சூப்பர் ஹீரோக்களை விட அனுமன், அர்ஜுனன், கர்ணன் போன்றோர் சக்தி வாய்ந்தவர்கள்: சந்திரபாபு நாயுடு அறிவுரை
admin - 0
திருப்பதியில் உள்ள மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக வளாகத்தில் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள பாரதிய அறிவியல் சம்மேளனத்தை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மற்றும் ஆர் எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது: நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் குறித்து நம் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே நாம் சொல்லி கொடுக்க...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதல் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: பணிவு, நேர்மை, புத்திகூர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் மன்மோகன் சிங். நாட்டின் பொருளாதாரப் பாதையை மறுவடிவமைத்து பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தியவர். கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டவர்.
மன்மோகன் சிங்கின் தொலைநோக்கு பார்வையின் கீ்ழ் நாங்கள் ஒரு வலிமையான இந்தியாவை...
அசாம் மாநிலத்தின் பழங்குடியினத்தவர் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பிஹார் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பழங்குடியினத்தவர்கள் கோரி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சில நாட்களுக்கு முன்னர் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், ரபா, மைசிங், திவா ஆகிய 3 பழங்குடியினத்தவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் ஒருவரை நியமிப்பதாக அமித் ஷா உறுதி அளித்தார். இதற்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மேயராக பாஜக.வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் நேற்று பதவியேற்றார்.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜக 50 இடங்களை கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 29, காங்கிரஸ் கூட்டணிக்கு 19 வார்டுகள் கிடைத்தன. 2 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று உள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கூட்டணியின்...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் 100 அடல் உணவகங்களை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தினமும் இரண்டு வேளை உணவு கிடைக்க போராடும் மக்களுக்கு திருப்தியான உணவு பத்தில் ஒரு பங்கு விலையில் கிடைத்தால் எப்படி சந்தோஷப்படுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். டெல்லி அரசு தற்போது அந்த கனவை நனவாக்கியுள்ளது.
அடல் உணவகங்கள் ஒரு நாளைக்கு 2...
மத்திய பிரதேசத்தில் 92,071 அரசு பள்ளிகள் உள்ளன. 3.93 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) ஆசிரியர்கள் ஈடுபடுவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிக்கல் எழுந்துள்ளது.
அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள கேதா மாதோபூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 55 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளியில் இரு...
டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பிரார்த்தனையில் பங்கேற்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் ஒன்றிணைந்து இவ்விழாவைக் கொண்டாடினர். இதையொட்டி, டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று காலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவ...
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் நேற்று அதிகாலை ஆம்னி பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இதில் 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். பலர் தீக்காயம் அடைந்தனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து கோகர்ணத்துக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் சென்று...
திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்ட பாக். பெண்ணுக்கு வாஜ்பாய் பதில் – சம்பவத்தை நினைவுகூர்ந்த ராஜ்நாத் சிங்
admin - 0
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு பிறந்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவருடைய 101-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த நாளை, ‘சிறந்த நிர்வாக தினம்’ என்று மத்திய அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. சிறந்த அரசியல் தலைவரான வாஜ்பாய், கவிஞராகவும் இருந்தார். அவருடைய நினைவாக...
”டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுகட்டமைக்கு இந்தியா உதவும்” என்று பிரதமர் ஹரிணி அமரசூர்யாவை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
டிட்வா புயலால் இலங்கை பெரிதும் சேதம் அடைந்துள்ளது. ஏராளமான சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், ஏற்கெனவே இந்தியா மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.
தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை வந்துள்ளார்....
