Google search engine
நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு தாதா சாகேப் விருதை அறிவித்துள்ளது. இந்த விருது நாளை நடக்கும் 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்பட இருக்கிறது. மோகன்லாலுக்கு விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால், இந்த விருதை மலையாள சினிமாவுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “இது பெருமையான தருணம். இதை நான் தனியாக அனுபவிக்க முடியாது. பார்வையாளர்களுடனும்,...
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில், ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் நடித்து வரும் படம், ‘வரவு’. ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூணாறு அருகே நடந்து வந்தது. ஜீப் ஓட்டிச் செல்வது போன்ற காட்சியை நேற்று முன்தினம் படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக ஜீப் திடீரென கவிழ்ந்தது. இதில் நடிகர்கள் ஜோஜுஜார்ஜ், தீபக் பரம்போல், ஸ்டன்ட் நடிகர் ஆகியோர் லேசான...
அறுபத்து மூன்று நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள். அவர்களில் மூத்தவர், காரைக்கால் அம்மையார். சிறந்த சிவபக்தரான அவரைப் பற்றிய புராணக்கதையை மையப்படுத்தி உருவான படம், ‘காரைக்கால் அம்மையார்’. சி.வி.ராமன் தனது கந்தன் கம்பெனி சார்பில் தயாரித்து இயக்கிய படம் இது. பாபநாசம் சிவன் இசை அமைத்தார். வி.ஏ.செல்லப்பா, பி.சரஸ்வதி, கே.சாரங்கபாணி, கே.ஆர்.செல்லம், காளி என்.ரத்தினம், டி.எஸ்.ஜெயா, ‘பேபி’ கல்யாணி, சாந்தா தேவி, டி.எஸ்.துரைராஜ், கொளத்து மணி, மாதவன், ராமையா சாஸ்திரி,...
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்தது. இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டாம் என அவ்வமைப்பு அறிவித்தது. இதை எதிர்த்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில்...
முஹம்மது நபிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம், ‘மீலாதுன் நபி’. சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது இதன் பாடல்கள், திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்துள்ளார். இது முற்றிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஆவணத் திரைப்படம் ஆகும். படம் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான மில்லத் அகமது கூறும்போது, “திருக்குர்ஆன், ஹதிஸ் ஆகியவற்றின் ஆதாரத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணாவர்கள், இளையர்கள், நபிகளின் வாழ்க்கையைப் பற்றி அறிய...
யானையை மையமாகக் கொண்டு பிரபுசாலமன் இயக்கிய படம், ‘கும்கி’. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ‘கும்கி 2’ படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மதி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவுசெய்துள்ள இந்தப் படத்தை பென்...
நடிகர் சித்தார்த், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘அன்அக்கஸ்டம்டு எர்த்’ (Unaccustomed Earth) என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இதில், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஃபிரீடா பிண்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமெரிக்க எழுத்தாளரான ஜும்பா லஹிரியின் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது. 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமான்டிக் கதை, கலாச்சார ரீதியிலான தொடராகவும் அமையும். இந்திய-அமெரிக்கச் சமூகத்துக்குள் அமைக்கப்பட்ட...
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக். 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்ட இவ்விழாவில் தனுஷ் பேசும்போது கூறியதாவது: ‘அதென்ன இட்லி கடை?...
நாட்டார் கதை பின்னணியில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் 'தி டார்க் ஹெவன்' . இதை பாலாஜி தயாரித்து இயக்குகிறார். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முதலில் நகுல் ஹீரோவாக நடித்தார். இப்போது அவரை மாற்றியுள்ளனர். இதுபற்றி இயக்குநர் பாலாஜி கூறும்போது, ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் போலீஸ்காரரைப் பற்றிய கதை. இதில் நாயகனாக நகுல் தேர்வு செய்யப்பட்டு...
பானுமதி ராமகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகையாக, இயக்குநராக, பாடகியாக, வசனகர்த்தாவாக, படத்தயாரிப்பாளராக பன்முக ஆற்றல் கொண்ட ஆளுமையாக, தென்னிந்திய திரை உலகில் முத்திரை பதித்தவர். ஆனாலும் அவர் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பது வெகுசிலரே அறிந்த செய்தி. நடிப்பதை விட எழுதுவதுதான் அவருக்குப் பிடித்தமானது. இதை அவரே சொல்லி இருக்கிறார். “படப்பிடிப்பு இடைவேளைகளில் எனக்கும் என் மாமியாருக்கும் நடந்த வேடிக்கையான சின்னச் சின்ன சண்டைகளை பேனா சித்திரங்களாக டைரி பூராவும் எழுதி...