தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் இந்து அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து தயானந்த சரஸ்வதி சுவாமி, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை கடந்த ஆண்டு ஏப்ரலில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு தொழுகையின்போது மசூதிகள் நிறைந்து விடுவது உண்டு. இதனால் முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே சாலை அல்லது தெருக்களிலும் நின்று தொழுகை செய்து வந்தனர். இதற்கு உபி அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:...
ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார்.
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டு வசதி பற்றிய கணக்கெடுப்பு ஜார்க்கண்டில் மே 16-ம் தேதி தொடங்கியது. இதற்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களை மாநில அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் கர்வா மாவட்டம், துர்கி ஒன்றியம் தட்டிதிரி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்...
கர்நாடக மாநிலம் குடகில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி உடல் நசுங்கி உயிரிழந்தார். கணவரின் கண் முன்னால் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகிற்கு சுற்றுலா சென்றார். இங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் மடிகேரியை...
சுமார் 20,000 டன் எரிவாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்த மார்ஷல் தீவுகளின் கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘சிமி' என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சரக்குக் கப்பல், உலக அளவில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மே 13 அன்று கடந்து, இந்தியத் துறைமுகத்தை வந்தடைந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில்,...
ம.பி.யின் தார் நகரில் உள்ள போஜ்சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் சரஸ்வதி தேவி கோயில்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ம.பி. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தாங்கள் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் முஸ்லிம் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அயோத்தி விவகாரத்துக்கு பிறகு, பிற வழக்குகளிலும் இதேபோன்ற முடிவுகள்எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நாட்டில் மசூதி- கோயில் சர்ச்சை தொடர்பாக 10 வழக்குகள் நீதிமன்றங்களில்...
நீட் வினாத்தாள் கசிவு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) புதிதாக 4 மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நீட், ஜேஇஇ, கியூட், சிமாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் தலைவர் பிரதீப் குமார் ஜோஷி என்டிஏ தலைவராகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் இயக்குநராகவும் செயல்படுகின்றனர்.
மேலும்...
போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, தனது மகனை போலீஸில் ஒப்படைத்ததாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்தார்.
பாஜகவின் தெலங்கானா மாநில முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார் இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்). சட்டம் மற்றும் நீதித்துறை மீதான மிகுந்த மரியாதையுடன், எனது மகன் பண்டி பகீரத்...
விமானப் படைக்காக குஜராத்தில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 போக்குவரத்து விமானம் பரிசோதனைக்கு தயார்
admin - 0
விமானப்படை பயன்பாட்டுக்காக குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள டாடா - ஏர்பஸ் மையத்தில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 போக்குவரத்து விமானம் பரிசோதனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்திய விமானப்படையில் வீரர்கள் மற்றும் சரக்கு போக்கு வரத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆவ்ரோ -748 விமானங்களுக்கு மாற்றாக ஏர்பஸ் நிறுவனத்தின் சி-295 ரக விமானத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதில் 70 வீரர்கள் பயணிக்கலாம், ராணுவத் தளவாட பொருட்களையும் எடுத்துச் செல்லலாம். குறுகிய ஓடுதளத்தில்...
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ நீதிமன்றத்தில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
admin - 0
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை முன் தீவிர வாதிகளின் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் 10 பேர் கைதாகினர். காரை ஓட்டிவந்து வெடிக்கச் செய்த முக்கிய குற்றவாளி புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி என தெரியவந்தது.
டெல்லி பாட்டியாலா...










