சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 வழக்கறிஞர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசுதிரும்ப அனுப்பியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றி, உரிய பிரதிநிதித்துவம் வழங்கி, புதிய முன்மொழிவை அனுப்புமாறு மத்திய சட்டத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 56 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 19 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக...
அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்து அதிரடியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அண்ணா பிறந்த நாளான வரும் 15-ம் தேதி இந்த கெடு முடியும் நிலையில், அவர் பெயரில் இயங்கும் அதிமுக அந்த நாளில் முக்கிய திருப்பத்தைச் சந்திக்குமா என்ற கேள்வியை அரசியல் அரங்கில் எழுப்பிவிட்டிருக்கிறார் செங்கோட்டையன்.
அதிமுக-வில் இருந்து சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்பது நீக்கப்பட்டவர்கள்...
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..! – சரத்குமாரை தூண்டிவிட்டு பாண்டியராஜனுக்கு பள்ளம் பறிக்கிறாரா பாலாஜி?
admin - 0
2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜியோ, “விருதுநகரை கேட்டு வாங்குங்கள்; உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன்” என்று பாஜக-வில் இருக்கும் நடிகர் சரத்குமாரை கொம்பு சீவுவதாகச் சொல்கிறார்கள்.விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக எல்லைக்குள் உள்ள விருதுநகர் தொகுதியில் மாஃபா பாண்டியராஜனும்,...
தெரு நாய் விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நலச்சங்கத்தினர், தெரு நாய்களை பிடித்து செல்ல பணம் வழங்குகின்றனர். மாநகராட்சியும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நாய்களை பிடித்து ஏழைகள், நடுத்தர வர்த்தகத்துக்கு கீழுள்ளவர்களின் பகுதிகளில் தெரு நாய்களை விட்டு விடுகின்றனர்.
இதுதான் நாய்க்கடிக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். இந்த விஷயத்தில்...
தமிழ்நாடு மின்உற்பத்திக் கழக வணிக பிரிவு தலைமைப் பொறியாளர் அனுப்பிய சுற்றறிக்கை: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்களை கேட்பதால், வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
இந்தப் பணிகளை வேகப்படுத்தும் வகையில், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டியதில்லை என அறிவுறுத்தப்படுகிறது.
அதேநேரம், விற்பனை, பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்ற நேர்வுகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், விற்பனை பத்திரம்,...
நண்பரின் கிட்னி தானத்தை ஏற்று சிகிச்சை தர அனுமதி: நட்பை ஆவணப்படுத்த முடியாது என நீதிமன்றம் கருத்து
admin - 0
குடும்ப நண்பரின் கிட்னியை பெற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த வி.பெரியசாமி என்பவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்ப நண்பரான ஈரோட்டை சேர்ந்த சி.கணேசன் என்பவர், தனது கிட்னியை தானம் அளிக்க முன்வந்துள்ளார்.
இதற்காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக் குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில் கணேசனும், பெரியசாமியும்...
இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழவைத்த சம்பவம்: திண்டிவனத்தில் 5 பேர் மீது வழக்கு
admin - 0
திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவத்தில் நகராட்சி தலைவரின் கணவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. திண்டிவனம் நத்தைமேடு பகுதி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் மரூர் ராஜா, குண்டர் சட்டத்தில் கைதான சாராய வியாபாரி. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர்.
இவரது மனைவி ரம்யா, திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்....
மேயர்கள் மாற்றத்துக்கு ஊழல் பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலே காரணம்: பழனிசாமி குற்றச்சாட்டு
admin - 0
ஊழல் பணத்தை பங்கிடுவதில் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலால் கோவை, காஞ்சி, நெல்லை மாவட்ட மேயர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மதுரையில் 3-வது நாளான நேற்று மேற்கு தொகுதியில் உள்ள பழங்காநத் ததில் பேசியதாவது:மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.
அடுத்த...
ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த ஆக.30-ம் தேதி முதல்வர் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் சென்றனர். ஜெர்மனியில் அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அங்குள்ள தூதரக அதிகாரிகள், தமிழர் குடும்பத்தினர் முதல்வரை...
அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியினருடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து 5-ம் தேதி (நாளை) மனம் திறந்து செய்தியாளர்களிடம் பேச உள்ளதாகக் கூறி கட்சியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க நேற்று வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், “நான் சசிகலாவை சந்திக்கவில்லை,”...










