கேரள மாநிலத்தில் விருது பெற்ற 62 வயது விவசாயி ஒருவர் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செறுபுழா அருகே உள்ள இடவரத்தைச் சேர்ந்தவர் அம்பாட்டு இலியாஸ் (62). விவசாயியான இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணூர் மற்றும் அண்டை மாவட்டமான காசர்கோடு மலைப் பகுதிகளில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறி பயிரிட்டு வந்தார்.
மேலும் மாநில அரசின் சிறந்த விவசாயிக்கான...
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடும் என்று...
2016-ல் ‘அன்சார் இன்டரிம்’ பெயரில் தீவிரவாத அமைப்பை உருவாக்கிய மருத்துவர்கள்: என்ஐஏ விசாரணையில் தகவல்
admin - 0
கடந்த 2016ம் ஆண்டிலேயே பல மருத்துவர்கள் இணைந்து அன்சார் இன்டரிம் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் காரில் இருந்த மருத்துவர் உமர் இந்த தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது....
காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட போலி வங்கி கணக்குகளை பாதுகாப்பு முகமைகள் கண்டறிந்து முடக்கியுள்ளன. இந்த வங்கி கணக்குகள் மூலம் திரட்டப்படும் நிதி, பிரிவினைவாத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் சைபர் குற்றங்களின் நிதி ஆதாரமாக இத்தகைய கணக்குகள் விளங்குகின்றன. திருடப்பட்ட பணத்தை, யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் ‘கிரிப்டோ கரன்சி’களாக மாற்றுவதற்கு இக்கணக்குகளே முக்கியப்...
எப்ஸ்டீன் விழாவில் கபில் சிபலுக்கு விருது வழங்கப்பட்டது: பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு
admin - 0
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் 2019 ஜூலை மாதம் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், அவர் சேகரித்து வைத்திருந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின்படி பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதில், அதிபர் ட்ரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் பாஜக...
ஜார்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில், காட்டு யானைகள் கூட்டம் நேற்று ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பொதுமக்களைத் தாக்கி வரும் யானைக் கூட்டம், வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். அவன்...
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு எடுத்தது. பின்னர் அந்த முடிவை திரும்பப் பெற்றது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டு தெரிவிப்பது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவுக்கு சசி தரூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏஐ-யால் உருவாக்கப்படும் போலி செய்திகள் நல்லதல்ல. அந்த வீடியோவில் வருவது...
கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45) கடந்த 9-ம் தேதி பள்ளியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை நல்கூரில் உள்ள தேனீ வளர்ப்பு பண்ணைக்கு ஆய்வுப் பணிக்காக சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு திறந்த வாகனத்தில் ஏறி, நின்றவாறு சென்ற...
ம.பி.யின் காண்டவா நகரின் போலீஸ் லைன் பகுதியில் காவல் துறையினரின் வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி இரவு இரு காவலர்களின் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் திருடுபோனது. இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் அலிராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அலிராஜ்பூரில் போலீஸ்காரர்...
வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அசாம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இவர்களை திருப்பி அனுப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு ஊடுருவல் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. எஸ்ஐஆர் பணியின் போது ஊடுருவல்காரர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களது பெயர் நீக்கப்படுகின்றன.
இந்நிலையில் வரும் 20-ம் தேதி அசாம் மாநிலத்தின் சசார் மாவட்டத்தில் உள்ள நதன்பூர் கிராமத்துக்கு அமைச்சர் அமித் ஷா...










