பளுகல்: விபத்தில் 10ம் வகுப்பு மாணவன் பிளஸ்2 மாணவி படுகாயம்
பளுகல் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சௌமியா (16) மற்றும் 10ம் வகுப்பு மாணவர் நிகில் (14) ஆகியோர் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வேகமாகச் சென்றதில், பைக் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி இருவரும் படுகாயமடைந்தனர். நிகில் காரக்கோணம் அரசு மருத்துவக்...
மார்த்தாண்டம்: 16 பைக்குகளுக்கு பூட்டு ;போலீசார் நடவடிக்கை
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் பயணிகள் தங்கள் பைக்குகளை பல நாட்களாக நிறுத்திவிட்டு வெளியூர் செல்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் நள்ளிரவு டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில், நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருந்த 16 பைக்குகளை...
குமரி: அதிகாலை அந்த நேரத்தில்…பெண் அதிர்ச்சி
நேற்று அதிகாலை விண்ணூர் பழஞ்சி வீட்டை சேர்ந்த உஷா (50) சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மறைந்திருந்த மர்ம திருடன் அவரது கழுத்தில் இருந்த தங்க தாலிக் செயினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடினான். தாலியின் ஒரு பகுதி திருடன் கையில் சிக்க, மீதி உஷாவிடம் கிடைத்தது....
குளச்சல்: திருட சென்றவர் பெண்ணுக்கு பாலியல் – கைது
கன்னியாகுமரி மாவட்டம் கீழமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய ஜோஸ் ஆண்டனி (21) என்பவர், குளச்சல் பகுதியில் ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் ஆடையின் அந்தரங்கப் பகுதியை கத்திரிக்கோலால் வெட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குளச்சல்...
நாகர்கோவிலில் மகனை தேடிச் சென்றவர் கொலை
நாகர்கோவில் சரலூர் பகுதியைச் சேர்ந்த ராஜகுமார் (55) என்பவர், தனது மகனைத் தேடிச் சென்றபோது உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலில் ஆதி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
குமரி மாவட்ட ஆதி தமிழர் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குமரி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதி பராமரிப்பு பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன....
குமரி: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று 7-ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'ஸ்டாலின் முகங்கள்' முகாம் நடைபெறுகிறது. நாகர்கோவில், குளச்சல், கொட்டாரம், நெய்யூர், மிடாலம், தூத்தூர் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முகாம்கள் நடைபெறும் இடங்கள்: நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 37க்கு...
நித்திரவிளை: பள்ளி மாணவி பாலியல் – வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை 2017 ஆம் ஆண்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து, பணகுடி பகுதியைச் சேர்ந்த ஆஷிப் முகம்மது (22) என்பவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷிப் முகம்மதுவைக்...
குழித்துறை: பெண்ணிடம் செயின்பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த பிரமிளா என்பவரின் ஐந்தரை பவுன் தங்கச் செயினை கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பறித்ததாகக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சையது அலி (22) மற்றும் மாஹின் (21) ஆகிய இருவர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்....
ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் உண்டியல் பணம் திருடியவர் கைது.
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோவிலில் கடந்த 3-ந்தேதி உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுகுறித்து ஊர் தலைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆலங்கோட்டை புதூரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட...













