Google search engine
 பிஹாரில் இரட்டை இன்ஜின் என்டிஏ அரசு வரும் தேர்தலில் அகற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இதில் இணைந்து கொண்டார். ஆகஸ்ட் 18-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை 28 மாவட்டங்களில் 1,300 கி.மீ....
 தனது தலைமையிலான அரசின் செயல்பாட்டின் மூலம் ஆந்திர மாநிலத்தை ராம ராஜ்ஜியமாக கட்டியெழுப்புவோம் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று அன்னமய்யா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் ஆந்திராவின் எதிர்காலத்தை அழித்தது. மக்கள் நல திட்டங்களை சீர்குலைத்தது, நிதியை முறைகேடாக கையாண்டது, நீர்ப்பாசன திட்டங்களை முடக்கியது. ஆந்திர மாநிலத்தை மீண்டும் கட்டமைப்பது...
ஜெர்​மனி​யின் கொலோன் நகரில் பழம்​பெருமை வாய்ந்த கொலோன் பல்​கலைக்​கழகம் உள்​ளது. இதில் கலை மற்றும் சமூக​வியல் கல்​விப் புலத்​தின் கீழ் இந்​தி​ய​வியல் மற்​றும் தமிழ்க் கல்​விப் பிரிவு கடந்த 1963 முதல் செயல்​பட்டு வந்​தது. இத்துறை நிதிப் பற்​றாக்​குறை​யால் கடந்த வருடம் அக்​டோபர் 30-ம் தேதி​யுடன் மூடப்​பட்​டது. இதற்கு முன்​பும் இந்த தமிழ்ப் பிரிவு, 2 முறை மூடப்​படும் நிலைக்கு தள்​ளப்​பட்​டது. கடைசி​யாக கடந்த 2021 ஜுலை​யில் கிடைத்த நிதி​யால்...
ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற ஒரு கலந்​தாய்வு கூட்​டத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: மத்​திய அரசு தென்​னிந்​தி​யா​வில் உள்ள ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூரு ஆகிய 4 தலைநகரங்​களை இணைக்​கும் வகை​யில் புல்​லட் ரயில் திட்​டத்​துக்கு சர்வே செய்ய உத்​தரவு வழங்கி உள்​ளது. இதன் மூலம் 5 கோடி மக்​கள் பயனடைவர் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கான முதற்​கட்ட ஆய்வுகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கூறி​னார்....
நாடு முழு​வதும் எத்​த​னால் கலந்த பெட்​ரோல் பயன்​பாட்​டுக்கு எதி​ராக வழக்​கறிஞர் அக் ஷய் மல்​ஹோத்ரா உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார். அவர் தனது மனு​வில், “2023-க்கு முன்பு தயாரிக்​கப்​பட்ட கார்​கள் மற்​றும் இரு சக்கர வாக​னங்​கள் மற்​றும் சில பிஎஸ்-6 மாடல் வாக​னங்​கள் அதிக எத்​த​னால் கலந்த எரிபொருள் பயன்​பாட்​டுக்கு ஏற்ற வகை​யில் வடிவ​மைக்​கப்​பட​வில்​லை. பெட்​ரோலில் 20 சதவீதம் எத்​த​னால் கலப்​ப​தால் இயந்​திர தேய்​மானம், எரிபொருள் இழப்பு மற்​றும்...
புதிய குடியேற்ற சட்​டம் நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது. இதன்​படி போலி பாஸ்​போர்ட், போலி விசா மூலம் இந்தியா​வுக்​குள் நுழைந்​தால் 7 ஆண்​டு​கள் சிறை, ரூ.10 லட்​சம் வரை அபராதம் விதிக்​கப்​படும். வெளி​நாட்​டினர் வரு​கையை முறைப்​படுத்த பாஸ்​போர்ட் சட்​டம்,வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம், வெளி​நாட்​டினர் சட்​டம், குடியேற்ற சட்​டம் போன்​றவை அமலில் இருந்​தன. அவை ஒன்​றிணைக்​கப்​பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்​கப்​பட்​டது. இந்த மசோதா கடந்த ஏப்​ரலில் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டு,...
ராஜஸ்தானில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த தொழிலதிபர் வருமான வரித்துறையினரிடம் சிக்கினார். ராஜஸ்தானின் பில்வாராவில் தொழிலதிபராக இருப்பவர் கமலேஷ் ஆச்சார்யா. இவர், தனது நண்பர்களான வழக்கறிஞர்கள் விகாஸ் வியாஸ் மற்றும் தீபக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் கட்சி துவக்கி உள்ளார். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட இக்கட்சியின் பெயர், ‘தேசிய சர்வ சமாஜ் கட்சி’. இதன் பின்னணியில்...
 தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்கள் முன்னிறுத்தப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று( ஆக. 26) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்திற்கு பின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு...
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான...
புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவையே எதிர்காலப் போர்களை...