Google search engine
தமிழ் சினி​மா​வின் வரலாற்றை பார​தி​ராஜாவுக்கு முன், பார​தி​ராஜாவுக்​குப் பின் என்று பிரித்​துப் பார்க்​கலாம். அவர் புதிய கதைகளைச் சொன்ன இயக்​குநர் மட்​டுமல்ல; தமிழ் சினி​மா​வின் காட்சி மொழியையே (Visual Language) மாற்​றிய​வர். அவரது வருகை கதை​யிலும், கதா​பாத்​திரங்​களி​லும் மட்​டுமல்​லாமல், கேமரா எங்கு நிற்க வேண்​டும், எதைப் பார்க்க வேண்​டும், ஒளியை எவ ​வாறு பயன்​படுத்த வேண்​டும், இயற்​கையை எப்​படிக் கதை சொல்​லலின் ஒரு பகு​தி​யாக மாற்ற வேண்​டும் என்​ப​தி​லும் மாபெரும்...
சனந்த், மடோனா செபாஸ்​டியன், இமயா நடித்துள்ள படம் ‘ஹார்ட்டின்’. ரொமான்​டிக் காமெடி படமான இதை அறி​முக இயக்குநர் கிஷோர் குமார் இயக்​கி​யுள்​ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்​.ர​வீந்​திரன், ஸ்டெப் ஒன் ஸ்டூடியோஸ் தயாரிக்​கும் இந்​தப் படத்​துக்கு முகேஸ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ராஜேஷ் முரு​கேசன் இசையமைத்​துள்​ளார். ஜூன் 26-ல் வெளியாகும் இப்​படத்​தின் இசை மற்​றும் முன்​னோட்ட வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர் கிஷோர் குமார் பேசும்​போது, “இந்​தப் படத்​தில் 2 வெவ்வேறு உலகங்​களைக்...
சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இதில், சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக் ஷன் ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. கடலின் பிரமாண்டமான...
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச​ராவ் இயக்​கத்​தில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ என்ற படம் கடந்த வெள்​ளிக்​ கிழமை வெளியானது. இதில் நடிகை நிவேதா பெத்​து​ராஜ் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். இப்​படத்​தின் வெற்றி விழா ஹைத​ரா​பாத்​தில் நடைபெற்​றது. அதில் பேசிய நிவேதா பெத்​து​ராஜ், திரைத் துறையில் இருந்து விலக முடிவு செய்​திருந்​த​தாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்​போது, “கடந்த 2023ம் ஆண்​டில், திரைத்​துறையில்​ இருந்து முற்​றி​லும் வில​கி​விடலாம் என தீவிர​மாக யோசித்​துக்​ கொண்​டிருந்​தேன். அந்த...
துல்​கர் சல்​மான் கதா​நாயக​னாக நடிக்​கும் தெலுங்கு படம், ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இப்​படத்​தில் நடிக்க, தெலுங்கு நடிகை ஒரு​வரை காஸ்​டிங் டைரக்​டர் பிர​சாத் என்​பவர் தொடர்பு கொண்டார். அவர் மூல​மாக அதில் நடிக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. அவருக்​குச் சம்​பள​மாக ரூ.90 ஆயிர​மும் கார் வாடகைக்​காக ரூ.38 ஆயிரம் தரு​வ​தாக​வும் பிர​சாத் ஒப்​புக்​கொண்​டிருந்​தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகும் பணத்​தைத் தரவில்லை. இதுகுறித்து தொடர்ந்து கேட்​ட​போது, கடந்த பிப்​ர​வரியில் ஹைதரா​பாத் பாஞ்​சரா ஹில்​ஸில்...
‘துருவ நட்​சத்​திரம்’ திரைப் படத்தை ஜூன் 15-ம் தேதிக்​குள் வெளியிட அனு​மதி அளித்து தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்த, மேல் முறை​யீட்டு வழக்கை தள்​ளு​படி செய்து சென்னை உயர் நீதி​மன்ற இரு நீதிப​தி​கள் அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்​கத்​தில் விக்​ரம் நடித்​துள்ள திரைப்படம், ‘துருவ நட்​சத்​திரம்’. நிதிப்​பிரச்னை தொடர்​பாக, பைனான்​சி​யர்​கள் புண்​ணி​யமூர்த்​தி, பிரேம்​ கு​மார் ஆகியோர் தாக்​கல் செய்த வழக்​கில், இப்படத்தை வெளி​யிட கடந்த 2023ம்...
இந்​தித் தொலைக்​காட்​சித் தொடர் நடிகை ​சஞ்​சிதா உகாலே (22) தற்கொலை செய்து கொண்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்படுத்தியுள்ளது. இந்​தி​யில் வெளி​யான ‘கும்​கும் பாக்​யா’, ‘தில்​வாலி துல்ஹா லே ஜாயேகி’, ‘க்​ரைம் பேட்​ரோல்’ உள்பட பல சின்​னத்​திரை தொடர்களில் நடித்​திருப்​பவர் சஞ்​சிதா உகாலே. இவர் மும்பை அருகிலுள்ள நலசோபரா பகு​தி​யில் குடும்​பத்​துடன் வசித்து வந்தார். இந்​நிலை​யில் வீட்​டில் சேலை​யால் ஃபேனில் தூக்​குப் ​போட்​டுத் தற்​கொலை செய்​து​கொண்​டார். அவர் உடலைக் கைப்​பற்​றிய போலீ​ஸார், அது...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வரும் சூழலில், அது குறித்து நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல்களில் சிக்கியுள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து அந்த பேட்டியில் பேசிய மகேந்திரன், “கரன்ட் போகுதா? சோலார் சிஸ்டம் என்று ஒன்று கண்டுபிடித்தார்கள். யாராவது அதை முயற்சி செய்தீர்களா? இவ்வளவு நாட்களாக பவர்கட் இல்லாமல் ஜாலியாக...
ஒய்​.ஜி.மகேந்​தி​ரா, சத்​ய​ராஜ், சமுத்​திரக்​க​னி, சுஹாசினி, தலை​வாசல் விஜய், ரம்யா பாண்​டியன் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்படம்​, ‘​சா​ரு​கேசி’. அருண்​.ஆர் தயாரித்​துள்ள இந்​தப் படத்​தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்​கதை எழுதி இயக்கி உள்​ளார். தேவா இசையமைத்​துள்ள இப்​படம் கடந்த வெள்​ளிக்​கிழமை வெளி​யானது. கரு​னாடக இசைப் பின்​னணி​யில் உரு​வான இப்​படம் பற்றி நடிகர் ரஜினி​காந்த் கூறும்​போது, “இந்​தப் படம் எனக்கு அதி​கம் பிடித்திருந்​தது. ஏனென்​றால் இதன் கதை அப்​படி. கரு​னாடக இசைப் பின்​னணியில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இப்படத்துக்​குத்...
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட க்ளிஷே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. ஒன்று அந்தக் கதாபாத்திரம் முழு எதிர்மறையாக காட்டப்பட்டிருக்கும் அல்லது ‘பாய்’ என்ற அடைமொழியுடன் மிகைப்படுத்தப்பட்ட நேர்மறையாக காட்டப்படும். இத்தகைய சூழலில்தான் தமிழ் முஸ்லிம்களின் அசல் வாழ்வியலையும், அவர்களின் அன்றாட இன்ப துன்பங்களையும், கலாச்சாரக் கூறுகளையும் துளியும் சிதையாமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் கொண்டு வந்துள்ளது...