Google search engine

குழித்துறை: லாரி – பைக் மோதல் பேரூராட்சி ஊழியர் உயிரிழப்பு

குமாரபுரம் பேரூராட்சியில் ஓட்டுநராகப் பணிபுரிந்த எட்வின் ஜோஸ் (41), கடந்த 30ஆம் தேதி களியக்காவிளை அருகே அதிவேக கனிம வள லாரி மோதியதில் படுகாயமடைந்து, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

நாகர்கோவிலில் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முன்விரோதம் காரணமாக டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த மதன் (20) என்ற வாலிபர் மீது அகிலன் (21), விக்னேஷ் (21), ஆதி (21) ஆகியோர் இரும்பு குழாயால் தாக்கி படுகாயப்படுத்தினர். இதுகுறித்து மதன் வடசேரி போலீசில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து...

ரீத்தாபுரம்: இந்து முன்னணி சார்பில்  நிர்வாகிகள் கூட்டம்

குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் கணேசபுரம், ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பேரூர் தலைவர் ஆல்வின் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றிய தலைவர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். கூட்டத்தில், ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு...

அருமனை: லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் விபின் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கப்பட்டு காதலித்த அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி அபியா (20), கடந்த 27ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். காதல் ஜோடி நேற்று அருமனை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து,...

குலசேகரம்:   மத வழிப்பாட்டு தலம்; இந்து முன்னணி எதிர்ப்பு

குலசேகரம், மாமுடு பகுதியில் 19 ஆண்டுகளாக ஜெபகூட்டம் நடத்தி வரும் ஒருவர், தனது கட்டிடத்தை புதுப்பிக்க பேரூராட்சிக்கு வரைபட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில், இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட...

கூட்டாலுமூடு: மேரா யுவபாரத் சார்பில் விளையாட்டு போட்டி

கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் மேரா யுவ பாரத் சார்பில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தாளாளர் ராஜகுமார் போட்டிகளைத் துவக்கி வைத்தார். ஓட்டப்போட்டி, வாலிபால் போன்ற பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டன. வெற்றி...

கொல்லங்கோடு:   உயர் ரக போதை பொருள்களுடன் 4 பேர் கைது

குமரி மாவட்டம் வழியாக நேற்றிரவு உயர்ரக எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கேரளா போதைப்பொருள் தடுப்பு போலீசார் செங்கவிளை பகுதியில் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். கார் தமிழகப் பகுதியான கொல்லங்கோடு நோக்கி சென்றது. கேரளா மற்றும் தமிழக போலீசார் வாகனத்தை துரத்தி...

நாகர்கோவில்: முதல்வருக்கு 4500 மனுக்கள் அனுப்பும் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக குளங்களில் மீன் வளர்க்கவும் பிடிக்கவும் முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று வலைகளுடன் நாகர்கோவில் தபால் நிலையம் வந்து, முதல்வருக்கு அனுப்ப 4500 மனுக்களை அளித்து நூதன போராட்டத்தை நடத்தினர்.

நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்: 13 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு பேச்சியப்பன் என்ற கைதியை சிலர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பேச்சியப்பன் முத்துராஜ் என்ற மற்றொரு கைதியை தாக்கியதாக கூறப்படுகிறது.  இது குறித்து துணை ஜெயிலர் அளித்த புகாரின் பேரில், நேசமணி நகர் போலீசார் 13 கைதிகள் மீது...

குழித்துறை: மனைவி இறந்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் (44) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 11 மாதங்களுக்கு முன் இறந்த தனது மனைவியைப் பிரிந்த துயரம் தாங்காமல், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குழித்துறை அரசு மருத்துவமனையில்...