Google search engine
மேற்கு வங்க மாநிலம் ஐ-பேக் நிறு​வனத்​தில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது தொடர்​பான வழக்கு கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ஏற்​பட்ட கூச்​சல் குழப்​பத்​தால் கோபமடைந்த நீதிபதி வழக்கு விசா​ரணையை ஜனவரி 14-க்கு ஒத்​தி​வைத்து உத்​தர​விட்​டார். மேற்கு வங்க மாநிலத்​தில் விரை​வில் சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அரசி​யல் வியூக வகுப்பு நிறு​வன​மாக ஐ-பேக் செயல்​பட்டு வரு​கிறது. இந்த நிறு​வனத்​தில் அண்​மை​யில்...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு உள்ளார். கேரளாவில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோயில் கருவறையின் கதவுகள் மற்றும் பீடத்துடன்கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. அதன் பிறகு 4.5 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு...
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் 2027, ஜனவரி 14 முதல் அர்த்த கும்ப மேளா நடைபெற உள்ளது. இதை பிரம்மாண்டமாக நடத்த மாநில பாஜக அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் அர்த்த கும்பமேளா நாட்களில் உத்தராகண்டின் 100-க்கும் மேற்பட்ட கங்கை படித்துறைகள், முக்கிய இந்து வழிபாட்டுத் தலப்பகுதியில் இந்துக்கள் அல்லாதோருக்கு தடை விதிக்க இந்துத்துவாவினர் வலியுறுத்துகின்றனர். இதுதொடர்பாக 1916-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹரித்வார் நகராட்சி மன்ற துணை விதிகளை கங்கை...
டெல்லி சட்​டப்​பேர​வை கூட்​டத்​தொடர் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், ஆம் ஆத்மி மூத்த தலை​வர் ஆதிஷி, சீக்​கியர்​கள் வணங்​கும் குரு தேஜ் பகதூர் குறித்து அவதூறான கருத்​துகளை கூறிய​தாக ஆளும் பாஜக.​வினர் குற்​றம் சாட்​டினர். அவரை எம்​எல்ஏ பதவி​யில் இருந்து நீக்க வேண்​டும் என்று பாஜக.​வினர் குரல் எழுப்​பினர். இதையடுத்து ஆதிஷி​யின் பேச்​சுகள் அடங்​கிய வீடியோவை தடய​வியல் ஆய்​வுக்கு அனுப்ப சபா​நாயகர் விஜயேந்​திர குப்தா உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், நேற்று காலை பேரவை கூடியது....
கடந்த ஆண்டு நவம்​பரில் குரு தேஜ் பகதூரின் 350-வது தியாக தினத்தை முன்​னிட்​டு, டெல்லி அரசு நடத்​திய நிகழ்ச்சி குறித்த சிறப்பு விவாதம் டெல்லி சட்​டப்​பேர​வை​யில் கடந்த செவ்வாய்க்​கிழமை நடை​பெற்​றது. இதில், குரு தேஜ் பகதூருக்கு எதி​ராக எதிர்க்​கட்​சித் தலை​வர் ஆதிஷி சில கருத்துக்களைக் கூறிய​தாக பாஜக குற்​றம்சாட்டி உள்ளது. இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளத்​தில் பகிரப்பட்டது. நேற்று காலை​ சட்​டப்​பேரவை கூடியதும், இந்த விவ​காரத்தை எழுப்​பிய பாஜக உறுப்​பினர்​கள்,...
பிரதமர் மோடி தனது ‘எக்​ஸ்' வலை​தளத்​தில், ”ஆயிரம் ஆண்டுக்கு முன் 1026 ஜனவரியில் சோமநாதர் கோயில் முதல் தாக்குதலை எதிர்கொண்டது. 1026-ம் ஆண்டு தாக்குதலும், அதன்பின் நடைபெற்ற தாக்குதல்களும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை குறைக்கவோ, சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பிய உணர்வை உடைக்கவோ முடியவில்லை” என்று கூறியுள்ளார். இக்கோயில் வளாகத்தில் சுயமரி​யாதை விழா 11-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இறுதி நாள் விழா​வில் பிரதமர் பங்​கேற்​கிறார்.
கொல்​கத்​தா​வில் உள்ள ஐ-பேக் நிறுவன அலு​வல​கம், அதன் இயக்​குநர் வீடு மற்​றும் டெல்​லி​யில் உள்ள 4 இடங்​கள் உட்பட 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். மேற்கு வங்க மாநிலத்​தில் ஈஸ்​டர்ன் கோல்​பீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்​த​மான சுரங்​கத்​தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்​கரி தோண்டி எடுக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக 2020-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்​கின்...
வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்காக மேற்​கு​வங்​கத்​தில் ஆன்​லைன் விசா​ரணை நடைமுறை விரை​வில் தொடங்​கப்பட உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் கடந்த நவம்​பர் 4ம் தேதி முதல் டிசம்​பர் 11ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்​றது. கடந்த டிசம்​பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 58,20,898 வாக்காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. மேலும் எஸ்​ஐஆர் படிவங்​களை முறை​யாக பூர்த்தி செய்​யாத...
கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்​டாக உடைந்​தது. தற்​போது உத்​தவ் தாக்​கரே தலை​மை​யில் ஓர் அணியும், மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலைமையில் மற்​றொரு அணி​யும் செயல்​படு​கின்​றன. இதுதொடர்​பாக உத்​தவ் தாக்​கரே பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: “கடந்த 2014, 2019ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல்​களில் பிரதமர் நரேந்​திர மோடிக்​காக நான் தீவிர பிரச்​சா​ரம் செய்​தேன். இரு​முறை மோடிக்கு உதவி செய்​த​...
காங்கிரஸ் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான சுரேஷ் கல்​மாடி நேற்று அதி​காலை கால​மா​னார். அவருக்கு வயது 81. இதுகுறித்து குடும்ப வட்​டாரங்​கள் கூறுகை​யில் “வயோ​தி​கம் காரண​மாக நீண்ட காலம் நோய்​வாய்ப்​பட்​டிருந்த சுரேஷ் கல்​மாடி நேற்று அதி​காலை 3.30 மணி அளவில் கால​மா​னார்” என்று தெரி​வித்​தன. சுரேஷ் கல்​மாடி​யின் உடல் மகாராஷ்டிர மாநிலம் எரண்ட்​வானே பகு​தி​யில் உள்ள அவரது இல்​லத்​தில் பொது​மக்​களின் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்டு இறு​திச் சடங்​கு​கள் நவி பேட்​டை​யில் உள்ள...