தமிழ் சினிமாவின் வரலாற்றை பாரதிராஜாவுக்கு முன், பாரதிராஜாவுக்குப் பின் என்று பிரித்துப் பார்க்கலாம். அவர் புதிய கதைகளைச் சொன்ன இயக்குநர் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் காட்சி மொழியையே (Visual Language) மாற்றியவர்.
அவரது வருகை கதையிலும், கதாபாத்திரங்களிலும் மட்டுமல்லாமல், கேமரா எங்கு நிற்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும், ஒளியை எவ வாறு பயன்படுத்த வேண்டும், இயற்கையை எப்படிக் கதை சொல்லலின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்பதிலும் மாபெரும்...
சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடித்துள்ள படம் ‘ஹார்ட்டின்’. ரொமான்டிக் காமெடி படமான இதை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கியுள்ளார்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், ஸ்டெப் ஒன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முகேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். ஜூன் 26-ல் வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் கிஷோர் குமார் பேசும்போது, “இந்தப் படத்தில் 2 வெவ்வேறு உலகங்களைக்...
சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இதில், சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக் ஷன் ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
கடலின் பிரமாண்டமான...
பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ என்ற படம் கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது.
இதில் நடிகை நிவேதா பெத்துராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நிவேதா பெத்துராஜ், திரைத் துறையில் இருந்து விலக முடிவு செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த 2023ம் ஆண்டில், திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகிவிடலாம் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
அந்த...
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படம், ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இப்படத்தில் நடிக்க, தெலுங்கு நடிகை ஒருவரை காஸ்டிங் டைரக்டர் பிரசாத் என்பவர் தொடர்பு கொண்டார்.
அவர் மூலமாக அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்குச் சம்பளமாக ரூ.90 ஆயிரமும் கார் வாடகைக்காக ரூ.38 ஆயிரம் தருவதாகவும் பிரசாத் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகும் பணத்தைத் தரவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து கேட்டபோது, கடந்த பிப்ரவரியில் ஹைதராபாத் பாஞ்சரா ஹில்ஸில்...
‘துருவ நட்சத்திரம்’ திரைப் படத்தை ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம், ‘துருவ நட்சத்திரம்’. நிதிப்பிரச்னை தொடர்பாக, பைனான்சியர்கள் புண்ணியமூர்த்தி, பிரேம் குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், இப்படத்தை வெளியிட கடந்த 2023ம்...
இந்தித் தொலைக்காட்சித் தொடர் நடிகை சஞ்சிதா உகாலே (22) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் வெளியான ‘கும்கும் பாக்யா’, ‘தில்வாலி துல்ஹா லே ஜாயேகி’, ‘க்ரைம் பேட்ரோல்’ உள்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா உகாலே. இவர் மும்பை அருகிலுள்ள நலசோபரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் சேலையால் ஃபேனில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் உடலைக் கைப்பற்றிய போலீஸார், அது...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வரும் சூழலில், அது குறித்து நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல்களில் சிக்கியுள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து அந்த பேட்டியில் பேசிய மகேந்திரன், “கரன்ட் போகுதா? சோலார் சிஸ்டம் என்று ஒன்று கண்டுபிடித்தார்கள். யாராவது அதை முயற்சி செய்தீர்களா? இவ்வளவு நாட்களாக பவர்கட் இல்லாமல் ஜாலியாக...
ஒய்.ஜி.மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘சாருகேசி’.
அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். தேவா இசையமைத்துள்ள இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
கருனாடக இசைப் பின்னணியில் உருவான இப்படம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, “இந்தப் படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது. ஏனென்றால் இதன் கதை அப்படி.
கருனாடக இசைப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்துக்குத்...
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட க்ளிஷே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. ஒன்று அந்தக் கதாபாத்திரம் முழு எதிர்மறையாக காட்டப்பட்டிருக்கும் அல்லது ‘பாய்’ என்ற அடைமொழியுடன் மிகைப்படுத்தப்பட்ட நேர்மறையாக காட்டப்படும்.
இத்தகைய சூழலில்தான் தமிழ் முஸ்லிம்களின் அசல் வாழ்வியலையும், அவர்களின் அன்றாட இன்ப துன்பங்களையும், கலாச்சாரக் கூறுகளையும் துளியும் சிதையாமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் கொண்டு வந்துள்ளது...










