நாகர்கோவிலில் புகையிலை விற்ற 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் நேற்று டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு டீ கடையில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடை உரிமையாளரான...
பேச்சிப்பாறை: அலெக்சாண்டர் மிஞ்சின் நினைவிடத்தில் மரியாதை
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையை கட்டிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இன்ஜினியர் அலெக்சாண்டர் மிஞ்சின் முதன்மை செயற்பொறியாளராக பணியாற்றினார். அணையை சிறப்பாக கட்டியதால் அவர் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர். இவர் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மலேரியா காய்ச்சல் காரணமாக இறந்தார். இவர் நினைவிடம் பேச்சிபாறை...
புதுக்கடை: கம்பியில் மோதி வாலிபர் உயிரிழப்பு
புதுக்கடை அருகே கீழ்குளம், சுனவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்து ராஜ் மகன் கெபீஸ் ராயல் (20). பிளஸ் 2 வரை படித்த இவர் ஒலி ஒளி நிலையம் ஒன்றில் கூலிக்கு வேலை பார்க்கிறார்.
நேற்று (7-ம் தேதி) இரவு நண்பர் ஒருவரின் பைக்கில் மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று...
குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் நீதி கேட்டு வந்த பெண்
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை பகுதியை சேர்ந்த ஜெபியா என்ற பெண், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் பலமுறை மனு கொடுத்த பின்பும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு கேட்டு தனது மாற்றுதிறனாளி மகனுடன் குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்...
நாகர்கோவில்: வீட்டிற்குள் புகுந்த வடமாநில வாலிபருக்கு அடி உதை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. நேற்று (30) வயதுடைய வாலிபர் ஒருவர் அங்குள்ள வீட்டின் சுவர் ஏறி குதித்துள்ளார். இதனை கவனித்த சிலர் திருடன், திருடன் என சத்தம் போட்டப்படி அவரை பிடிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட வாலிபர், அங்கிருந்து...
கருங்கல்: ஆசிரியை வீட்டில் கொள்ளை; 2 பேருக்கு சிறை
கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியை சேர்ந்தவர் சுனில் சுதர்லின் பாபு மனைவி கிறிஸ்டி நிர்மல் ஜாய் (40) இவர் அரசு பள்ளி ஆசிரியை. கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு கிறிஸ்டி பாலப்பள்ளத்தில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட...
மண்டைக்காடு: குண்டு வீச்சு வழக்கு 2 பேர் கைது
மண்டைக்காடு அடுத்த கருமன்கூடல் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (57). கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அதிகாலை பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு வளாகத்தில் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது.
...
நித்திரவிளை: விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் மரணம்
நித்திரவிளை அருகே தெருவு முக்கு பகுதியை சேர்ந்தவர் மாதவன்பிள்ளை மகன் மனு (27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தூத்தூரை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (4-ம் தேதி) ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது...
நாகர்கோவிலில் 8 ஆட்டோக்கள் அடித்து உடைத்து சேதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் ஏராளமான ஆட்டோக்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இரவு நேரங்களிலும் அங்கு ஆட்டோக்கள் நிற்கும். நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் சுமார் 10 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. நேற்று காலையில் ஆட்டோ டிரைவர்கள் அங்கு வந்தபோது, 8 ஆட்டோக்களை மர்மநபர்கள்...
கொல்லங்கோடு: கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் நேற்று (6-ம் தேதி) இரவு மேடவிளாகம் மகளிர் மீனவர் கூட்டுறவு சங்க கட்டிடம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு வாலிபர்கள் நின்றனர். போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம்...












