வாளுக்குப் பதில் வேல்… திமுகவினரையும் திருப்பிவிட்ட பாஜக! – முருகனை தூக்கிப் பிடிக்கும் தமிழக அரசியல் களம்!
admin - 0
அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.
2021-ல் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக சர்ச்சை வெடித்து, அந்த சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியது....
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை நேற்றிரவு குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், அடுத்தடுத்த நாளிலே வெயிலும் அதிகரிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரையில் கூட கடும் வெயில் காணப்பட்டது. குறிப்பாக நேற்று மாலை 5.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 100 முதல் 102...
ஆலத்தூர் சிட்கோ வளாகத்தில் கரும்புகை வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் மருந்து நிறுவனத்துக்கு எதிரான புகாரை பரிசீலி்த்து 8 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூர் சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள ‘அன்ஜன் டிரக்ஸ்’ என்ற தனியார் மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதாகவும், அந்த ஆலையி்ல் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர்...
தமிழகத்துக்கு 4 நாள் பயணமாக 16-வது நிதி ஆணைய குழுவினர் வர உள்ள நிலையில், நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-வது நிதி ஆணையத்தை மத்திய அரசு கடந்த டிசம்பர் 31-ம் தேதி அமைத்தது. இதில், அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியாகாந்தி கோஷ்...
தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்து:
மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: இதில் புதிய விஷயம் ஒன்றும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் மட்டுமின்றி...
குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற இபிஎஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
admin - 0
ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் பொய் சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற பழனிசாமி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என 6 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.
சாத்தான்குளம் சம்பவத்தை இரட்டை படுகொலை என்று...
ஜெய்ப்பூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம்: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி தகவல்
admin - 0
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை திறக்கவிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பிற மாநிலங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படுமா என்று பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில் அளித்து பேசியதாவது: இந்தியா முழுவதும் 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 106 விற்பனை நிலையங்களும், பிற மாநிலங்களில் 44 நிலையங்களும்...
தமிழ்நாடு ‘முதலமைச்சர் கோப்பை -2024’ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘முதலமைச்சர் கோப்பை - 2024’ விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறஉள்ளது.
இதில் 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையுள்ள பொதுப்...
‘ஈரோடு கிழக்கை இழந்தோம்… மொடக்குறிச்சியை மீண்டும் மீட்போம்!’ – ‘உரிமைக்குரல்’ எழுப்பும் காங்கிரஸ்
admin - 0
தமிழகத்தில் தாமரை மலரவே, மலராது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முழங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் 2021-ல் தாமரையை மலரவைத்து தனது செல்வாக்கைக் காட்டியது பாஜக. அப்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பாஜக புதுமுகமான டாக்டர் சரஸ்வதி தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்போது பாஜக-விடம் இருந்து இந்தத் தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ்...
பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் தேவை அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து. இயக்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - மேற்குவங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் -...









