அணுசக்தி கப்பல், லேசர், ஏஐ ஆயுதங்கள்: பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய அரசின் மிகப் பெரிய திட்டம்
admin - 0
இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும் அடங்கும். காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
அதற்கு பதிலடியாக இந்திய பாதுகாப்பு படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தானின்...
காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-வது நாளாக நேற்றும் நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 34 பக்தர்கள் உயிரிழந்தனர். 20 பேர்...
அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
admin - 0
அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் கர்ரேகுட்டா மலையில் சிஆர்பிஎப். வீரர்கள், சத்தீஸ்கர் மாநில காவல்துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து நடத்திய ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கைக்கு அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில்...
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் பி.ஆர். நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு ‘ஸ்ரீவாரி சேவா டிரைனர்’ எனும் பெயரில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு...
இந்தியா - சிங்கப்பூர் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்தியா வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று அவர் 3-நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று இந்தியா வந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, லாரன்ஸ் வாங் நேற்று சந்தித்து பேசினார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார். அப்போது பசுமை எரிசக்தி, கப்பல்...
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட காசோலை மோசடி வழக்கு ஒன்றில் நீதிபதிகள் அரவிந்த் குமார், சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
காசோலை மோசடி வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகு புகார்தாரருடன் சமரசம் செய்து கொண்டால் சிறை தண்டனையை தவிர்க்கலாம். இரு தரப்பினர் இடையே சமரச ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால், என்ஐ சட்டத்தின் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் விதிக் கப்பட்ட...
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகையில், “ மாநிலத்தின் வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,...
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு
admin - 0
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக எஸ்சிஓ கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
இப்போதைய சூழலுக்கு ஏற்ப ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஐ.நா.வின் ஆட்சி மன்ற அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கையை எஸ்சிஓ...
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜலாலாபாத் அருகில் பூமியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குனார் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கு பெரும்பாலான வீடுகள், மண், பாறைகளை கொண்டு கட்டப்பட்டிருந்ததால், நிலநடுக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அவை இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்...
பிஆர்எஸ் கட்சியிலிருந்து மேலவை உறுப்பினர் கவிதா சஸ்பெண்ட்: மகள் மீது கே.சந்திரசேகர ராவ் ஒழுங்கு நடவடிக்கை
admin - 0
தெலங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணையின் ஒரு தூண் சரிந்ததால், தற்போதைய காங்கிரஸ் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
மேலும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. பிஆர்எஸ் ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணை, அப்போதைய ஆட்சியாளர்களால் கமிஷன் பெறப்பட்டு, தரமின்றி கட்டப்பட்டதாக தற்போதைய காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டி வருவதோடு, இதற்காக சிபிஐ...










