...
ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக விமானத்தில் இருந்த 200 பயணிகள் சுமார் 2 மணி நேரம் விமானத்திலேயே இருந்தனர். இதன்பிறகு அனைவரும் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாற்று விமானம்...
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
admin - 0
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தராகண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன்காரணமாக கங்கோத்ரி அருகே தரளி என்ற கிராமம் முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தொடர் மழையால் உத்தராகண்ட் முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வாராணசியில் இருந்து...
தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஹைதராபாத் போன்ற நகரங்களில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கியதில் முக்கிய சாலைகள் உட்பட பல இடங்களில் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விஜயவாடா -...
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்: நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு
admin - 0
நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றது கவனம் பெற்றது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினமா செய்தார். இதை அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆளும் தேசிய ஜனநாயகக்...
சிக்கிமில் உள்ள மேல் ரிம்பி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு சிக்கிம் மாவட்டத்தின் யாங்தாங் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது சேறும், பாறைகளும் அவர்களின் வீட்டைத் தாக்கின. அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நான்காவது நபர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார்.
ஹியூம் நதியின் மீது தற்காலிக மரப் பாலம் அமைத்து காயமடைந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்ட...
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிஜப்பூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் இரண்டு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. மேலும், துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை), சத்தீஸ்கரின் கரியாபந்தில்...
பிஹாரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் அவமதிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் அவர் செல்லவிருந்த சாலையில் அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உ.பி.யின் ரேபரேலி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று தனது தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர் ரேபரேலி செல்லவிருந்த சாலையில் உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப்...










