Google search engine
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பதவி அளிக்கப்பட உள்ளது. கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பிஜேஒய்எம்) தேசிய தலைவராக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. கர்நாடகா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை (40). தனது பணியில் 'கர்நாடகா சிங்கம்’ என பெயரும் பெற்றிருந்தார். கடந்த 2017-ல் திடீரென பாஜகவில் இணைந்தவருக்கு எவரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல்...
திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதாக கூறிய கருணாகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி எஸ்.பி.யிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசாலையில் கடந்த 3 மாதங்களில் உடல்நலம் குன்றியும், சரிவர தீவனம் வழங்கப்படாமலும் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் கன்றுகள் இறந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர்...
சொந்த மண்​ணிலேயே நாங்​கள் அகதி​களாக மாறி வசிக்க வேண்​டிய நிலை வந்​து​விட்​டது என்று முர்​ஷி​தா​பாத் நகரத்​தில் வசிக்​கும் பெண்​கள் முறை​யிட்டு வரு​கின்​றனர். வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து மேற்கு வங்க மாநிலத்​தின் பல்​வேறு இடங்​களில் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் முர்​ஷி​தா​பாத்​தில் கடந்த வாரம் நடந்த போராட்​டம், வன்​முறைச் சம்​பவங்​களில் முடிந்​தது. இந்த வன்​முறைச் சம்​பவங்​களில் 3 பேர் உயி​ரிழந்​தனர். வன்​முறைச் நிகழ்ந்தபோது வீட்​டின் உள்ளே ஒளிந்து இருந்த...
சகோதரர்கள் இருவரும் பைக்கின் பின்புறம் ஒரு கோழிக்கூண்டுக்குள் அமர்ந்து தந்தையுடன் ஜாலியாக பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒரு தந்தை பைக் ஓட்டி செல்கிறார். அந்த பைக்கின் பின்புறம் கோழிக்கூண்டுக்குள் தனது இரு மகன்களையும் உட்கார வைத்துக்கொண்டு அழைத்து செல்கிறார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் 33 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ ஹைதராபாத் நாகோல் அருகே உள்ள பண்ட்ல கூடா எனும்...
குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் காணாமல் போனால், அதன் உரிமத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நாட்டில் குழந்தை கடத்தல் சம்பவம் அதிகளவில் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரத்தின்படி, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 2000 குழந்தை கடத்தல் வழக்குகள் பதிவாகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் தெலங்கானா,...
முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவின் ஹிசார் விமான நிலையத்தில் புதிய முனையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். அம்பேத்கரின் பிறந்த நாளில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் பேசியதாவது: பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என...
குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது....
இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர். இதுகுறித்து அதி​காரி ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் மோகன் கார்​டன், உத்​தம் நகர் பகு​தி​களில் போலீ​ஸார் மேற்​கொண்ட அதிரடி சோதனை​யில் விசா காலத்​துக்கு பிறகும் இந்​தி​யா​வில் தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினர் சிக்​கினர். இவர்​களில் 12 பேர் நைஜீரி​யா​வை​யும் இரு​வர் வங்​கதேசத்​தை​யும் ஒரு​வர் ஐவரி கோஸ்ட் நாட்​டை​யும் சேர்ந்​தவர்​கள்.சரி​பார்ப்​புக்கு பிறகு இவர்​களை நாடு கடத்த வெளி​நாட்​டினருக்​கான பிராந்​திய பதிவு...
குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ்...
தடை செய்​யப்​பட்ட ஐக்​கிய தேசிய விடு​தலை முன்​னணி (யுஎன்​எல்​எப்) அமைப்பை சேர்ந்த 2 தீவிர​வா​தி​களை மணிப்​பூர் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். கிழக்கு இம்​பால் மாவட்​டத்​தின் வெவ்​வேறு இடத்​திலிருந்து இவர்​கள் ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்​யப்​பட்​டனர். இதுதொடர்​பாக போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: அச்​சுறுத்தி பணம் பறிக்​கும் செயலில் ஈடு​பட்டு வந்த யுஎன்​எல்​எப் தீவிர​வாதி ஒரு​வர் கிழக்கு இம்​பால் மாவட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டார். அவரிட​மிருந்து ஒரு துப்​பாக்கி மற்​றும் தோட்​டாக்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதையடுத்து...