சுழன்றடித்த அண்ணாமலையை சும்மா இருக்க வைத்துவிட்டார்கள்! – வார் ரூம் கலைப்பு… பிரஸ் மீட் தவிர்ப்பு!
admin - 0
மாநில தலைவராக அண்ணாமலை இருந்தவரைக்கும் தமிழக பாஜக பரபரப்பான கட்சியாகப் பார்க்கப்பட்டது. திமுக, அதிமுக கொடிகள் கட்டிய கார்களுக்கு நிகராக பாஜக கொடி கட்டிய கார்களும் பட்டி தொட்டிகளில் கூட பவனி வந்தன. ஆனால், தற்போது இவை அனைத்துமே ஸ்லீப் மோடுக்குப் போய்விட்டது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது. போதாக்குறைக்கு, அதிரடி அரசியல்வாதியான அண்ணாமலையும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழிக்குமளவுக்கு ‘சும்மா’ இருக்கிறார்.
தமிழக பாஜக-வின் புதிய தலைவராக...
திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை சரிவர அள்ளப்படாத காரணத்தால் சுகாதாரச் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கொசுக்களை அழிப்பதற்காக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கொசு மருந்து அடிப்பதில்லை.
மேலும், இப்பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை....
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-21 வரை எம்எல்ஏவாகப் பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். அதே காலத்தில் அவரது கணவரான பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக இருந்தார்.
பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதன் பின்னர் கட்சிப் பணிகளில் தீவிரமாக சத்யா பன்னீர்செல்வம்...
வீடுகளுக்கு வரும் திமுகவினரிடம் மக்கள் கேள்விகளை கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிசிடிவி காட்சிகள் கிடைத்து 5 நாட்கள் ஆகியும், இன்னும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை....
சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜரானதால் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு வாபஸ்
admin - 0
வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி சொல்லாததால் சிஎம்டிஏ உறுப்பினர் செயலரைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானதால் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரத்தினசபாபதி என்பவர், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக சென்னை 19-வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதில்...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலை நேற்று, அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இரவுநேரக் கடைகள் இடையூறு இன்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். வணிகர்கள் மீதான காவல் துறை அத்துமீறல்களை தடுக்க வேண்டும். மேலும் வணிகர்கள் மீதான கொலை, கொள்ளை சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். புகையிலைப் பொருட்கள் விற்பனை...
“திமுக கூட்டணியை உடைக்க பாஜக போடும் சதி திட்டங்களுக்கு மல்லை சத்யா உடந்தை!” – மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன் பதிலடி
admin - 0
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் துரோகி பட்டம் சுமத்தப்பட்ட மல்லை சத்யா, தனது மனக்குமுறலை ‘இந்து தமிழ் திசை’ நேர்காணலில் விரிவாகப் பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார் மதிமுக பொருளாளர் செந்திலதிபன்.
கண்ணப்பன், எல்ஜி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களைப் போல், தனக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் மல்லை சத்யா சொல்கிறாரே?
நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வேளச்சேரி மணிமாறன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் போன்ற...
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை...
காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதியதில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தர்மராய ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (48). இவர் வீட்டிலேயே கார் பழுது பார்க்கும் பணிமனை நடத்தி வந்தார். இவரது மனைவி லதா (45). இளைய மகன் தினேஷ்(20).
இந்நிலையில், வெங்கடேசன் நேற்று காலை தனது மனைவி லதா, மகன் தினேஷ் ஆகியோருடன் காரில்...
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் 10-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓவியம், இசை, உடற்கல்வி, கணினி என பல்வேறு பாடங்களைப் பயிற்றுவிக்க...








