கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் நேற்று இரவு பெய்த கனமழையால் டென்னிசன் சாலை, கிருஷ்ணன் கோவில், கிறிஸ்து நகர் மற்றும் டெரிக் சந்திப்பு ஆகிய பகுதிகளில் மழை நீர் ஓடைகளில் கழிவுப் பொருட்களால் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், மேயர் மகேஷ் அப்பகுதிகளில் பார்வையிட்டு தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.