சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நிலவும் கடும் குளிரால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இயல்புக்கு மாறான வானிலை காரணமாக கடும் குளிர் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் ஸ்வெட்டர், மஃப்ளர் சகிதமாக காலை, மாலை வேளைகளில் வலம் வருகின்றனர்.
விடுமுறை தினத்தில்கூட குழந்தைகள்...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் கடந்த 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்வார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
சென்னையிலிருந்து மதுரை, கோவை,...
நம் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை மறக்க கூடாது – வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு துணை முதல்வர் அழைப்பு
admin - 0
நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது என்று அயலகத் தமிழர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் “தமிழால் இணைவோம் - தரணியில் உயர்வோம்” என்ற தலைப்பில் 2 நாள் நடைபெறும் அயலகத் தமிழர் தினம்-2026 விழா சென்னையில் நேற்று தொடங்கியது.
இணையவழியில் நடத்திய பேச்சு, ஒப்புவித்தல், மாறுவேடம், கதை சொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 பேருக்கு...
பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இரண்டு நாட்களில் 2.47 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
2,092 பேருந்துகள் இயக்கம்: அந்த வகையில் கடந்த ஜன.9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தினமும் 2,092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கடந்த 9-ம் தேதி கூடுதலாக...
மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இரட்டை வேடம்: திமுக அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
admin - 0
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2019-ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு கோரி போராடிய போது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசாணை 354-ன் படி உரிய ஊதியம் வழங்கப்படும் என்று மருத்துவர்களிடம் அவர் சத்தியம் செய்தார். ஆனால்...
மாநகர காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தலா 105 கொலைகள் நடந்துள்ளன. 2025-ல் இது 93 ஆக குறைந்துள்ளது.
திடீரென உணர்ச்சி வசப்படுதல், தவறான உறவு, பணம் ஏமாற்றியது, இடப்பிரச்சினை, மதுபோதையில் சண்டை போன்ற காரணங்களால் கொலைகள் நிகழ்ந்துள்ளன.
புதிதாக தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகளால் ரவுடி கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டு சென்னையில் வழிப்பறி,...
சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, சைதாப்பேட்டை தொகுதியில் ‘கலைஞர் கணினி கல்வியகம்’ தொடங்கி, தொகுதியில் உள்ள படித்த ஏழை மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்காகப் பல்வேறு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கு கடந்த 5 ஆண்டுகளில் 1,165 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தென்னிந்தியாவில் செயல்படும் 450 ‘டேலி’ மையங்களில்,...
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ‘ஜனநாயகன்’ படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்குவதற் காக, சில குறிப்பிட்ட காட்சிகளை நீக்கும்படி படக்குழுவினருக்கு தணிக்கைத் துறைஅறிவுறுத்தி உள்ளது.
ஆனால், அந்த மாற்றங்களைச் செய்யபடக்குழுவினர் மறுத்து வருவதாகத் தெரிகிறது. இது தணிக்கைத் துறைக்கும் படக்குழுவுக்கும் இடையிலான நடைமுறைச் சிக்கலாகும்.
ஆனால், தேர்தலை மனதில்வைத்து, மக்களை திசை திருப்புவதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு மத்திய அரசுக்கு...
பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்குச்சந்தையில் ரூ.205 கோடி நிதி: சென்னை மாநகராட்சி தகவல்
admin - 0
தேசிய பங்குச் சந்தையில் பசுமை நகராட்சி நிதிப் பத்திரம் வாயிலாக சென்னை மாநகராட்சி ரூ.205.59 கோடி நிதி திரட்டி உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புறநிதிப் பத்திரங்கள் கடந்த ஆண்டு மே மாதம் தேசிய பங்குச்சந்தை பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தனது முதல் பசுமை நகராட்சி நிதிப் பத்திரத்தை ஜன.12-ம் தேதி தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிட...
‘மணக்கும்’ தலைவருக்கு இலைக் கூட்டணியில் ஷேர் இல்லை என எடக்கானவர் மீண்டும் சொல்லிவிட்ட நிலையில், இதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஆக்டர் கட்சியில் அப்ளிகேஷனைப் போட்டுவைத்திருக்கிறாராம் ‘மணக்கும்’ தலைவர்.
ஆனால், யாராவது வந்தால் உள்ளே இழுத்துப் போடலாம் என நினைக்கும் அந்தக் கட்சியிலேயே, “அவரெல்லாம் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. தேவைப்பட்டால் பிப்ரவரியில் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி அன்னாரின் அப்ளிகேஷனை வெயிட்டிங்கில் வைத்துவிட்டார்களாம்.
அதேசமயம், டெல்லி அட்வைஸால் தற்போது மனம்...
