Google search engine

வடிவீஸ்வரத்தில் மனைவியை தாக்கிய கணவன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் பாபு, இவர் மனைவி மஞ்சு(26). இவர்களிடையே குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் மனைவி மஞ்சுவை பாபு ஆபாசமாக பேசி, காலால் வயிற்றில் மிதித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மஞ்சு கொடுத்த புகாரின் பேரில்,...

குமரி: தங்கம் விலை உயர்வுக்கு அறிவிப்பு இல்லை – பிரேமலதா

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் நடைபெற்ற பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சி தனித்து போட்டியிடாது என்றும், நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி போன்றது என்றும், அதில் தங்கம்,...

குமரியில் கடந்த 15 நாட்களில் கஞ்சா விற்றதாக 19 பேர் கைது

குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு கிராமப் பகுதியிலும் ஊர்காவல் கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டு பலரும்...

கன்னியாகுமரி: தவெக மீது காதல்.. திமுகவுடன் கல்யாணம் – நாஞ்சில் சம்பத்

கன்னியாகுமரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான அரசியல் தேவை என்றும், அதை நிறைவேற்ற வந்தவர்கள் தோற்றுவிட்டதாகவும் கூறினார். விஜய்யின் வருகை இந்திய அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும், ஆனால் திமுகவை...

கொல்லங்கோட்டில்  மதுவிற்ற 2 பேர் கைது 52 பாட்டில் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே புஷ்பகிரி, கரிமரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து புஷ்பகிரி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சந்திரன் (71) என்பவரை பிடித்து  விற்பனைக்காக...

நாகர்கோவிலில் போக்குவரத்து விதியை மீறிய சிற்றுந்துகள் பறிமுதல்

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் கோட்டார் ரெயில் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ் நின்றுகொண்டிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அந்த மினிபஸ் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.  அப்போது அந்த மினிபஸ்...

நாகர்கோவிலில் தவெகவினர் பயிற்சி பட்டறை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற தவெக பயிற்சிப் பட்டறையில், மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துக்கிருஷ்ணன் பேசுகையில், தவெகவினர் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், விஜயை முதலமைச்சராக வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட...

நாகர்கோவில்: வீட்டின் பூட்டை உடைத்து ரூ .11 லட்சம் நகை கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளையை சேர்ந்தவர் நூர்ஜகான் இவரது மகள் வெளிநாட்டில் இருந்து வருகிறார். இவர் மகளை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றார். கடந்த 2ம் தேதி, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போனநிலையில், வெளிநாடு சென்றவர் திரும்பி வந்தவர், வீட்டில் 11 லட்சம்...

நித்திரவிளை: கார் பைக் மோதல்; வாலிபர் காயம்

தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அகமது கோயா தாங்கள் (39) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது சொகுசு காரில் நம்பாளி வடக்கு விளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நித்திரவிளையை சேர்ந்த லெனின் (19) என்பவர் வந்த பைக்...

நாகர்கோவிலில் உலக சாதனை சிலம்பாட்ட போட்டி

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை இணைந்து பழவிளை காமராஜர் கல்லூரி மைதானத்தில் நேற்று 600க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவமாணவிகள் கலந்து கொண்ட சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிலத்தடிநீரை பாதிக்கும் சீமைக்கருவேலம் மரம், ஆகாயத்தாமரை, உள்ளிச்செடி போன்றவற்றை அளிக்கும் விதமாக...