தமிழ்நாட்டிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 62 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “விழுப்புரம் - மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல்...
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத்...
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் 22-ம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவை-அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையன் காய்ச்சல் காரணமாக...
சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில், பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களின் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், மக்கள் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு சமூக முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகத்தில், பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில், பழங்குடியினர் உற்பத்தி பொருட்களின் விற்பனை மையம் தொடங்கப்பட்டுளளது.
இந்த விற்பனை மையத்தில் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள்,...
மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
admin - 0
மின்னுற்பத்தியில் தன்னிறைவு அடைய கடந்த திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.
இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்களை ஏற்க...
தவெக வேட்பாளரான சினோரா அசோக் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சினோரா அசோக்கும் போட்டியிட்டனர்.
இதில் சேகர்பாபு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். முன்னதாக வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 23-ம்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடரும் மின்தடை காரணமாக பொதுமக்கள் அவதி அடைகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் திடிரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மின்சாரம் எப்போது...
காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலியுடன் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இது கரோனா தொற்று பாதிப்பாக இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், உடலில் நீர்ச்சத்து இழப்பு போன்ற பிரச்சினைகளால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக, அரசுமருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், டைபாய்டு, டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் பலர் பாதிக்கப்பட்டு அரசு...
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர், கடந்த ஏப்.9-ம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய அரசு அமைந்துள்ள நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு கடந்த புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் சிறையில் இருந்து...
தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
admin - 0
தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இரு தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது இளம்பெண் ஒருவர், பெண் சமூக ஆர்வலர் மற்றும் உறவினர்கள் சிலருடன் அங்கு சென்று, நீதி வேண்டும் என்ற பதாகை ஏந்தி திருமணத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது....










