Google search engine
இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாஜக எம்.பியும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் “தவறான தகவலை தெரிவித்தமைக்காக எனது குழு மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப உள்ளது. எந்தவொரு ஜனநாயக நாட்டைப் பற்றிய தவறான தகவலும்...
மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை மகா கும்பமேளாவில் நடைபெற்ற முதலாவது அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி "மகா கும்பமேளாவில் பக்தி, ஆன்மீகம் ஆகியவற்றின் அற்புதமான சங்கமம். மகர சங்கராந்தியை முன்னிட்டு மகாகும்பமேளாவில் முதல் அமிர்தக் குளியலில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவில் மகர சங்கராந்தி: குளிர்காலத்தின்...
டெல்லி பாரத மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 'மிஷன் மௌசம்' எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் - இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 'ஐஎம்டி விஷன்-2047' ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். மேலும் நிகழ்ச்சியின் போது நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய...
காஷ்மீரின் சோனமார்க் பகுதியில் புதிய சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், “நான் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று உறுதி அளித்தார். காஷ்மீரில் இருந்து லடாக் எல்லைக்கு சோனமார்க் மலைப்பாதை வழியாக கடந்து செல்ல வேண்டும். பனிச்சரிவு, நிலச்சரிவு காரணமாக சோனமார்க் மலைப் பாதை பல மாதங்கள் மூடப்பட்டிருக்கும். எனவே குளிர், மழைக்காலங்களில் லடாக் எல்லையில் முகாமிட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு விமானங்கள்...
4 குழந்தைகளைப் பெறும் இளம் பிராமண தம்பதிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பண்டிட் விஷ்ணு ரஜோரியா பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வருகிறார். இது மாநில அமைச்சருக்கு நிகரான பதவியாகும். இந்நிலையில் போபாலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பண்டிட் விஷ்ணு ரஜோரியா பேசியதாவது: நாம் நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை...
அமெரிக்​கா​வின் தாமஸ் மெர்​ரிட் நால்ஸ் என்பவரின் மகனாகப் பிறந்​தவர் வைஸானந்த் கிரி. தனது 15 வயதில் ஆதி சங்கராச்​சா​ரி​யாரின் கொள்கைகளால் வைஸானந்த் ஈர்க்​கப்​பட்​டார். பிறகு, நிரஞ்சனி அகாடா​வின் வாராணசி மடத்​தின் மகரிஷி மகேஷ் யோகி​யின் தொடர்​பில் வந்தார். பின்னர் அவரது பெயர் வைஸானந்த் கிரி என மாற்​றப்​பட்​டது. அதன்​பின் இந்து மதக் கொள்​கைகளை பின்பற்றி, யோகாகலை நிபுணரானார். கடந்த 2013-ல் பிரயாக்​ராஜின் கும்​பமேளா​வில் நிரஞ்சனி அகாடா​வில் இணைந்​தவர் அதன் தலைவர்...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று...
பாதுகாப்பு படைகளின் போர்த் திறன் மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை ஊக்குவிக்கும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இந்தியா 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: ஆயுதப் படைகளுக்கு தேவையான போர்க் கருவிகள் மற்றும் போர்த் திறனை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து ரூ.63,000 கோடி...
இந்த ஆண்டில் பார்க்க வேண்டிய முதல் 52 இடங்கள் பட்டியலில் அசாம் மாநிலம் 4-ம் இடம் பிடித்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அழகு, உயர்வான கலாச்சாரம், பசுமையான தேயிலை தோட்டங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள அசாம் மாநிலம், இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவம் கிடைப்பது நிச்சயம். இந்நிலையில், இந்த ஆண்டில் உலக அளவில்...
வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சச்சின் பைலட் நேற்று கூறியதாவது: டெல்லி பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வரும்பட்சத்தில் " யுவா உடான் யோஜனா" திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நன்றாக படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் டெல்லி இளைஞர்களுக்காக இந்த திட்டம்...