Google search engine
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் அதிவிரைவு பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ரயிலின் இரண்டு பேட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வண்டி எண் 18189-ன் பி-1 மற்றும் எம்-2 ஆகிய இரண்டு பெட்டிகளில் தீ பரவியது....
டெல்​லி​யின் துவாரகா பகு​தி​யில் விசா இல்​லாமல் வெளி​நாட்​டினர் சிலர் தங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​துள்​ளது. கடந்த 24-ம் தேதி அங்கு போலீ​ஸார் சோதனை நடத்திய ​போது, நைஜீரி​யா​வைச் சேர்ந்த 7 பேர் விசா காலம் முடிந்த பின்​னரும் தங்கி இருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவர்​களை வெளி​நாட்​டினர் மண்டல பதிவு அலு​வல​கத்​தில் ஆஜர்​படுத்தி உள்​ளனர். அவர்​களை நாடு கடத்​து​மாறு பதிவு அலு​வலக அதி​காரி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, நாடு​கடத்​தும் நடை​முறை​களை முடிக்​கும் வரை​யில்...
பிஹார் மாநிலத்​தின் ஜாமுயி மாவட்​டத்​தில் லகா​பான் மற்​றும் சிமுல்​தாலா ரயில் நிலை​யங்​களுக்கு இடையே சரக்கு ரயி​லின் 8 பெட்​டிகள் நேற்று முன்​தினம் இரவு 11.25 மணிக்கு தடம்புரண்​டன. இதனால் 20-க்​கும் மேற்​பட்ட ரயில் சேவை​கள் பாதிக்​கப்​பட்​டன. தடம்​புரண்ட பெட்​டிகளை அகற்​றும் பணி, போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று வரு​கிறது. இந்த விபத்து காரண​மாக இந்த வழித்​தடத்​தில் செல்​லும் பல எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. பல ரயில்​கள் தன்​பாத் - கயா வழித்​தடத்​தில்​...
ஆர்​எஸ்​எஸ் அமைப்பை பாராட்​டிய விவ​காரத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் திக் விஜய் சிங்​குக்கு சசி தரூர் எம்.பி. ஆதரவு தெரி​வித்​துள்​ளார். மத்​திய பிரதேசத்தை சேர்ந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் திக்​விஜய் சிங் சமூக வலை​தளத்​தில் பிரதமர் மோடி​யின் பழைய புகைப்​படத்தை பதி​விட்டு ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் ஒழுக்​கம், கட்டுப்​பாட்டை புகழ்ந்​தார். அதோடு காங்​கிரஸின் கட்​டமைப்​பு​களை வலுப்​படுத்த ராகுல் கவனம் செலுத்த வேண்​டும் என்​றும் அவர் குறிப்​பிட்​டார். இந்த சூழலில் காங்​கிரஸ் கட்​சி​யின் 140-வது...
காஷ்மீர் முன்​னாள் முதல்​வரும் மக்​கள் ஜனநாயக கட்​சி​யின் (பிடிபி) தலை​வரு​மான மெகபூபா முப்​தி, ஸ்ரீநகரில் நேற்று நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தார். அப்​போது அவர் காஷ்மீரி மொழி​யில் பேசி​னார். சில நிருபர்​கள் குறுக்​கிட்​டு, உருது மொழி​யில் பேசு​மாறு வற்​புறுத்​தினர். அப்​போது மெகபூபா முப்தி கூறும்​போது, “காஷ்மீரி மொழிக்கு மதிப்பு அளி​யுங்​கள். நமது மொழியைக் காப்​பாற்ற வேண்​டியது நமது கடமை. தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினிடம் ஆங்​கிலம் அல்​லது உருது மொழி​யில் பேச கோரு​வீர்​களா?”...
திருப்​ப​தி​யில் உள்ள மத்​திய சம்ஸ்​கிருத பல்​கலைக்​கழக வளாகத்​தில் 29-ம் தேதி வரை நடை​பெற உள்ள பார​திய அறி​வியல் சம்​மேளனத்தை நேற்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, மத்​திய அமைச்​சர் ஜிதேந்​தர் சிங் மற்​றும் ஆர் எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் ஆகியோர் குத்து விளக்​கேற்றி தொடங்கி வைத்​தனர். அப்​போது சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: நம்​முடைய புராணங்​கள், இதி​காசங்​கள் குறித்து நம் பிள்​ளை​களுக்கு சிறு வயது முதலே நாம் சொல்லி கொடுக்க...
முன்​னாள் பிரதமர் மன்​மோகன் சிங்​கின் முதல் நினைவு தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டதையொட்டி காங்​கிரஸ் தலை​வர்​கள் அவருக்கு அஞ்​சலி செலுத்​தினர். காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறிய​தாவது: பணிவு, நேர்​மை, புத்​தி​கூர்​மைக்கு சிறந்த எடுத்​துக்​காட்​டாக விளங்​கிய​வர் மன்​மோகன் சிங். நாட்​டின் பொருளா​தா​ரப் பாதையை மறு​வடிவ​மைத்து பொருளா​தார சீர்​திருத்​தங்​கள் மூலம் லட்​சக்​கணக்​கான மக்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை விரிவுபடுத்​தி​ய​வர். கோடிக்​கணக்​கான மக்​களை வறுமையி​லிருந்து மீட்​ட​வர். மன்​மோகன் சிங்​கின் தொலைநோக்கு பார்​வை​யின் கீ்ழ் நாங்​கள் ஒரு வலிமை​யான இந்​தி​யாவை...
அசாம் மாநிலத்தின் பழங்குடியினத்தவர் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பிஹார் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பழங்குடியினத்தவர்கள் கோரி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சில நாட்களுக்கு முன்னர் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், ரபா, மைசிங், திவா ஆகிய 3 பழங்குடியினத்தவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் ஒருவரை நியமிப்பதாக அமித் ஷா உறுதி அளித்தார். இதற்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள மாநில தலைநகர் திரு​வனந்​த​புரம் மேய​ராக பாஜக.வைச் சேர்ந்த வி.​வி.​ராஜேஷ் நேற்று பதவி​யேற்​றார். கேரளா​வில் நடை​பெற்ற உள்​ளாட்​சித் தேர்​தலில் பாஜக கணிச​மான இடங்​களில் வெற்றி பெற்​றது. தலைநகர் திரு​வனந்​தபுரம் மாநக​ராட்​சி​யில் மொத்​தம் உள்ள 101 வார்​டு​களில் பாஜக 50 இடங்​களை கைப்​பற்​றியது. மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணிக்கு 29, காங்​கிரஸ் கூட்​ட​ணிக்கு 19 வார்​டு​கள் கிடைத்​தன. 2 வார்​டு​களில் சுயேச்​சைகள் வெற்றி பெற்று உள்​ளனர். கடந்த 45 ஆண்​டு​களாக திரு​வனந்​த​புரம் மாநக​ராட்சி மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணி​யின்...
முன்​னாள் பிரதமர் வாஜ்​பா​யின் 101-வது பிறந்​த ​நாளை முன்​னிட்டு டெல்​லி​யில் 100 அடல் உணவகங்​களை முதல்​வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்​தார். பின்னர் அவர் கூறியதாவது: தின​மும் இரண்டு வேளை உணவு கிடைக்க போ​ராடும் மக்​களுக்கு திருப்​தி​யான உணவு பத்​தில் ஒரு பங்கு விலை​யில் கிடைத்​தால் எப்​படி சந்​தோஷப்​படு​வார்​கள் என்​பதை கற்​பனை செய்து பாருங்​கள். டெல்லி அரசு தற்​போது அந்த கனவை நனவாக்​கி​யுள்​ளது. அடல் உணவகங்கள் ஒரு நாளைக்கு 2...