Google search engine

கிள்ளியூர்: அதிமுக நிர்வாகி காங்கிரசில் இணைந்தார்

கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை தலைவர் ஜோயல் சிங், ஜஸ்டின் ராஜ், ஷீஜா, திவ்யா, சந்தோஷ், ஜெயசிங், ராஜ் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியில்...

புத்தேரியில் 4 வழிச்சாலையில் 1 டன் இரும்பு கம்பிகள் திருட்டு

நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தளவாடப் பொருட்கள்...

இரணியல்: ரவுடி கொலை: அண்ணன் போலீசில் சரண்

இரணியல் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால் (54) சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில், அவரது அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) மனைவியிடம் ராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கோபாலகிருஷ்ணன் கைத்தடியால்...

திற்பரப்பு: அருவியில் நேற்று பிற்பகல் முதல்பயணிகளுக்கு அனுமதி

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு 10 நாட்களாக குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாளானதால் ஏராளமானோர் குவிந்தனர். நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் பிற்பகல் முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நித்திரவிளை: மரம் ஏறும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான பேபி என்ற தென்னை மரம் ஏறும் தொழிலாளி, நேற்று தென்னை மரத்தில் ஏறி ஓலையை வெட்டிக் கொண்டிருந்தபோது, ஓலை மின்கம்பி மீது விழுந்தது. அதை எடுத்தபோது மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார். குழித்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட...

தேங்காப்பட்டணம்: வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

தேங்காய்பட்டணம் அருகே அம்சி பகுதியைச் சேர்ந்த 43 வயதான கெப்சின், குடும்பப் பிரச்சனை காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்ற நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் அவரது வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக உறவினர்களால் கண்டறியப்பட்டார்....

இறச்சகுளத்தில் விபத்துக்குள்ளான டாரஸ் லாரி

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் வழியாக கனிமங்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று நேற்று தனியார் கல்லூரிக்குச் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளக்கரை புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை அங்கிருந்து அகற்ற முடியவில்லை. மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி அகற்றப்பட்டது. இந்த விபத்தால், அப்பகுதியில்...

நாகர்கோவிலில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சஜ்ஜார் ஜாஹீர் (49), தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து...

குருந்தன்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி

குளச்சல், குருந்தன்கோடு பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் தொடங்கி வைத்த விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன....

குமரி அருகே பாறைப்பொடி கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் நான்கு வழிச்சாலை பகுதியில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பாறைப்பொடி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் லாரியை பறிமுதல் செய்து,...