Google search engine

பைங்குளம் நூலக வாசகர் வட்ட கூட்டம்

புதுக்கடை அருகே பைங்குளம் அரசு முழு நேர நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நூலகர் துளசி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் சஜீவ், சனல் கருத்துரையாற்றினர். சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியேற்றுவது மற்றும் நூலக வார விழாவை சிறப்பாக கொண்டாடுவது என...

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று இரவு தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு இளைஞர்கள் பயணிகளிடமிருந்து செல்போனை திருடியுள்ளனர். செல்போன் திருடிய இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்...

மணிப்பூரில் மின்சாரம் தாக்கி திருவிதாங்கோடு ராணுவ வீரர் உயிரிழப்பு

மணிப்பூரில் ராணுவ முகாமில் தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த வைகுந்த் (28) என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நேற்று...

நாகர்கோவில்: பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுடன் தீயணைப்புத் துறையினர் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் இன்று (அக். 24)நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடை வியாபாரிகள் பட்டாசுகளை எவ்வாறு வைத்து விற்பனை செய்ய வேண்டும், விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வசதிகள் எவ்வாறு...

புதுக்கடை: வீடு புகுந்து மின் சாதனங்கள் திருட்டு; ஒருவர் கைது

புதுக்கடை அருகே கிள்ளியூர், பருத்தித்காட்டு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெர்சன் மனைவி பெமி (36). ஜெர்சன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஊரில் புதிய வீட்டு வேலை நடந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் புதிய வீட்டில் வைத்திருந்த மின் வயர்கள் மற்றும்...

குழித்துறை: தடுப்பணையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் குழித்துறை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மீது வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.  இதனால் கடந்த ஒரு மாதமாக தடுப்பணை...

கருங்கல்: கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை – கைது

கருங்கல் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாம் டேனியல் ராஜ் (37). கொத்தனார். இவரிடம் இருந்து பாலூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார், சுரேஷ்குமார் (33) என்பவர் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க சாம் டேனியல்...

கொல்லங்கோடு: கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கொல்லங்கோடு, பாலவிளையைச் சேர்ந்த அபிஜித் (19), தான் காதலித்த பெண் செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவட்டார்: வெள்ளாங்கோடு சாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட பாரதப் பள்ளி மற்றும் வெள்ளாங்கோடு பகுதிகளை இணைக்கும் 15 ஆண்டுகளாக பழுதடைந்திருந்த சாலை, அமைச்சர் மனோ தங்கராஜ் ஜூன் மாதம் பணியைத் துவக்கி வைத்த நிலையில், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பெனி லா ரமேஷ் சாலையை திறந்து வைத்தார். இதனால்...

புதுக்கடை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குன்னத்தூர், மாத்திவிளையைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கோகுல் குமார் (28) என்பவர், தனது வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுவிளை பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று மாலை 7 மணி அளவில்...