Google search engine
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 12-ம் நாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு தொடர்பு இருந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
அகம​தா​பாத்​ ஏர் இந்​தியா விமான விபத்​து தொழில்​நுட்​பக் கோளாறால் ஏற்​பட​வில்லை. விமானி திட்​ட​மிட்டு இன்ஜினுக்கு செல்​லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்​தியுள்ளார் என்று இத்​தாலிய பத்​திரி​கை​யில் பரபரப்​பான செய்​தி​யொன்று வெளி​யாகி​யுள்​ளது. இதுகுறித்து இத்​தாலி​யின் கொரியர் டெல்லா செரா நாளிதழில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் ஏர் இந்தியா 171 விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இது குறித்து விரி​வான விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அதில், இந்த...
பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்​திய நாடு தழு​விய வேலை நிறுத்​தப் போராட்​டத்​தால் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்​கை​யில் பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. தொழிலா​ளர் விரோத சட்​டங்​களை திரும்​பப் பெற வேண்​டும், மகாத்மா காந்தி கிராமப்​புற வேலை ​வாய்ப்பு உறுதி திட்​டத்தை மீண்​டும் செயல்​படுத்த வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்கைகளை வலி​யுறுத்தி தொழிற்​சங்​கங்​கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்​டம் நடத்​தப் போவ​தாக அறிவித்திருந்​தது. அதன்​படி பல்வேறு தொழிற் சங்​கங்​களின் வேலை...
மக்​களவை​யில் பட்​ஜெட் மீதான விவாதத்​தில் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பதில் உரையாற்றினார். அதைப் பாராட்டி எக்ஸ் தளத்​தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ”நாட்​டின் பொருளா​தார மாற்​றத்​துக்கு இந்தாண்டு பட்​ஜெட் எவ்​வாறு தனது பங்​களிப்பை அளிக்​கும் என்பதை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் விரி​வாக விளக்​கி​னார். விரை​வான சீர்​திருத்​தங்​கள், குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களுக்கு ஆதர​வு, திறன்​மேம்​பாடு, அடுத்த தலை​முறை கட்​டமைபுக்​கான நடவடிக்​கைகள், சுகா​தா​ரத்​துறை மேம்பாட்டுக்கான முயற்​சிகள், கல்வி...
நடாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதால் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செவ்வாய்க் கிழமை நோட்டீஸ் வழங்கின. அதில் சில பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நோட்டீஸ் நிராகரிக்கப் பட்டிருக்கலாம். இருப்பினும், அந்தப் பிழைகளைச் சரி...
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ரயில் கட்டணத்தை தீர்மானிக்கும்போது, சேவைக்கான செலவு, சேவையின் மதிப்பு, வழங்கப்படும் சேவையின் வகை மற்றும் வசதிகள், மக்களின் வாங்கும் திறன் ஆகிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை 82 வழித் தடங்களில் 164 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 300 முதல் 400 கிலோ...
கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”உலகளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிறதுறைகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நேரத்தில், 'டிஜிட்டல் அடிக் ஷன்' பிரச்சினைக்கு தீவிர ஆய்வு மற்றும் தேவைப்பட்டால், சட்டமன்ற நடவடிக்கைகள் தேவையா என்பதை ஆராய வேண்டியுள்ளது. கல்வித் துறைக்கு தொடர்ந்து வரும் புகார்கள் மற்றும் சில சம்பவங்கள், இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காட்டுகின்றன....
மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லாவை காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் திட்​டிய​தாக​ நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறி​னார். மக்​களவை​யில் கடந்த 2ம் தேதி, முன்​னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே​வின் வெளி​யிடப்​ப​டாத நூலின் பகு​தி​களை அடிப்படை​யாக கொண்ட ஒரு கட்​டுரை பற்றி பேச காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்​திக்கு சபா​நாயகர் அனு​மதி மறுத்​தார். அப்போது முதல், மக்​களவை​யில் அமளி ஏற்​பட்டு வரு​கிறது. எதிர்க்​கட்​சிகளின் அமளி காரண​மாக பிப்​ர​வரி 4ம் தேதி, குடியரசுத...
இந்​திய விமானப்​படை 2 ஆண்​டு​களுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் பிரம்​மாண்ட போர் பயிற்​சியை பொக்ரானில் நிகழ்த்​து​வது வழக்​கம். இந்​தாண்டு வாயு சக்தி போர் பயிற்சி வரும் 27ம் தேதி நடை​பெறவுள்​ளது. இது குறித்து விமானப்​படை துணைத் தளபதி ஏர் மார்​ஷல் நாகேஷ் கபூர் கூறிய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, விமானப்​படை வெற்​றிகர​மாக பங்​காற்​றியது குறித்து இந்த பயிற்சியின்போது விளக்​கப்​படும். இந்த போர் பயிற்சி பாகிஸ்​தான் எல்​லைக்கு...
குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்மானம் மீது மக்​களவை​யில் பிரதமர் மோடி ஆற்ற வேண்​டிய உரை ரத்து செய்​யப்​பட்​டது. இது குறித்து விளக்​கம் அளித்த சபா​நாயகர் ஓம் பிர்​லா, "காங்கிரஸ் பெண் எம்​.பி.க்​கள் சிலர் பிரதமர் இருக்கை அருகே நின்று தகாத செயல்​களில் ஈடு​படக் கூடும் என தகவல் கிடைத்ததால், அவைக்கு வரவேண்​டாம் என பிரதமரை கேட்​டுக்​கொண்​டேன்" என்றார். இதுகுறித்து சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்​கு, ஜோதி மணி உள்ளிட்ட காங்​கிரஸ்...