Google search engine
கடந்த 2024-ம் ஆண்டில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது தவறவிட்ட பொருட்களை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) உரிய விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது தவறவிட்ட பயணிகளின் உடமைகள் உரிய விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.40.74 லட்சம் ரொக்கம், 89 லேப்டாப், 193 செல்போன்கள், 40 வாட்ச், 9 மங்கள்சூத்ரா எனப்படும்...
வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள், மரங்களைத் தூக்கிச் செல்லும் தொழிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் பழக்கப்பட்ட யானைகள், வெட்டப்படும் மரங்களை தூக்கிச் செல்லும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள் அண்மையில் மீட்கப்பட்டன. வன்தாரா மீட்பு மையத் திட்டமானது, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின்...
அரசு பணியை உதறிவிட்டு மாவோயிஸ்ட் தலைவராக உருவான சலபதியின் வீழ்ச்சி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் - ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 27 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதில் தமிழகம் - ஆந்திர எல்லையில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம் ரெட்டி என்கிற சலபதியும் (60), கொல்லப்பட்டார். அரசு பணியை உதறிவிட்டு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய...
பாஜக அரசின் வரி தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர், குழந்தை பெற்றுக் கொள்ளக் கூட தயங்குகின்றனர் என ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப் பேரவை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால், சமூகத்தில் அதிகம் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளை எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தகவலில் கூறியிருப்பதாவது: சில தேர்தல் வாக்குறுதிகள்,...
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாடு உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கு எளிதில் விசா கிடைக்கச் செய்வதிலும் இந்தியா ஆர்வமாக உள்ளது. கடந்தாண்டில் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் 118 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இந்நிலையில், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கும் அதேபோல் வரி...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான என்எல்பி சர்வீசஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளா 1.2 மில்லியன் அதாவது 12 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்த தற்காலிக வேலைவாய்ப்புகள் நாட்டின்...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உலகளவில் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த கும்பமேளாவில் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில்...
இந்தியாவுக்கு எதிராக போர் என கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது பிஹார்வாசி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் கடந்த 15-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்” என்றார். இதற்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள...
ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து குவாஹாட்டி ரயில் நிலையத்தில் அப்பெண்ணுக்கு ரயில்வே மருத்துவர்கள், ஆர்பிஎப் பெண் காவலர்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. இதுகுறித்து வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே செய்தித் தொடர்பாளர் கபின்ஜல் கிஷோர் சர்மா நேற்று கூறியதாவது: திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து ராணி கமலாபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பணி பெண் ஒருவர் திங்கட்கிழமை பயணம் செய்தார். பிஹார் மாநிலத்தின் பிரவ்னிக்கு...
டெல்லியில் மழலையர் கல்வி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் முக்கிய கட்சிகளான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்றும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன, பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. பாஜக தனது...