நாகர்கோவிலில் சி. ஐ. டி. யு. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0
58

அரசு போக்குவரத்து கழக சி. ஐ. டி. யு. தொழிற்சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சம்பள ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும், 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தனியார் ஒப்பந்த முறையில் பஸ்கள் மற்றும் தொழிலாளர் நியமன நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு துணை பொது செயலாளர் மனோஜ் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்றோர் நல அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜ், டிக்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here