புதிய பிரத்யேக ஆதார் சேவை மையம் சென்னை அண்ணா நகரில் நேற்று திறக்கப்பட்டது. நாளொன்றுக்கு 1000 பேருக்கு இந்த மையம் மூலம் சேவை வழங்கப்படவுள்ளது.
சென்னை அண்ணா நகர் கிழக்கில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன கட்டிடத்தில் புதிதாக ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ்...
கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட யானைகள் புத்துணர்வு முகாமை மீண்டும் தொடங்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது வனவிலங்குகள் ஆர்வலரான முரளிதரன், “கோயில் யானைகளை ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் அழைத்து செல்லப்பட்டு, மற்ற யானைகளுடன் பழகவைத்து, அந்த யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள்,...
இந்த மாத இறுதிக்குள் கூட்டணி அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மகளிர் அணியினருடன் பிரேமலதா இணைந்து பொங்கல் வைத்தார். தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற...
தமிழக அரசின் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், திருவிக விருது முன்னாள் தலைமைச்செயலர் வெ.இறையன்புவுக்கும் அறி விக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருக்குறள் நெறிபரப்புவோருக்கான திருவள்ளுவர் விருது, இந்தாண்டு மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல் கடந்த 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அ.அருள்மொழிக்கும் அண்ணல் அம்பேத்கர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டப்பேரவை குழுத் தலைவர்...
ஆலத்தூர் சிட்கோ வளாகத்தில் கரும்புகை வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் மருந்து நிறுவனத்துக்கு எதிரான புகாரை பரிசீலி்த்து 8 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூர் சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள ‘அன்ஜன் டிரக்ஸ்’ என்ற தனியார் மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதாகவும், அந்த ஆலையி்ல் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர்...
பொங்கல் பண்டிகையையொட்டி, வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜன.28-ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜன.18-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதை நீட்டிக்கக் கோரி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு...
“அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட முதியவர்களின் முகாம் ஆகிறதா தவெக?” புலனாய்வு பத்திரிகை ஒன்றில் வாசகர் ஒருவர் இப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார். உண்மையில் தவெக-வை கட்டமைக்க விஜய்க்கு துணையாக வந்தவர்கள் இப்படியான முகாமைத்தான் இப்போது அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சிக்கு வந்தபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால், மிகக் குறுகிய காலத்திலேயே விசிக-வுக்கு வித்தியாசமான முகத்தைக் கொடுத்தவர் ஆதவ். ஆனால், விசிக-வில் இருந்த விசாலமான சுதந்திரம்...
கிடா விருந்து… கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர்! – நாமக்கல் சீட்டுக்கு முட்டி மோதும் அதிமுக தலைகள்
admin - 0
தேர்தலில் சீட் பிடிக்க பலரும் பலவிதமான உத்திகளை கையில் எடுப்பார்கள். நாமக்கல் அதிமுக-வில், சீட் பிடிப்பதற்காக வாரம் தோறும் கட்சியினருக்கு கறி விருந்து ‘கவனிப்பு’களை நடத்தியும் யார் கேட்டாலும் கோயிலுக்கு நன்கொடைகளை வாரி வழங்கியும் இரண்டு பேர் பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளுக்கும் சேர்த்து அதிமுக-வில் விருப்ப மனு அளித்த 151 பேர் நேர்காணலில் பங்கேற்றார்கள். இதில், நாமக்கல் தொகுதிக்கு மட்டும் 27...
காணும் பொங்கல் பாதுகாப்புப் பணியில் சென்னையில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மெரினாவில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் கடற்கரை, பூங்கா உட்பட பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்வது வழக்கம்.
மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க காவல்...
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் நேற்று 18-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி நீண்ட...
