இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டு துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதா 2025 உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்ட 13 சட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டு பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,...
சத்தீஸ்கரில் 6 பெண்கள் உட்பட 10 நக்சலைட்கள் நேற்று சரண் அடைந்தனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் நேற்று கூறியதாவது:
அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் போலீஸ், சிஆர்பிஎப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் நக்சலைட்கள் சரண் அடைந்தனர். இவர்களை பற்றிய தகவலுக்கு மொத்தம் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதன் மூலம் இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு...
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் மனு அளித்ததற்கு 56 முன்னாள் நீதிபதிகள் கடும் எதிர்ப்பு
admin - 0
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவையில் மனு அளிக்கப்பட்டிருப்பதற்கு 56 முன்னாள் நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் கடந்த 9-ம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று...
மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குத் திருட்டு குறித்த எனது செய்தியாளர் சந்திப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வருமாறு அமைச்சர் அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விடுத்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அவர் தவறான...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் சென்றடைந்த அவரை ஆளுநர் அஜய் குமார் பல்லா வரவேற்றார்.
இதையடுத்து அவர் லோக் பவனுக்கு புறப்பட்டார். 2022 ஜூலையில் குடியரசுத் தலைவராக முர்மு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர் மணிப்பூருக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, மணிப்பூரின் பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சேனாபதி மாவட்டத்துக்கு...
தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்பி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் இரவு விருந்து அளித்தார்.
டெல்லியில் எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிஹாரில் நடைபெற்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக இந்த விருந்து நடைபெற்றது.
பொறுப்புணர்வுடன் மக்களுக்கு பணியாற்றுமாறு விருந்தில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு...
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் போராடுங்கள்: மம்தா
admin - 0
மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் பெண்கள் போராட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மேற்குவங்கத்தின் கிருஷ்ணாநகரில் நேற்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி.ஜெபி மாத்தர் ஹிஷாம் நேற்று பேசியதாவது: கேரள மாநிலம் கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக அளவில் போலி மருந்துகள் புழக்கம் குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
இது ஒரு சிறிய தவறு அல்ல. இந்த சோதனைகள் கேரள மருந்து கட்டுப்பாட்டு துறையின் முழுமையான தோல்வியை, திறமையின்மையை அம்பலப்படுத்துவதாக உள்ளது. மாநில மருந்து கட்டுப்பாட்டு துறையின் அலட்சியத்தால்...
உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கத்தில் பங்கேற்று உரிமை கோரப்படாத பணத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை, பரஸ்பர நிதி நிறுவனங்களில், பல ஆயிரம் கோடி ரூபாய் பல்வேறு காரணங்களால் பொதுமக்களால் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக ‘உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கம்' கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து லிங்க்டு...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இணையத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், வரும் 23-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், 29-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரையிலும், மற்றும் ஜனவரி 25-ம் தேதி ரதசப்தமி போன்ற நாட்களில்...
