Google search engine
‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’ அமல்படுத்தப்படு வதால் ஏற்கெனவே அமலில் உள்ள தொழிலாளர் நல வாரியங்களும், நலத்திட்டங்களும் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் செயலர் சஞ்சய் திவாரி வெளியிட்ட விளக்கத்தில்...
கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மாத​வி​டாய் விடு​முறைக்கு எதி​ராக வழக்கு நடை​பெற்று வரும் நிலை​யில், அம்​மாநில அரசு பள்​ளி, கல்​லூரி மாணவி​களுக்​கும் மாத​வி​டாய் விடுப்பு வழங்க அரசு முடி​வெடுத்​துள்​ளது. கர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் 18 முதல் 52 வயது வரையி​லான பெண் பணி​யாளர்​களுக்கு மாத​வி​டாய் காலத்​தில் மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன் கூடிய விடு​முறை அளிக்க மாநில‌ அரசு கடந்த நவம்​பர் 20-ம் தேதி உத்​தர​விட்​டது. இதற்கு எதி​ராக...
சென்னை பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்ற 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு கடந்த 10 ஆண்​டு​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வூ​திய நிலு​வைத் தொகை ரூ.95.44 கோடி எப்​போது விடுவிக்​கப்​படும் என்​பது குறித்து தமிழக நிதித் துறை செயலர் ஆஜராகி விளக்​கமளிக்க உயர் நீதி​மன்ற நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் உத்​தர​விட்​டுள்​ளார். சென்னை பல்​கலைக்​கழகத்​தில் மேலாண்மை துறைத் தலை​வ​ராக பணி​யாற்றி 2020-ல் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர்​.தேன்​மொழி ஓய்​வூ​தி​யப் பலன்​களை வழங்க உத்​தர​விடக்கோரி உயர் நீதி​மன்​றத்​தில்...
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தனது ரூ.1.16 கோடி சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கியதை எதிர்த்து காங்​கிரஸ் எம்​.பி. கார்த்தி சிதம்பரம் தாக்​கல் செய்​துள்ள மேல்முறை​யீட்டு மனுவுக்கு அமலாக்​கத்​ துறை 3 வாரங்​களில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2006-ம் ஆண்டு மத்​திய நிதி​யமைச்​ச​ராக ப.சிதம்​பரம் பதவி வகித்​த​போது ஏர்​செல் நிறு​வனத்​தில் வெளி​நாட்டு நிறு​வன​மான மேக்​சிஸ் ரூ.3,500 கோடி வரை முதலீடு செய்ய அந்​நிய முதலீட்டு மேம்​பாட்டு வாரி​யம் அனு​மதி...
அமைச்சர்கள் இரண்டு பேர் தங்கள் பக்கம் வரப்போவதாக ஆளும் கட்சி வட்டாரத்துக்கு பிபீ ஏற்றுவதற்காக சும்மாவாச்சும் அள்ளிவிடுகிறாராம் ஆக் ஷன் ஹீரோ கட்சியின் ‘வில்வித்தை நாயகன்’. ஆனால், ‘கோட்டையன்’ தலைவரை ஈர்த்தது போல் முக்குலத்தோர், முத்தரையர், நாடார், நாயக்கர், பட்டியலினம் என சாதிக்கு ஒருவர் வீதம் மற்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய தலைகளை தங்கள் பக்கம் கொண்டுவர சார்ட் போட்டிருக்கிறதாம் ஆக் ஷன் ஹீரோ கட்சி. அதேசமயம், திருச்சி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில்...
அதிமுக-வில் இணைவதற்காக அமித் ஷா வழியாக கடைசி முயற்சியில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ். இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை மீண்டும் கட்சிக்குள் இணைக்கலாமா என்பது குறித்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பழனிசாமி தனித்தனியே கருத்துக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அ​தி​முக - பாஜக கூட்​ட​ணி​யின் முதலமைச்​சர் வேட்​பாள​ராக பழனி​சாமி அறிவிக்​கப்​பட்​டு​விட்ட நிலை​யில், திமுக கூட்​ட​ணியை வீழ்த்த பலமான கூட்​ட​ணியை உரு​வாக்​கு​வதற்​காக பகீரதப்​பிர​யத்​தனம் செய்து வரு​கிறது பாஜக. அதன்...
கரூரில் கடந்த செப். 27 அன்று தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்​தனர். இதைத் தொடர்ந்து இரு மாதங்​களாக பொதுக்​கூட்​டங்​கள் எதி​லும் அவர் கலந்து கொள்​ள​வில்​லை. வரும் 16-ம் தேதி ஈரோட்​டில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள இருக்​கி​றார். அங்கு பொதுக்​கூட்​டத்​துக்கு இது​வரை​யில் அனு​மதி வழங்​கப்​பட​வில்​லை. இதற்​கிடையே, புதுச்​சேரி உப்​பளம் துறை​முகம் மைதானத்​தில் நேற்று காலை தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பொதுக் கூட்​டம்...
காஞ்​சிபுரம் தொகுதி சட்​டமன்ற உறுப்​பினர் எழிலரசன், திமுக​வின் கொள்கை பரப்புச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார். பாரம்​பரிய​மான திமுக குடும்​பத்​தைச் சேர்ந்​தவர், தமிழக அரசி​யல் நில​வரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’​யிடம் அவர் பேசி​ய​தில் இருந்​து... Q திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்​று​வது தொடர்​பான விவ​காரத்​தில் சர்ச்சை ஏன்? தமிழக அரசு மேற்​கொண்ட நடவடிக்​கை​கள் சரி​யான​தா? A ஏற்​கெனவே என்ன நடை​முறை​கள் உள்​ளதோ, எதைச் செய்​தால் சட்​டம் ஒழுங்கு பிரச்​சனை வராதோ அதை​தான் ஒரு மாநில அரசு...
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்றது. கரூர் சம்பவத்துக்குப் பின் நடக்கும் கூட்டம் என்பதால் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே புதுச்சேரியில் குவிந்தனர். நேற்று அதிகாலை முதலே தொண்டர்கள் உப்பளம் துறைமுக வளாகத்தை நோக்கி வந்தனர். ‘க்யூ ஆர் கோடு’ பாஸ் மூலம் 5 ஆயிரம் பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்திருந்தது....
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கலிங்கராஜபுரத்தில் ரூ.1 கோடியே 77 லட்சத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கம் அமைக்கும் பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று துவங்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு...