தக்கலை: மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
நேற்று காலை பள்ளியாடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த தக்கலை பகுதியைச் சேர்ந்த அகில் ராஜ் (23) என்பவர், தனது பைக்கில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தில் மோதி படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த...
நாகர்கோவிலில் தொழிலாளியை மிரட்டிய ரவுடி கைது.
நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்த தொழிலாளி வில்சனிடம், மேலராமன்புதூரை சேர்ந்த வீரமணி என்பவர் கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வில்சன் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...
குளச்சல்: அதிவேகமாக ஓட்டிய 42 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், போலீஸ் எச்சரிக்கையை மீறி குளச்சல் காந்தி சந்திப்பு மற்றும் அண்ணா சிலை சந்திப்பு பகுதிகளில் இளைஞர்கள் அதிவேகமாகவும், சைலன்சர் குழாய்களை மாற்றி அதிக ஒலி எழுப்பியும் பைக் ஓட்டியுள்ளனர். இதனால்,...
ஆலஞ்சி: போலீசுக்கு கொலை மிரட்டல் ; வாலிபர்கள் மீது வழக்கு
குமரி மாவட்ட அதிரடிப் படையில் டிரைவராகவும், ஆயுதப்படை முதல் நிலை காவலராகவும் பணியாற்றி வரும் அருள்ராஜ் (36), கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர்கள் அவரை கீழே தள்ளி காயப்படுத்தி, அரசு பணி செய்யவிடாமல் கெட்ட வார்த்தை பேசி கொலை...
கோட்டார் பகுதியில் 27 மது பாட்டில்கள் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் நேற்று முன்தினம் வடலிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 76 வயதான ஏசுதாஸ் என்பவர் 27 மதுபாட்டில்களுடன் பிடிபட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ஏசுதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குமரி: விபத்து – வாலிபர் பலி; பெண் உட்பட 4 பேர் படுகாயம்
நேற்று அதிகாலையில் மண்டைக்காடு பகுதியில் பைக்கில் சென்றபோது ஜெப்ரின் ஜோ என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் உடையார்விளையை சேர்ந்த ஜான் பிரகாஷ் (22), ஆதித்தன் (21) மற்றும் இரு பைக்குகளில் இருந்த பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட...
படந்தாலுமூடு: இறால் பண்ணை ஊழியர் குளியல் அறையில் உயிரிழப்பு
படந்தாலூமூடு பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த அனுப் (36) என்பவர், நேற்று குளியலறை கதவு பூட்டிய நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கதவை உடைத்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக்...
தக்கலை: கல்லூரிக்கு சென்ற பேராசிரியர் மாயம்
தக்கலை, புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுப்பிரமணியன் என்பவர் களியக்காவிளையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்ஃபோனும் அணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில்...
குமரி: கடலில் கிறிஸ்மஸ் கொண்டாடிய வாலிபர் பலி
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரெஜின் ஜாஸ்பின் (34) என்பவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குளச்சல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து 9 பேருடன் படகில் கடலுக்குச் சென்றபோது, கரை திரும்பும் போது படகிலிருந்து கீழே இறங்கும்...
நாகர்கோவில்: சென்டர் மீடியன்களை அகற்ற கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட சென்டர் மீடியன்கள் தற்போது விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன. குறுகிய சாலைகளில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால், இந்த சென்டர் மீடியன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













